Just In
- 2 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 2 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 3 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 4 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
செல்ஃபீ எடுத்ததற்கு ரூ.7,500 அபராதம்! வழக்கு பதிவையும் பரிசாக வழங்கிய காவல்துறை! காரணத்தை கேட்ட மிரண்டுடுவீங்க
செல்ஃபீ எடுத்ததற்காக இளைஞர்கள் சிலருக்கு போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.
செல்ஃபீ எடுத்ததற்காக இளைஞர்கள் சிலர்மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலம், ஃபிரோசாபாத் எனும் பகுதியிலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவர்களுக்கு ரூ. 7,500க்கான அபராத செல்லாணையும் வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அபராத சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. செல்ஃபீ எடுப்பது என்பது மிகவும் சாதாரண ஒன்று. இதற்கு இந்த உச்சபட்ச அபராதமா?, என்ற கேள்வியை அனைவரின் மனத்தில் தோற்றுவித்துள்ளது. ஆனால், போலீஸார் அபராதத்தை வழங்கியதற்கு செல்ஃபீ எடுத்தது மட்டுமே காரணமல்ல. மற்றுமொரு காரணமும் இருக்கின்றது.
இளைஞர்கள் இணையத்தில் டிரெண்டாக வேண்டும் என்பதற்காக ஓடும் காரின் பேனட்டின் மீது அமர்ந்து செல்ஃபீ எடுத்திருக்கின்றனர். இந்த ஆபத்தான விதிமீறல் செயலுக்காகவே உபி காவல்துறை அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கின்றது.
இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி பொது சாலையில் வாகனங்கள் சார்ந்து ஸ்டண்ட் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த விதிமீறலில் ஈடுபட்டதற்காகவே இளைஞர்கள் மீது போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இதுபோன்ற விதிமீறல் செயல்களைக் குறைக்க வேண்டும் என்பதற்காக போலீஸார் மிக கடுமையான கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், காவல்துறையின் கழுகு பார்வையில் மண்ணைத் தூவிவிட்டு சாகசம் மற்றும் ரேஸ் போன்ற விதிமீறல் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்காக காவல்துறையிடம் சிக்கி கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாகுகின்றனர். இதுபோன்று என்னதான் கெடுபிடி அதிகமாக இருந்தாலும் விதிமீறல் ஆசாமிகளின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் நீண்டுக் கொண்டே இருக்கின்றது.
Image Courtesy: Sakshya News
இந்த நிலையிலேயே சமூக வலைதளத்தில் வைரலாகிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு மூன்று இளைஞர்கள்மீது உபி போலீஸார் கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர். ஸ்டண்ட் செய்ய பயன்படுத்திய காரையும் காவல்துறை பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்துடன், இளைஞர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் ஐபிசி பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. கல்லூரிக்கு செல்லும் வழியிலேயே காரின் பேனட் மீது அமர்ந்து இளைஞர்கள் செல்ஃபீ எடுத்திருக்கின்றனர். ஒரு இளைஞர் காரை இயக்கிக் கொண்டிருக்க, மற்ற இரு இளைஞர்கள் காரின் பேனட்மீது அமர்ந்து வீடியோவிற்கு போஸ் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
இதுகுறித்த வீடியோ இணையத்தில் அதி-வேகமான வைரலாகியது. இதனைத் தொடர்ந்தே போலீஸார் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர். இளைஞர்கள் ஸ்டண்ட் செய்ய பயன்படுத்தியது மாருதி சுசுகி எர்டிகா காராகும். இது ஓர் எம்பிவி ரக கார். இந்தியாவில் இக்கார் ரூ. 7.69 லட்சம் எனும் ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த விலையுயர்ந்த காரையே போலீஸாரிடத்தில் இளைஞர்கள் பறிகொடுத்திருக்கின்றனர்.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!