ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு மீண்டும் புக்கிங் துவக்கம்!
ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு இந்தியாவில் மீண்டும் துவங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. முதல் லாட்டில் 1,000 யூனிட்டுகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அனைத்து கார்களும் விற்று தீர்ந்தது.

இதனால், கடந்த செம்படம்பர் மாதம் ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு இந்தியாவில் மீண்டும் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதாக டீம் பிஎச்பி தள செய்தி தெரிவிக்கிறது.

இரண்டாவது லாட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் கார்களுக்கு புக்கிங் ஏற்கப்பட்டு வருவதாகவும், வரும் ஏப்ரல் மாதம் முதல் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இரண்டாவது லாட்டில் வர இருக்கும் டி ராக் எஸ்யூவிக்கும் முன்பதிவு முடிந்து விட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. எனினும், புக்கிங் அதிக அளவில் இருந்தால் அடுத்து ஒரு லாட்டில் டி ராக் எஸ்யூவியை கொண்டு வருவது குறித்தும் பரிசீலனை செய்ய ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது. ஆனால், மொத்தமாகவே 2,500 யூனிட்டுகள் மட்டுமே இந்த முறையில் கொண்டு வந்து விற்பனை செய்யும் நிலையும் உள்ளது.

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகவும் பிரிமீயம் மாடலாக ஃபோக்ஸ்வேகன் டி ராக் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.19.99 லட்சத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட டாப் வேரியண்ட்டில் மட்டுமே வந்தது.

இறக்குமதி கார் என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் தனி மதிப்பு ஏற்பட்டது. இந்த கார் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலில் கிடைக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








