எதிர்காலத்தில் ஆட்டோக்கள் இப்படி தாங்க இருக்கும்!! அட்வான்ஸாக யோசிக்கும் சீனர்கள்!
புதிய தயாரிப்புகள் மற்றும் கான்செப்ட் வாகனங்கள் ஆட்டோமொபைல் நிகழ்ச்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டால், அதில் சில மாடல்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கும்.

அதிலும் குறிப்பாக பறக்கும் வாகனங்கள் என்றால், அவை தான் அந்த நிகழ்ச்சியின் ஹீரோவாக இருக்கும். அப்படிப்பட்ட பறக்கும் வாகனத்தை பற்றி தான் இந்த செய்தியில் இனி பார்க்க போகிறோம்.

ஷாங்காய் ஆட்டோ கண்காட்சி இன்று (ஏப்ரல் 21) முதல் அதிகாரப்பூர்வமாக துவங்குகிறது. அதற்கு முன்னதாக ஊடகவியலாளர்கள் ஏப்ரல் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் அனுமதிக்கபட்டனர்.

இந்த ஆட்டோ ஷோவில் எக்ஸ்பென்ங் என்ற பெயர் கொண்ட பறக்கும் வாகனம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பறக்கும் வாகனம் ஆட்டோ கண்காட்சி நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படுவது இது முதல்முறை அல்ல.

ஏற்கனவே கடந்த ஆண்டில் பீஜிங் ஆட்டோ ஷோவில் பறக்கும் வாகன மாதிரி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த கான்செப்ட் மாதிரியில் இன்னும் நிறைய வேலைகள் இருப்பது போன்றே இருந்தது.

எக்ஸ்பென்ங் பறக்கும் விமானத்தை எக்ஸ்பென்ங் ஹைடெக் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. 5 மீட்டரில் இருந்து 25 மீட்டர் வரையில் பறக்கும் திறன் கொண்ட எக்ஸ்பென்ங் வாகனத்தில் 2 நபர்கள் அமரலாம்.

எதிர்கால நகர்புற போக்குவரத்திற்கான வாகனமாக விளங்கும் அத்தனை பொருத்தங்களையும் கொண்டுள்ள எக்ஸ்பென்ங்கில் 8 டர்போ விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 10,000 பாதுகாப்பு சோதனைகளில் எக்ஸ்பென்ங் உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன் வேகம் எவ்வளவு, வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் என்ன என்ற கேள்விக்கு எல்லாம் தற்போதைக்கு பதில் இல்லை. இதனை மேலும் செயல்முறைக்கு ஏற்ற தோற்றத்தில் கொண்டுவர எக்ஸ்பென்ங் பணியாற்றி வருகிறது.

அன்றாட போக்குவரத்திற்காக கூட பறக்கும் வாகனங்களை உபயோகப்படுத்தும் சூழல் வருவதற்கு இன்னும் நீண்ட வருடங்கள் ஆகும் என்றே நினைக்கிறேன். அந்த காலம் வரும் போது எப்படி இருக்கும் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள்.
நிச்சயம் சாலைகள் எல்லாம் வெறிச்சோடி கிடக்கும். தெருவிற்கு ஒன்று என கார்கள் சுற்றலாம். ஆனால் அதற்குள் நமது வாழ்கை முறை பெரிய அளவில் மாறிவிடும் என்பது மட்டும் உறுதி.


Click it and Unblock the Notifications








