Just In
- 1 hr ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 3 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
ஜாதி பெயரை தாங்கியவாறு கார் மேற்கூரையில் பயணித்த இளைஞர்கள்! அடுத்தமுற செய்ய தயங்குவாங்க! போலீஸ் செஞ்சது அப்படி
ஜாதி பெயரை தாங்கியவாறு காரின் மேற்கூரையில் பயணித்த இளைஞர்களுக்கு போலீஸ் தகுந்த பாடம் கற்பித்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
அண்மையில் மணப்பெண் ஒருவர் காரின் பேனட் மீது அமர்ந்து திருமண பவனி (ஊர்வலம்) சென்றதற்காக வழக்கு பதிவிற்கு ஆளாகினார். அவருடன் சேர்த்து கல்யாண புகைப்பட கலைஞர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிந்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிலேயே இந்த அதிரடி சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தின் சூடு அடங்குவதற்கு முன்னரே மற்றுமொரு விதிமீறல் சம்பவம் தலைநகர் டெல்லியில் அரங்கேறியிருக்கின்றது. இளைஞர்கள் இருவர், வெவ்வேறு கார்களின் மேற்கூரையில் அமர்ந்தவாறு பயணித்த காரணத்திற்காக போலீஸார் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.
இளைஞர்கள் மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா கார்களை விதிமீறலின்போது பயன்படுத்தியிருக்கின்றனர். இதில், மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் பதிவெண் இல்லாதது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டுமின்றி, இரு இளைஞர்களும் தங்களின் ஜாதியை அடையாளப்படுத்தி பதாகையை தாங்கியவாறு சென்றது மேலும் அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த செயல்களைத் தொடர்ந்தே காவல்துறையினர் இளைஞர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இளைஞர்களுக்கு ரூ. 36 ஆயிரத்திற்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு பிரிவுகளின்கீழ் இளைஞர்களுக்கு அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது. வரம்பற்ற வேகம், கோவிட்-19 விதிகளை மீறியது, முகக்கவசம் அணியாதவது, வாகனத்தை மாடிஃபை செய்தது என பல விதிகளின்கீழ் ஒவ்வொருக்கும் தலா ரூ. 18 ஆயிரம் அபராதம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுவெளியில் வாகன ஸ்டண்ட்டில் ஈடுபடக் கூடாது என காவல்துறையினர் பல காலமாக அறிவுறுத்துகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் வாகன ஸ்டண்டில் ஈடுபடுவதைத் தொடர்ச்சியாக செய்த வண்ணம் இருக்கின்றனர். இவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இணையத்தில் வைரலாகி வீடியோவை அடிப்படையாகக் கொண்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் இதேபோன்று இணையத்தில் வைரலாகிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் அபராதம் மற்றும் வாகன பறிமுதல் உள்ளிட்ட அதிரடிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இருப்பினும், பொதுவெளியில் ஸ்டண்ட் செய்வோர் தங்களின் அத்துமீறலை குறைத்துக் கொண்டதாக தெரியவில்லை.
இருப்பினும், வாகன ஸ்டண்ட் நிகழ்வுகளை காவல்துறையினர் இரும்புகரம் கொண்டு அடக்க முயற்சித்து வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே டெல்லியில் அரங்கேறிய இந்த சம்பவம் அமைந்துள்ளது. இதுமாதிரியான ஸ்டண்ட் நிகழ்வுகள், ஸ்டண்டில் ஈடுபடுவபர்களுக்கு மட்டுமின்றி சக வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருக்கின்றது.
-
சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?