Just In
- 42 min ago
உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பென்ஸ் கார்.. யார் வாங்கினார்கள் தெரியுமா?
- 1 hr ago
டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பை விளக்கும் வீடியோ வெளியீடு... இவ்ளோ சிறப்பு வசதிகள் இருக்கா!..
- 3 hrs ago
இந்தியாவில் கார்களுக்கான ஆடியோ அமைப்புகளை வழங்கும் டாப் பிராண்ட்கள்!! இத்தனை இருக்கா...?
- 3 hrs ago
"எலெக்ட்ரிக் எல்லாம் வேஸ்ட்.. நாங்க ஃபிளக்ஸி ஃபியூயல் வாகனம் தயாரிக்க போறோம்" புது ரூட்டை எடுக்கும் ஹோண்டா
Don't Miss!
- Finance
சொந்த நிறுவனத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அங்கிதி போஸ்.. சிங்கப்பூரில் நடந்தது என்ன..?
- News
நடுவானில் பைலட் சொன்ன விஷயம்.. ஸ்டன் பயணிகள்.. திடீரென நின்று போன எஞ்சின்.. அடுத்து நடந்த சம்பவம்!
- Movies
முழுதாக செம்பியாக மாறிய கோவை சரளா... பிரபு சாலமன் இயக்கத்தில் காமெடி குயின்!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க தங்கள் மனைவியை மனதளவில் ரொம்ப கொடுமைப்படுத்துவங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
தோனிக்கு இன்று கடைசி போட்டி.. சிஎஸ்கே அணியின் சீசன் முடிகிறது.. வெற்றியுடன் தொடரை முடிப்பாரா தோனி?
- Technology
உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிறுவனுக்கு கொடுக்க கூடிய பரிசாங்க இது?.. பத்து வயது பயலுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!
பத்து வயது சிறுவனுக்கு அவரது வயதிற்கு மீறிய பரிசை அவரது மில்லியனர் தந்தை கொடுத்திருக்கின்றார். இந்த பரிசளிப்பு சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சிறுவர்கள் வாகனம் இயக்குவதை எந்தவொரு நாடும் அனுமதிப்பதில்லை. இருப்பினும், பரவலாக சிறுவர்கள் வாகனம் இயக்கும் நிகழ்வு அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலில் ஓர் சிறுவனுக்கு என்ன மாதிரியான பரிசு வழங்கக் கூடாதோ, அத்தகைய பரிசை அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வழங்கியிருக்கின்றனர்.

பல மடங்கு விலையுயர்ந்த சூப்பர் காரை பரிசாக வழங்கி சிறுவனையும், நம்மையும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆச்சரியத்தில் உறைய வைத்திருக்கின்றனர். ஆப்பிரிக்கா நாட்டிலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. முஹம்மத் அவல் முஸ்தபா எனும் சிறுவனுக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு விலையுயர்ந்த லம்போர்கினி அவன்டேடர் (Lamborghini Aventador) கார் பரிசளிக்கப்பட்டிருக்கின்றது.

Image Courtesy: mompha/Instagram
பரிசளிக்கப்பட்ட மஞ்சள் நிற சூப்பர் கார் முன்பு சிறுவன் நிற்பது போன்ற புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. லம்போர்கினி காரை பரிசு பெற்றதன் வாயிலாக அச்சிறுவன் ஆப்பிரிக்காவின் மிகவும் ரிச்சான சிறுவனாக மாறியிருக்கின்றார். இந்த கார் மட்டுமின்றி அவரிடத்தில் இன்னும் பல அரிய வகை கார்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாம்பா ஜூனியர் எனும் பெயரில் இச்சிறுவன் அறியப்படுகின்றார். இவர் பிரபல இன்டர்நெட் சூப்பர் ஸ்டார் இஸ்மைலியா முஸ்தபாவின் மகன் ஆவார். மாம்பா சீனியர் என்ற பெயரில் அறியப்படும் பிரபலமே இவர் ஆவார். இவரே தனது மகனின் 10வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக 3 லட்சம் பவுண்டுகள் செலவு செய்து லம்போர்கினி அவென்டேடார் காரை வாங்கி, அதனை தற்போது அவர் பரிசாகவும் வழங்கியிருக்கின்றார்.

இந்திய மதிப்பில் தோராயமாக இதன் விலை ரூ. 2.82 கோடி ஆகும். இதுபோன்று அதிக விலைக் கொண்ட கார்கள் சிறுவனிடத்திலும், அவரது தந்தையிடத்திலும் இருக்கின்றன. அவர்களது கார் கலெக்ஷனை கூடுதலாக சிறப்பிக்கும் பொருட்டே புதிய லம்போர்கினி அவென்டேடர் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது.

வாகன ஆர்வலர்கள் பலரின் கனவு வாகனமாக லம்போர்கினி நிறுவனத்தின் தயாரிப்புகள் அறியப்படுகின்றன. அதிலும், அவென்டேடார் போன்ற ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு பிரியர்கள் (வெறியர்கள்) அதிகம் என்றுகூட கூறலாம். இத்தகைய சூப்பர் காரே பத்து வயது சிறுவனுக்கு பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே சிறுவனத்திடத்தில் பல லம்போர்கினி நிறுவன தயாரிப்புகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், அவென்டேடார் அவரது இல்லத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும். இந்த கார் மட்டுமின்றி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளும் அவர்களிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.

மாம்பா சீனியர், அதாவது, சிறுவனின் அப்பா இஸ்மைலியா இரண்டுக்கும் அதிகமான முறை வரி ஏய்ப்பு காரணமாக காவல்துறையினர்களால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இருப்பினும், ஆப்பிரிக்காவின் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராக அவர் தற்போது விங்கிக் கொண்டிருக்கின்றார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது பத்து வயது மகனுக்கு மிக மிக விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கியிருக்கின்றார்.

லம்போர்கினி அவென்டேடார் கார்களுக்கு உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இக்கார் மாடலை முதன் முதலாக 2011லேயே லம்போர்கினி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. லம்போர்கினியின் பிற தயாரிப்புகளைப் போலவே வெகு விரைவாக பலரின் மனம் கவர்ந்த வாகனமாக அது மாறிவிட்டது.

இதற்கு காரணம் லம்போர்கினி அவென்டேடாரின் பிரத்யேக தோற்றம் மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் திறன்களே ஆகும். இக்காரில், வி12 ரக மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8250 ஆர்பிஎம்-ல் 700 பிஎச்பி பவரை உருவாக்கக் கூடியது ஆகும். அதேநேரத்தில், அதிகபட்சமாக மணிக்கு 350 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை அது கொண்டிருக்கின்றது.

அதுமட்டுமா, வெறும் 2.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் திறனையும் இந்த ஸ்போர்ட்ஸ் கார் கொண்டிருக்கின்றது. எனவேதான் இக்காருக்கு அமோகமான வரவேற்பை ஸ்போர்ட்ஸ் பிரியர்கள் வழங்கி வருகின்றனர். லம்போர்கினி நிறுவனம் இந்த கார் மாடலில் பன்முக தேர்வுகளை வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.
-
இப்படி ஒரு தீர்ப்பை யாருமே எதிர்பார்க்கல... ராங் சைடில் போனால் இவ்வளவு பஞ்சாயத்து இருக்குதா?
-
அதிக ரேஞ்ச் உடன்... டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா? டீசர் வீடியோ வெளியீடு!!
-
இந்தியாவில் பெட்ரோல் விலை "ரொம்ப சீப்" தான்... மற்ற நாடுகளில் எவ்வளவு விலைன்னு இங்க பாருங்க...