டாடாவுக்கு அப்புறம் மிக பெரிய ஆர்டரை பெற்றிருப்பது இந்த நிறுவனம்தான்... ஆர்டரோட மதிப்பு இத்தன ஆயிரம் கோடியா!!
மும்பை நகராட்சியிடம் இருந்து ஓலெக்ட்ரா கிரீன்-டெக் (Olectra Greentech) நிறுவனத்திற்கு மிகப் பெரிய ஆர்டர் கிடைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி மின் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஓலெக்ட்ரா கிரீன் டெக் (Olectra Greentech)-கும் ஒன்று. இந்த நிறுவனமே மிகப் பெரிய ஆர்டரை மும்பை நகராட்சியிடம் இருந்து பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 3,675 கோடி மதிப்பில் பேருந்துகளை வழங்குவதற்கான ஆர்டரையே நகராட்சியிடம் இருந்து ஓலெக்ட்ரா கிரீன்-டெக் பெற்றிருக்கின்றது.

மின்சாரத்தால் இயங்கக் கூடிய பேருந்துகளுக்கே இந்த மிகப் பெரிய தொகையிலான ஆர்டர் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்டரின் பேரில் மும்பை எலெக்ட்ரிக் சப்ளை மற்றும் டிரான்ஸ்போர்டிற்கு (Brihanmumbai Electric Supply & Transport) 2,100 எலெக்ட்ரிக் பஸ்களை ஓலெக்ட்ரா கிரீன்டெக் வழங்க இருக்கின்றது.

ஒட்டுமொத்த இந்தியாவும் மிக வேகமாக மின் வாகன இயக்கத்தை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றது. மக்களையும் மின் பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், மானியம் மற்றும் வரி சலுகைகள் உள்ளிட்டவற்றை அரசுகள் வழங்கிக் கொண்டிருக்கின்றன.

அதேவேலையில், மின் வாகனங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அரசுகளும் மின் வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில், பல முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரசு துறையில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் பலர் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு மாறியிருக்கின்றனர்.

மெகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் சங்மாகூட எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்க மாறியிருக்கின்றார். இவரின் பயன்பாட்டிற்காக எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் வாங்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவின் காஸ்ட்லியான எலெக்ட்ரிக் கார்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.

இவ்வாறு நாடே மின் வாகன பயன்பாட்டிற்கு மாறிக் கொண்டிருக்கின்ற நேரத்திலேயே மும்பை நகராட்சி பெரும் எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் பேருந்துகளுக்கான ஆர்டரை முன்னணி நிறுவனமான ஓலெக்ட்ராவிடம் கொடுத்திருக்கின்றது.

சமீபத்தில் நாட்டின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors), சிஇஎஸ்எல் (Convergence Energy Services Ltd) இடம் இருந்து 5,450 எலெக்ட்ரிக் பேருந்துகளுக்கான ஆர்டரை பெற்றது. இந்த ஆர்டரின் மதிப்பு ரூ. 5 ஆயிரம் கோடி ஆகும். இதுவே நாட்டின் மிகப் பெரிய ஆர்டர் ஆகும்.

இதற்கு அடுத்தபடியாக மிகப் பெரிய ஆர்டரை பெற்ற நிறுவனமாக ஓலெக்ட்ராக கிரீன்டெக் மாறியிருக்கின்றது. நிறுவனத்தின் விற்பனை மற்றும் ஆர்டர் வரலாற்றில் இது மிக முக்கியமான நிகழ்வாக நிறுவனத்திற்கு அமைந்துள்ளது. அனைத்து பேருந்துகளும் கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் (Gross Cost Contract)-இன் வாயிலாகவே வழங்கப்பட இருக்கின்றது.

அதாவது, 2100 மின்சார பேருந்துகளும் மொத்த விலை ஒப்பந்தத்தின் கீழாக 12 ஆண்டுகளுக்கு வழங்கப்பட இருக்கின்றது. இந்த ஒட்டுமொத்த காலத்திலும் மின்சார பேருந்துகளுக்கு ஏற்படும் அனைத்து பராமரிப்பையும் ஓலெக்ட்ராவே மேற்கொள்ள இருக்கின்றது. மும்பையில் ஏற்கனவே 40 எலெக்ட்ரிக் பேருந்துகள் பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது.

இவற்றுடன் வெகுவிரைவில் இன்னும் ஆயிரக் கணக்கில் எலெக்ட்ரிக் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. ஓலெக்ட்ரா கிரீன்டெக்கின் 12 மீட்டர் ஏசி பேருந்துகளே மும்பை நகரத்தின் பயன்பாட்டில் இணைய இருக்கின்றன. அனைத்தும் மும்பை வாசிகளுக்கு சொகுசான பயண அனுபவத்தை நிச்சயம் வழங்கும்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இவிஇஒய் (Evey Trans Private Ltd) மற்றும் ஓலெக்ட்ரா கிரீன் டெக் நிறுவனங்களின் மின்சார பேருந்துகளே அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. அந்தவகையில், புனே, ஹைதராபாத், கோவா, டேராடூன், சூரத், அகமதாபாத், சில்வாசா மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களிலேயே அதிகளவில் எலெக்ட்ரிக் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








