என்ன சொல்றீங்க.. 965கிமீ ரேஞ்ஜ் தர கூடிய எலெக்ட்ரிக் காரா மாத்த போறாங்களா? இந்தியால தரமான சம்பவம் நடக்க போகுது
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஓர் மின்சார கார் ஒற்றை முழுமையான சார்ஜில் 965 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய வாகனமாக மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி விரல் எண்ணிவிடும் எண்ணிக்கையிலேயே எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றே பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ விற்பனைக்கு வழங்கும் ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார். இது ஆடம்பர வசதிகள் கொண்ட எஸ்யூவி ரக காராகும்.

இந்த காரே வெகு விரைவில் ஓர் முழுமையான சார்ஜில் 965 கிமீ ரேஞ்ஜை தரக் கூடிய வாகனமாக மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போதைய நிலவரப்படி இந்த எலெக்ட்ரிக் கார் ஓர் முழுமையான சார்ஜில் 425 கிமீ ரேஞ்ஜு தரக் கூடிய எலெக்ட்ரிக் வாகனமாகவே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

அதேவேலையில் உலக சந்தையில் இதே வாகனம் 520 கிமீ வரை ரேஞ்ஜ் தரக் கூடிய விற்பனையில் உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் மிக உச்சபட்ச ரேஞ்ஜை தரக் கூடிய வாகனமாக மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிக ரேஞ்ஜ் தரக் கூடிய வாகனமாக ஐஎக்ஸ் மாடலை மாற்றுவதற்காக அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் அவர் நெக்ஸ்ட் எனெர்ஜி எனும் ஆரம்ப நிலை நிறுவனத்துடன் பிஎம்டபிள்யூ தற்போது கை கோர்த்திருக்கின்றது. இந்த நிறுவனமே ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காருக்கான அதிக ரேஞ்ஜை வழங்கக் கூடிய பேட்டரி பேக்குகளை வழங்க இருக்கின்றது.

இந்த பேட்டரியின் வாயிலாக ஓர் முழு சார்ஜில் 600 மைல்கள் (965 கிமீ) ரேஞ்ஜ் தரக் கூடிய வாகனமாக பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் மாற இருக்கின்றது. அவர் நெக்ஸ்ட் எனெர்ஜி நிறுவனம், அது உருவாக்கும் பேட்டரி செல்களை ஜெமினி என அழைக்கின்றது. இது இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மேலும், வழக்கமான கோபால்ட், நிக்கல், கிராஃபைட் மற்றும் லித்தியம் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் பேட்டரிகளைப் போல் இது இருக்காது எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, தனது நிறுவனம் தயாரிக்கும் பேட்டரிகள் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டது எனவும் அது விளக்கம் அளிதித்துள்ளது.

இந்த பேட்டரிகளையே முதலில் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்து பின்னர் ஐஎக்ஸ் காரில் வழங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆமாங்க பிஎம்டபிள்யூ நிறுவனம் அவர் நெக்ஸ்ட் எனெர்ஜி நிறுவனம் தயாரிக்கும் அதிக ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரியைத் தாங்கிய முதல் வாகனமாக பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் வாகனமே உலக சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

நிறுவனம் உறுதியளித்திருக்கும் இந்த ரேஞ்ஜ் திறனுடன் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருமானால் உலகின் தரக் கூடிய எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு கடும் போட்டியாளராக அது மாறும். அதேவேலையில், டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் என்கிற எலெக்ட்ரிக் கார் ஓர் முழு சார்ஜில் 750 மைல்கள் (1,200 கிமீ) ரேஞ்ஜை தரக் கூடியதாக விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதுமாதிரியான அதிகம் ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு போட்டியளிக்கும் வகையிலேயே ஐஎக்ஸ் காரை தயார்படுத்தும் முயற்சியில் பிஎம்டபிள்யூ களமிறங்கியிருக்கின்றது. இந்த கார் இந்திய சந்தையில் ரூ. 1.15 கோடி என்கிற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எக்ஸ்டிரைவ்40 என்ற ஒற்றை தேர்வில் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், 76.6 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலே பார்த்தபடி இதனை ஓர் முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 425 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். வெகுவிரைவில் இதைவிட பல மடங்கு அதிக ரேஞ்ஜ் திறனுடன் இக்கார் உலக சந்தையை ஆளுகை செய்ய இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








