Just In
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 9 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பயன்படுத்தவே முடியாது.. வாகன கழிவுகளால் உருவாக்கப்பட்ட மினி காருக்கு புத்தம் புதிய பொலிரோவை வழங்கிய மஹிந்திரா!
குடும்பத்திற்காக பழைய வாகனங்களின் கழிவுகளைக் கொண்டு சிறிய ஜீப் ரக வாகனத்தை உருவாக்கிய நபருக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா புத்தம் புதிய மஹிந்திரா பொலிரோ காரை அன்பளிப்பாக வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் தொழிலதிபர்களில் ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர். வழக்கமான நெட்டிசன்களை போல் கிண்டல், கேலி, விநோத நிகழ்வுகளை பகிர்தல் என அனைத்தையும் துளியளவும் தயக்கமின்றி இவர் செய்து வருகின்றனர். அதேநேரத்தில் புதுமைகளை பாராட்டவும் இவர் தவறுவதில்லை.
அந்தவகையில், கடந்த இவரின் மனதை மஹராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தத்தேத்ரயா லோஹர் எனும் நபர் கவர்ந்திருந்தார். இவரே தனது குடும்பத்திற்காக பழைய வாகனங்களின் கழிவைக் கொண்டு சிறிய ஜீப் ரக வாகனத்தை உருவாக்கியவர். இந்த வாகனம் பற்றிய வீடியோ சமூக வலை தளத்தில் மிக வேகமாக பரவியது.
அவ்வாறு காட்டு தீயைப் போல் அந்த வீடியோ பரவிய நிலையில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் கண்களிலும் அது பட்டது. வீடியோவைக் கண்ட உடன், தத்தேத்ரயாவின் தனி திறமைக்கு பாராட்டை தெரிவித்தார். இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், எக்ஸ்சேஞ்ஜின் அடிப்படையில் புதிய மஹிந்திரா பொலிரோ காரையும் வழங்குவதாக ஆனந்த் மஹிந்திரா தெரிவித்தார்.
ஆனால், ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்து வந்த தத்தேத்ரயா லோஹர் தற்போது ஆனந்த் மஹிந்திராவின் ஆஃபரை ஏற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், தனது தனி திறமையால் உருவாக்கப்பட்ட சிறிய ஜீப்பை மஹிந்திரா நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு, புத்தம் புதிய மஹிந்திரா பொலிரோ காரை அவர் வீட்டிற்கு எடுத்துச் சென்றிருக்கின்றார்.
இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகத் தொடங்கியிருக்கின்றன. இதுகுறித்தும் ஆனந்த் மஹிந்திரா அவரது டுவிட்டர் பக்கத்தில் ஓர் பதிவை வெளியிட்டிருக்கின்றார். அதில், "தனது வாகனத்தை எக்ஸ்சேஞ்ஜ் செய்து புதிய பொலிரோ காரை ஏற்றுக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. நேற்று அவர், அவருடன் குடும்பத்துடன் வந்து பொலிரோவை பெற்றுக் கொண்டார். அவர் உருவாக்கிய சிறிய ஜீப் எங்களின் ஆராய்ச்சி கூடத்தில் நிலை நிறுத்தப்பட இருக்கின்றது. இது பெரும்பாலானோரை ஊக்குவிக்க உதவும்" என்று பதிவிட்டுள்ளார்.
பழைய வாகனங்களின் பாகங்களை உருவாக்கப்பட்டிருக்கும் மினி ஜீப்பை தத்தேத்ரயா லோஹரால் தொடர்ச்சியாக இந்தியாவில் பயன்படுத்த முடியாது. ஆம், இந்தியாவில் உரு மாற்றம் செய்யப்பட்ட அல்லது கலப்பின வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. ஆராய்ச்சிக்காக இதுமாதிரியான வாகனங்கள் உறிய அனுமதியுடன் உருவாக்கப்படலாமே, தவிர, அவற்றை எந்த அனுமதியும் இன்றி சாலையில் பயன்படுத்தக் கூடாது.
இந்த நிலையை தத்தேத்ரயா லோஹருக்கு உணர்த்திய ஆனந்த் மஹிந்திரா, எப்போதும் வேண்டுமானாலும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தங்களின் வாகனத்தை பறிமுதல் செய்யலாம். ஆகையால், தங்களின் இச்சிறிய வாகனத்தை ஒப்படைத்துவிட்டு புதிய பொலிரோவை ஓட்டிச் செல்லுமாறு கடந்த ஆண்டே ஆனந்த் மஹிந்திரா அறிவித்திருந்தார்.
ஆனால், இது எங்களுடைய முதல் முயற்சி, புதிய பொலிரோவை பராமரிக்கும் அளவிற்கு எங்களிடம் வசதி இல்லை என ஆனந்த் மஹிந்திராவின் ஆஃபரை தத்தேத்ரயாவும், அவரது குடும்பமும் ஏற்றுக் கொள்ளாமல் வந்தது. இந்த நிலையிலேயே திடீர் மாற்றமாக குடும்பத்துடன் சேர்ந்து சென்று புதிய மஹிந்திரா பொலிரோ காரை அவர் பெற்றிருக்கின்றார்.
மினி ஜீப்பின் உருவாக்கத்திற்காக தத்தேத்ரயா லோஹர் ரூ. 60 ஆயிரத்திற்கும் அதிகமாக செலவு செய்திருக்கின்றார். இக்காரில் கிக்-ஸ்டார்ட் செய்யும் வசதிக் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கையில் இவ்வாகனத்தில் இருசக்கர வாகனத்தின் எஞ்ஜினை பயன்படுத்தியிருப்பது தெரிகின்றது. ஆனால், எந்த மோட்டார்சைக்கிளின் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலை அவர் வெளியிடவில்லை.
இதைத்தொடர்ந்து, ஆட்டோக்களின் சக்கரம், பழைய கார்களின் இருக்கை மற்றும் ஐந்து லிட்டர் கொள்ளளவு கொண்ட ப்யூவல் டேங்க் உள்ளிட்டவற்றை இந்த வாகனத்தில் பயன்படுத்தியிருக்கின்றார். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வாகனங்களில் இருந்து பெறப்பட்டவையாகும். இத்தகைய ஓர் வாகனத்திற்கே புத்தம் புதிய பொலிரோ காரை வழங்கி அழகு பார்த்திருக்கின்றார் ஆனந்த் மஹிந்திரா.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!