வெளியானது அதிரடி அறிவிப்பு! எலெக்ட்ரிக் வண்டிகளை இனி இலவசமாக சார்ஜ் செய்யலாம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்!
எலெக்ட்ரிக் வாகனங்களை இனி இலவசமாகவே சார்ஜ் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்கும் முயற்சிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்குவது, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து விலக்கு வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை அரசு பிரபலமாக்கி வருகிறது.

அத்துடன் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசு மட்டுமல்லாது, பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் டெல்லி மிக தீவிரமாக பணியாற்றி வருகிறது.

டெல்லியில் நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை வாங்கப்பட்ட மொத்த வாகனங்களில், 10 சதவீத வாகனங்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும். டெல்லியில் நடப்பாண்டு ஜனவரி முதல் கடந்த மார்ச் 14ம் தேதி வரை 10,707 எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், எலெக்ட்ரிக் டூவீலர்களின் (எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், எலெக்ட்ரிக் பைக்) எண்ணிக்கை மட்டும் 5,888 ஆகும்.

இது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்கள் ஆகும். வரும் நாட்களில் டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மக்கள் இனி தங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம் என்பதுதான் இந்த மகிழ்ச்சிக்கு காரணம். எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1ம் தேதியில் இருந்து டெல்லி மக்கள் தங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை இலவசமாக சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

டெல்லியில் உள்ள 40 பொது சார்ஜிங் ஸ்டேஷன்களில் இந்த இலவச சேவை வழங்கப்படும். மதியம் 12 மணியில் இருந்து மதியம் 3 மணி வரை பொதுமக்கள் தங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களில், கட்டணம் எதுவும் செலுத்தாமல் இலவசமாகவே சார்ஜ் செய்து கொள்ளலாம். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது.

டெல்லியில் மதிய நேரத்தில் எலெக்ட்ரிக் வாகன பயனர்களுக்கு இலவசமாக சார்ஜிங் வசதியை வழங்கும் இந்த முயற்சியை, எலெக்ட்ரிவா (ElectriVa) என்னும் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டார்ட்-அப் முன்னெடுத்துள்ளது. டெல்லியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, 40க்கும் மேற்பட்ட பொது சார்ஜிங் ஸ்டேஷன்களை எலெக்ட்ரிவா அமைத்துள்ளது.

பொதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில், எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு, ஒரு யூனிட்டிற்கு சுமார் 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் வரும் ஜூன் 1ம் தேதியில் இருந்து, மதிய நேரத்தில் பொதுமக்கள் தங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம். இதன் மூலம் அவர்களுக்கு பணம் மிச்சமாகும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி, மதியம் 12 மணியில் இருந்து மதியம் 3 மணி வரை மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இலவசமாக சார்ஜ் செய்யப்படும். மற்ற நேரங்களில் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த அதிரடி அறிவிப்பின் மூலம் டெல்லியில் இன்னும் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே செல்வதன் காரணமாகதான், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அம்மாநில அரசு ஊக்குவித்து வருகிறது. அங்கு வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இந்தியாவில் சமீபத்தில் 4 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது தொடர்பாக தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications








