Just In
- 1 hr ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 1 hr ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 1 hr ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 4 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மிக மிக பழைய ஆடி காரை புதிது போலாக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... ரொம்ப சூப்பரான காரா மாத்திட்டாங்க!
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி மிக பழைய சொகுசு காரை புதிதுபோல் மாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் முக்கியமான ஓர் நபராக ரவி சாஸ்திரி இருக்கின்றார். இவர், 1985ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் வேர்ல்டு சாம்பியன்ஷிப் ஆஃப் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த பட்டத்தை மட்டுமல்லாமல் அரிய வகை ஆடி 100 சொகுசு காரையும் அவர் வென்றார்.
இந்த தருணம் அவரது அனைத்து ரசிகர்களையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி, பரிசாக பெற்ற 1985 ஆடி 100 சொகுசு காரை தற்போது புதிதுபோல் மீட்டெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் கார் கிளப் கேரேஜ் எனும் நிறுவனத்தின் வாயிலாகவே இக்காரை ரவி சாஸ்திரி புதிதுபோல் மீட்டெடுத்திருக்கின்றார்.
ஆடி 100 ஓர் சொகுசு வசதிகள் நிறைந்த செடான் கார் ஆகும். இந்த வாகனம் மிக பழைய வாகனம் என்பதால் அக்காருக்கான உதிரிபாகங்கள் கிடைப்பதில் அதிகளவில் கால தாமதம் ஏற்பட்டிருக்கின்றது. இதன் விளைவாக காரை புதுப்பிப்பதற்காக நீண்ட காலம் ஆகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 8 மாதங்கள் வரை காரை பதுப்பிப்பதற்கு சூப்பர் கார் கிளப் கேரேஜ் எனும் நிறுவனம் எடுத்திருக்கின்றது. பாகங்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிரமம், அதிகளவில் காரின் உடல் பாகங்கள் பாதிப்படைந்திருந்ததாலும் இத்தனை அதிகபட்ச நாட்கள் எடுத்துக் கொண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரேமண்ட் குழுமத்தின் எம்டியான கவுதம் சிங்கானியாவால் இயக்கப்பட்டு வரும் நிறுவனமே சூப்பர் கார் கிளப் கேரேஜ். ரவி சாஸ்திரியின் காரை புதுப்பித்ததில் தனி கவனம் செலுத்தியிருக்கின்றார் கவுதம் சிங்கானியா. அனைத்து பணிகளும் நிறைவுற்ற நிலையில் தற்போது அவரே அக்காரை ரவி சாஸ்திரி டெலிவரி பெற்றிருக்கின்றார்.
இதனை கையில் வாங்கிய ரவி சாஸ்திரி அவரது மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வென்ற கார் போல் தெரிகிறது. எந்த மாற்றமும் இல்லை. இதை சூப்பராக செய்து கொடுத்ததற்கு கவுதம் மற்றும் அவரது நிறுவனம் சூப்ப்ர் கார் கிளப் கேரேஜுக்கு நன்றி" என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "இந்த கார் என்னை மீண்டும் 37 ஆண்டுகளுக்கு பின்னோக்கி எடுத்துச் சென்றிருக்கின்றது. அப்போது காரின் சாவி என் கையில் கிடைத்தது நான் இப்போது மீண்டும் உணர்கின்றேன்" என பல விஷயங்களை அவர் நினைவுகூர்ந்தார். இந்த காரை தனது கார் அல்ல. இந்தியாவின் கார் மற்றும் இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அணியின் கார் என்றும் கூறினார்.
இதுமட்டுமின்றி, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இக்காருக்கான அனைத்து வரிகளையும் தள்ளுபடி செய்ததாகவும், இதனால்தான் தன்னால் அந்த சொகுசு காரை இந்தியாவில் எடுத்து வர முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதன் விளைவாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட முதல் ஆடி காராக இது மாறியது.
மறு சீரமைப்பு பணியின்கீழ் அனைத்து பாங்களும் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக இருக்கை, மின் விளக்குகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன. இத்துடன், காரின் வேலை செய்யாத பல பாகங்கள் அகற்றப்பட்டு, புதியவை பொருத்தப்பட்டுள்ளன. டேஷ்போர்டு போன்ற முக்கிய பாகங்களும் மாற்றப்பட்டிருக்கின்றன.
இக்காருக்கான பெரும்பாலான வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. மிக மிக அரிய வகை வாகனம் என்பதால் இக்காருக்கான பாகங்கள் கிடைப்பதில் பெருத்த சிரமம் ஏற்பட்டிருக்கின்றது. இதன் விளைவாக உலக நாடுகளில் உள்ள ஆடி கார்களுக்கான பாகங்களை விற்கும் நிறுவனங்களை தொடர்பு கொண்டு, அக்காருக்கான பாகங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன.
எஞ்ஜின் விஷயத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. அதேவேலையில், ஆடி நிறுவனம் 2.3 லிட்டர் இன்-லைன் 5 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் உடனே அக்காரை விற்பனைக்கு வழங்கியது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 134 பிஎச்பி பவரை வெளியேற்றும்.
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
-
பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!