Just In
- 1 hr ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 3 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 4 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நெக்ஸான், பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக ஹோண்டாவின்2 புதிய கார்கள்... ஆகஸ்ட் மாதம் காத்திருக்கும் தரமான சம்பவம்..
ஹோண்டா நிறுவனம் வரும் ஆகஸ்ட் மாதம் 2 புதிய கார்களை களம் இறக்கத் தயாராகி வருகிறது. அந்த புதிய கார்கள் எப்படி இருக்கும்? மார்கெட்டில் எந்த இடத்தில் களம் இறங்குகிறது? காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பாளர்களில் முக்கியமான நிறுவனம் ஹோண்டா. இந்நிறுவனம் இருசக்கர வாகன விற்பனையில் ஜொலிக்கும் அளவிற்கு கார் தயாரிப்பில் ஜொலிக்கவில்லை. இதற்கு முக்கியமான காரணம் இந்நிறுவனம் கார்களை தயாரிக்கப்பயன்படுத்தப்படும் திட்டங்கள் தான் எனச் சொல்லப்படுகிறது.
தற்போது இந்தியாவில் 4 மீட்டருக்கு குறைவான எஸ்யூவி கார்களின் விற்பனைதான் அதிகமாக இருந்து வருகிறது. மக்கள் இந்த ரக கார்களை வாங்குவதைத் தான் அதிகம் விரும்புகின்றனர். இதனால் பல நிறுவனங்கள் இந்த செக்மெண்டில் தங்கள் கார்களை களமிறக்கி மார்கெட் பங்கைப் பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.
ஆனால் ஹோண்டா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு தனது சப்-காம்பேக்ட் எஸ்யூவியான சிஆர்-வி காரை நிறுத்தியது. இதற்கு போதுமான அளவு விற்பனையைப் பெறவில்லை என அந்நிறுவனம் காரணம் சொன்னது. இந்த கார் எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத கார் தான் என்றாலும் இதை விலை மிக அதிகமாக இருந்தது. விற்பனை மந்தப்படுத்தியது.
தற்போது இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் இந்நிறுவனம் WR-V காரை விற்பனை செய்து வருகிறது. ஆனால் இந்த காரை சப்- காம்பேக்ட் எஸ்யூவி எனச் சொல்வதை விட கிராஸ் ஓவர் கார் எனச் சொல்வது தான் சரியாக இருக்கும். அதனாலேயே இந்த கார் பெரிய அளவில் இதே செக்மெண்டில் உள்ள மற்ற நிறுவன கார்களுடன் விற்பனையில் போட்டி போட முடியவில்லை.
இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் தற்போது இந்திய மார்கெட்டில் தனது தடத்தைப் பெரிய அளவில் பதிக்க கார் தயாரிப்பில் தனது வியூகத்தை மாற்றியுள்ளது. இதன்படி தற்போது அந்நிறுவனம் இரண்டு புதிய 4 மீட்டருக்கும் குறைவான சப்- காம்பேக்ட் கார் களம் இறக்கத் தயாராகி வருகிறது.
இந்த இரண்டு கார்களையும் ஹோண்டா நிறுவனம் சி செக்மெண்ட் காராகவே தயாரித்து வருகிறது. இந்த இரண்டு கார்களும் ஹோண்டா நிறுவனம் சிறப்பாக விற்பனை செய்து வரும் அமேஸ் கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்பார்மில் தான் இந்த காரும் உருவாக்கப்படுகிறது. இந்த காரை அந்நிறுவனத்தார் PF2 மற்றும் PF2S எனக் குறிப்பிடுகின்றனர்.
இந்தோனேசியாவிலிருந்து இந்த கார் குறித்து வந்த தகவலின் படி இந்நிறுவனம் 2022 GIIAS - ல் வெளியிட்ட RS எஸ்யூவி கான்செப்ட் காரை புரேடெக்ஷன் செய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. இதன் படி இந்த காரில் அந்நிறுவனம் 1.5 லிட்டர் I-VTEC பெட்ரோல் இன்ஜினை பொருத்துகிறது. அதாவது ஹோண்டா சிட்டி, மற்றும் பிஆர்வி கார்களில் உள்ள அதே இன்ஜினை இதிலும் பொருத்துகிறது.
முதலில் இப்படியாக ஹோண்டா மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை தயாரிக்கும் பணியைத் துவங்கவுள்ளதாக வெளியான செய்தியின் போது இந்த கார்கள் ஹோண்டா சிட்டியின் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாக அமேஸ் பிளாட்ஃபார்மிலேயே இந்த கார்கள் தயாரிக்கப்படுகிறது. ஆனால் அமேஸ் பிளாட்ஃபார்ம் தற்போது கிட்டத்தட்ட ஹோண்டா சிட்டியின் பிளாட்பார்மை ஒத்தே அமைந்திருக்கிறது.
இந்த புதிய சப்- காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் டிசைனை பொருத்தவரை ஹோண்டா இந்தியா மற்றும் ஜப்பானில் உள்ள தலைமை நிறுவனம் இணைந்து உருவாக்குகிறது. இது பெரும்பாலும் அந்நிறுவனம் உருவாக்கிய 3US என்ற கோடு பெயருடன் கூடிய காரையே உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் மார்கெட்டிற்கு வந்தால் மார்கெட்டில் ஏற்கனவே பலத்த போட்டியில் இருக்கும் டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய காருக்கு போட்டியாக இருக்கும் ஏற்கனவே இந்நிறுவனத்தின் WR-V கார் இந்த செக்மெண்டில் இருப்பதால் புதிய கார் இதிலிருந்து மாறுபட்ட அம்சங்களும் வரும் என எதிர்பார்க்கலாம்.
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை ஹோண்டா அமேஸ் காரின் இன்ஜினே இதிலும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேஸ் காரை பொருத்தவரை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு i-vtec பெட்ரோல் இன்ஜினும், 1.5 லிட்டர் டீசல் இன்ஜினும் ஆப் ஷாக இருக்கிறது. இதில் பெட்ரோல் இன்ஜன் 89 பிஎச்பி பவர்,110 என் எம் டார்க் திறனை வெளிப்படுத்தும், டீசல் இன்ஜின் 99 பிஎச்பி பவர்200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். புதிதாகத் தயாரிக்கப்படும் காரில் ஹைபிரிட் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதம் 6200 கார்கள் வரை விற்பனை செய்யும் திறனுடன் இந்த காரை வெளியிட இந்நிறுவனம் தயாராகி வருகிறது.
புதிதாக வரும் இரண்டாவது காரை பொருத்தவரை சி செக்மெண்டில் பெரிய சைஸ் காராக அறிமுகமாகிறது. இது நேரடியாக ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டாஸ், ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது. இந்த கார்கள் 4.3 மீட்டர் நீளத்திற்கு வடிவமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜினை 5வது தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் உள்ள இன்ஜின் மற்றும் அதில் உள்ள பவர் டெரைனை பெரும் என எதிர்பார்க்கலாம். மாதம் 4100 கார்களை தயாரிக்கும் கேப்பாசிட்டியுடன் இந்த கார் தயாரிக்கப்படலாம்.
இது போக ஹோண்டா நிறுவனம் 3 வரிசை சீட்கள் கொண்ட 6 அல்லது 7 சீட்டர் கார் ஒன்றை வடிவமைக்கும் பணியிலும் இறங்கியுள்ளது. இது மட்டுமல்லாமல் முழுமையாக எலெக்டரிக்கில் இயங்கும் காரையும் வடிவமைத்து வருகிறது.