Just In
- 4 hrs ago இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
- 6 hrs ago ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
- 7 hrs ago ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
- 9 hrs ago ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
Don't Miss!
- News கடலூர் பெண் கொலை பற்றி அவதூறு.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- Lifestyle மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- Technology பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- Movies Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திடீர் அறிவிப்பை வெளியிட்ட ஹோண்டா! இவங்க இப்படி பண்ணுவாங்கனு யாரும் எதிர்பாக்கல! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
ஜப்பானை சேர்ந்த ஹோண்டா (Honda) நிறுவனம், இந்திய சந்தையில் பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது. ஹோண்டா கார்கள் தரமானவை என்பதால், இந்நிறுவனத்திற்கு இந்தியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்த சூழலில், ஹோண்டா ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
ஆம், மற்ற நிறுவனங்களை போலவே, ஹோண்டா நிறுவனமும் தனது கார்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்திய சந்தையில் ஹோண்டா கார்களின் விலை 30 ஆயிரம் ரூபாய் வரை உயரவுள்ளது. அத்துடன் 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் எனவும் ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு சில கார்கள் என்றில்லாமல், அனைத்து கார்களின் விலையும் உயரவுள்ளது.
ஹோண்டா நிறுவனம் கார்களின் விலைகளை அதிரடியாக உயர்த்துவதற்கு இரண்டு காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கார்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது முதல் காரணம் ஆகும். அதே நேரத்தில் இந்தியாவில் மிகவும் கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. இந்த விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் கார்களை தயாரிக்க வேண்டும். ஹோண்டா கார்களின் விலைகள் உயர்வதற்கு இது இரண்டாவது காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாட்டின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai), டாடா மோட்டார்ஸ் (Tata Motors), கியா (Kia), ரெனால்ட் (Renault), எம்ஜி மோட்டார் (MG Motor), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) மற்றும் ஆடி (Audi) போன்ற பல்வேறு நிறுவனங்களும் இந்திய சந்தையில் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளன. எனவே புதிய கார்களை வாங்க திட்டமிட்டுள்ள இந்திய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கிடையே நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், மிகவும் கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகள் (பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் இரண்டாவது பகுதி) 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு வரவுள்ளன. இந்த விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில், வாகனங்களை மேம்படுத்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டியுள்ளது. இதனை ஈடுகட்டுவதற்காகவும், கார் உற்பத்தி நிறுவனங்கள் விலையை உயர்த்த தொடங்கியுள்ளன.
இதன் காரணமாக கார்களின் விலைகள் மட்டுமல்லாது, வர்த்தக வாகனங்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இனி புதிய வாகனங்களை வாங்குவதாக இருந்தால், வாடிக்கையாளர்கள் கூடுதல் தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும். இதன் காரணமாக புதிய வாகனங்களை வாங்கும் முடிவை பலர் தள்ளி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக இந்தியாவில் யூஸ்டு கார்களின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே ஹோண்டா நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்திய சந்தையில் புதிய எஸ்யூவி (SUV) கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தற்போது தயாராகி வருகிறது. 2023ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த புதிய எஸ்யூவி காரை ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் எஸ்யூவி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதையடுத்து, ஹோண்டா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்களும் (Electric Cars) நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. எனவே டாடா மோட்டார்ஸ், எம்ஜி, கியா, ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா (Mahindra) போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி விட்டன. ஆனால் ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களுக்கு பதிலாக, ஹைப்ரிட் கார்களில் (Hybrid Cars) கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனமும் கிட்டத்தட்ட இதே முடிவைதான் எடுத்துள்ளது.
-
வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
-
சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
-
தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!