எவ்வளவுதான் சோர்வாக இருந்தாலும் ஒரு சிலர் காரில் தூங்க மாட்டாங்க! இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா?
காருக்கு உள்ளே தூங்கும் ஒருவருக்கு என்ன நடக்கும்? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இன்ஜினை 'ஆன்' செய்து வைத்து விட்டு, காருக்கு உள்ளே தூங்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. தொலை தூர பயணங்களின்போது, பெரும்பாலான மக்கள், காருக்கு உள்ளே குட்டி தூக்கம் போடுகின்றனர். இந்த சிறிய ஓய்வின் மூலம், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதாக அவர்கள் கருதுகின்றனர். ஆனால் இது விவேகமான நடவடிக்கை கிடையாது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

காருக்கு உள்ளே தூங்கும் ஒருவருக்கு திடீர் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கூட இருக்கின்றன. ஏன் திடீரென மரணம் ஏற்படலாம்? என்பதை இந்த செய்தியில் நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம். காருக்கு உள்ளே ஒருவர் தூங்கும்போது, காரின் சேம்பர் (Car Chamber), தீங்கு விளைவிக்க கூடிய பல்வேறு வாயுக்களால் நிரம்பியிருக்கும். எனவேதான் காருக்கு உள்ளே தூங்க கூடாது என்று சொல்கிறோம்.

அதுவும் ஏசி-யை 'ஆன்' செய்து வைத்து விட்டு, காருக்கு உள்ளே தூங்குவது இன்னும் பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்தும். காருக்கு உள்ளே தூங்கும் நபருக்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு, திடீரென மூச்சு திணறல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏர் எக்ஸாஸ்ட் சிஸ்டம் (Air Exhaust System) சரியாக இயங்காமல் போனால், மூச்சு திணறல் காரணமாக ஒருவர் மரணிக்கலாம்.

புத்துணர்ச்சியான காற்றுக்கு வழியே இல்லாமல், அதே காற்று காருக்கு உள்ளே மிக நீண்ட நேரம் பயணித்து கொண்டிருப்பதால், மூச்சு திணறல் ஏற்பட்டு ஒருவர் மரணம் அடையலாம். இன்ஜினை 'ஆன்' செய்து வைத்து விட்டு காருக்கு உள்ளே தூங்கினால், ஆக்ஸிஜன் அளவு வேகமாக குறைந்து விடும். 'ஃப்ரெஷ்' ஆன காற்று உள்ளே வருவதற்கு வழி இல்லாமல் போனால், மரணம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இதுதவிர கார்பன் மோனாக்ஸைடின் (Carbon Monoxide) அளவு காருக்கு உள்ளே அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாலும், தூங்குபவர் மரணம் அடையலாம். காரின் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தில், கார்பன் மோனாக்ஸைடு இருக்கும். இந்த அபாயகரமான கார்பன் மோனாக்ஸைடு விரைவாகவே மரணத்தை ஏற்படுத்தி விடக்கூடிய தன்மை வாய்ந்தது.

கார்பன் மோனாக்ஸைடின் மற்றொரு பிரச்னை என்னவென்றால், அது மணமற்றது. இதனால் பிரச்னையை நீங்கள் உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு. மணத்தை நீங்கள் நுகர்ந்தால் கூட, பிரச்னையை உணர்ந்து கொண்டு சுதாரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான் என்பதை ஒருபோதும் மறந்து விட வேண்டாம்.

கார்பன் மோனாக்ஸைடு வாயுவின் அளவு அதிகரிக்கும் என்பதாலும், காருக்கு உள்ளே தூங்குவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. காருக்கு உள்ளே தூங்குவதில் இவ்வளவு பிரச்னைகள் இருப்பதை பலரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. எனவே அலட்சியமாக தொடர்ந்து காருக்கு உள்ளே தூங்குவதை வழக்கமாகவே வைத்துள்ளனர்.

உங்கள் வழியில் வந்து கொண்டிருக்கும் பிரச்னைகளில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டுமென்றால், இனிமேல் காருக்கு உள்ளே குட்டி தூக்கமோ அல்லது நீண்ட நேர தூக்கமோ போடதீர்கள். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கும் கூறி, அவர்களையும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்துங்கள்.

அதே நேரத்தில் காருக்கு உள்ளே தூங்கினால் என்ன பிரச்னை ஏற்படும்? என்ற விழிப்புணர்வு ஒரு சிலருக்கு ஏற்கனவே உள்ளது. எனவே அவர்கள் எவ்வளவுதான் சோர்வாக இருந்தாலும், காருக்கு உள்ளே தூங்க மாட்டார்கள். அதே வழியை நீங்களும் பின்பற்றுங்கள். பாதுகாப்பாக இருங்கள். ''கார் என்பது பயணிப்பதற்கானது மட்டுமே. தூங்குவதற்கானது அல்ல'' என்பதை மனதில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








