உண்மையில் 3ஆக பிரிகிறதா மஹிந்திரா அண்ட் மஹிந்திரா?.. மனம் திறந்த மஹிந்திரா குழுமம்.. என்னதான் சொல்றாங்க!

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (Mahindra And Mahindra) வாகன உற்பத்தி பிரிவு மூன்றாக பிரிய இருப்பது உண்மையா?, அதிகாரப்பூர்வ தகவலை மஹிந்திரா குழுமம் (Mahindra Group) வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உண்மையில் 3ஆக பிரிகிறதா மஹிந்திரா அண்ட் மஹிந்திரா?.. என்கிறது சொல்கிறது நிறுவனம்? மனம் திறந்த மஹிந்திரா குழுமம்!

இந்தியாவை தாயகமாகக் கொண்டு இயங்கும் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (Mahindra And Mahindra)-வும் ஒன்று. இந்நிறுவனம் மஹிந்திரா குழுமத்தின் (Mahindra Group) ஓர் முக்கிய அங்கமாகும். இந்த முக்கிய அங்கத்தை அண்மையில் மூன்றாக மஹிந்திரா குரூப் பிரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உண்மையில் 3ஆக பிரிகிறதா மஹிந்திரா அண்ட் மஹிந்திரா?.. என்கிறது சொல்கிறது நிறுவனம்? மனம் திறந்த மஹிந்திரா குழுமம்!

அதாவது, நிறுவனம் தற்போது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பிராண்டின் கீழ், மின்வாகனங்கள், விவசாயம் சார்ந்து பயன்படும் டிராக்டர் போன்ற உபகரணங்கள், இத்துடன் பயணிகள் மற்றும் வர்த்தக பிரிவிற்கான வாகனங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய வாகன உற்பத்தி பணிகளையே மஹிந்திரா குழுமம் வெவ்வேறு மூன்று விதமான பிராண்டுகளின் கீழ் பிரித்து வரும் காலத்தில் உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

உண்மையில் 3ஆக பிரிகிறதா மஹிந்திரா அண்ட் மஹிந்திரா?.. என்கிறது சொல்கிறது நிறுவனம்? மனம் திறந்த மஹிந்திரா குழுமம்!

ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் மஹிந்திரா குழுமம் வெளியிடவில்லை. இந்த மாதிரியான சூழ்நிலையில் தற்போது ஓர் முக்கிய அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பிராண்டை மூன்றாக பிரிக்கும் எண்ணம் நிறுவனத்திற்கு இல்லை என்கிற தகவலே அது வெளியாகியுள்ளது.

உண்மையில் 3ஆக பிரிகிறதா மஹிந்திரா அண்ட் மஹிந்திரா?.. என்கிறது சொல்கிறது நிறுவனம்? மனம் திறந்த மஹிந்திரா குழுமம்!

இதுகுறித்து மஹிந்திரா குழுமம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நிறுவனத்திற்கு வாகன வணிகத்தை மூன்று அலகுகளாகப் பிரிக்கும் திட்டம் எதுவும் இல்லை. இதனை பங்குச் சந்தைகளுக்கு தெரியப்படுத்துவது அவசியம் என மஹிந்திரா குழுமம் கருதுகின்றது" என அது தெரிவித்திருக்கின்றது.

உண்மையில் 3ஆக பிரிகிறதா மஹிந்திரா அண்ட் மஹிந்திரா?.. என்கிறது சொல்கிறது நிறுவனம்? மனம் திறந்த மஹிந்திரா குழுமம்!

இத்தகவலின் வாயிலாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மூன்றாக பிரியப்போவதில்லை என்பது தெரிய வந்துள்ளது. மஹிந்திரா குழுமம் பன்முக தொழில்துறையில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், அதிக வருவாயை நிறுவனத்திற்கு ஈட்டி தரும் பிரிவாக ஆட்டோமொபைல்ஸ் துறை இருக்கின்றது. எனவேதான் இதனை மறு சீரமைக்க நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும், இதன் அடிப்படையில் மூன்று பிராண்டுகளாக அவை பிரிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

உண்மையில் 3ஆக பிரிகிறதா மஹிந்திரா அண்ட் மஹிந்திரா?.. என்கிறது சொல்கிறது நிறுவனம்? மனம் திறந்த மஹிந்திரா குழுமம்!

இந்த அதிகாரப்பூர்வமற்றது என்கிற தகவலே தற்போது வெளியாகியிருக்கின்றது. நிறுவனத்திற்கு 55 சதவீதம் வருவாயை ஈட்டு தரும் பிரிவாக மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் ஆட்டோமொபைல்ஸ் துறை இருந்து வருகின்றது. இதனை இரட்டிப்பாக்கும் முயற்சிகளை ஏற்கனவே மஹிந்திரா தீவிரப்படுத்தியிருக்கின்றது.

உண்மையில் 3ஆக பிரிகிறதா மஹிந்திரா அண்ட் மஹிந்திரா?.. என்கிறது சொல்கிறது நிறுவனம்? மனம் திறந்த மஹிந்திரா குழுமம்!

இதன் அடிப்படையில் ஏற்கனவே சில புதுமுக தயாரிப்பு பணியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. அத்துடன், சில அப்டேட் செய்யப்பட்ட வாகனங்களையும் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அந்தவகையில், வெகு விரைவில் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான ஸ்கார்பியோவின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

உண்மையில் 3ஆக பிரிகிறதா மஹிந்திரா அண்ட் மஹிந்திரா?.. என்கிறது சொல்கிறது நிறுவனம்? மனம் திறந்த மஹிந்திரா குழுமம்!

தற்போது விற்பனையில் இருக்கும் வெர்ஷனைக் காட்டிலும் அதிக இட வசதி, புதிய சிறப்பம்சங்கள், கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பல வியக்க வைக்கும் அம்சங்களுடன் ஸ்கார்பியோ இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதுதவிர, மூன்று புதுமுக எலெக்ட்ரிக் கார்களையும் மஹிந்திரா அறிமுகம் செய்ய இருக்கின்றது. இவற்றின் வெளியீடு வெகு விரைவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உண்மையில் 3ஆக பிரிகிறதா மஹிந்திரா அண்ட் மஹிந்திரா?.. என்கிறது சொல்கிறது நிறுவனம்? மனம் திறந்த மஹிந்திரா குழுமம்!

சமீபத்தில் அந்த எலெக்ட்ரிக் வாகனங்களின் டீசர் படங்களையும், அவற்றில் இடம் பெற இருக்கும் சில முக்கிய அம்சங்கள் பற்றிய தகவலையும் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இவ்வாறு இந்திய சந்தையை அதகளப்படுத்தும் பணிகளில் மஹிந்திரா மிக ஆயத்தமாக களமிறங்கியிருக்கின்றது. அதேவேலையில், மஹிந்திரா நிறுவனம் அடாம் எனும் குவாட்ரிசைக்கிள் ரக வாகன தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றது.

உண்மையில் 3ஆக பிரிகிறதா மஹிந்திரா அண்ட் மஹிந்திரா?.. என்கிறது சொல்கிறது நிறுவனம்? மனம் திறந்த மஹிந்திரா குழுமம்!

இந்த வாகனம்குறித்த தகவல்கள் வெகு நாட்களாக வெளிவராதநிலையில், மிக சமீபத்தில் அதுகுறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகின. அதாவது, இரு விதமான பேட்டரி பேக் மற்றும் நான்கு விதமான வேரியண்டுகள் ஆகியவற்றில் மஹிந்திரா அடாம் விற்பனைக்கு வர இருப்பதாக முக்கிய தகவல்கள் வெளியாகின. மஹிந்திரா அடாம் இந்தியாவில் வர்த்தக வாகன பிரிவிற்காக உருவாக்கப்பட்ட வரும் பிரத்யேக வாகனம் ஆகும். ஆகையால், இதனை தனி நபர் பயன்பாட்டிற்கு பெற இயலாது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 10, 2022, 11:18 [IST]
English summary
Mahindra and mahindra says no plans to restructure the company into three verticals
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+