Just In
- 1 hr ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 1 hr ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- 2 hrs ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 3 hrs ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
Don't Miss!
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Movies ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
துளசி வாசம் மாறினாலும் மாறும்... ஆனா மஹிந்திரா வார்த்தை மாறாது... சொன்ன மாதிரியே காரை டெலிவரி பண்ணீட்டாங்க!
மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
2022ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள், அதாவது நடப்பு மாத இறுதிக்குள், 14 ஆயிரம் எக்ஸ்யூவி700 கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து விடுவோம் என மஹிந்திரா நிறுவனம் வாக்குறுதி வழங்கியிருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மஹிந்திரா நிறுவனம் இந்த வாக்குறுதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தது.
ஏற்கனவே கூறியபடி தனது வாக்குறுதியை மஹிந்திரா நிறுவனம் தற்போது நிறைவேற்றியுள்ளது. ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று (இன்று) மஹிந்திரா நிறுவனம் 14 ஆயிரம் எக்ஸ்யூவி700 கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து அசத்தியுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களை டெலிவரி பெற்ற வாடிக்கையாளர்கள் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இத்தனைக்கும் செமிகண்டக்டர் சிப் பற்றாக்குறையால் கார் உற்பத்தி நிறுவனங்கள் மிக கடுமையாக திணறி வரும் நேரத்தில், மஹிந்திரா நிறுவனம் தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். புத்தம் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன.
கடந்த ஆண்டு தீபாவளி சமயத்திலேயே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை முன்பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்து விட்டது. இதன் காரணமாக தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எக்ஸ்யூவி700 காரின் உற்பத்தி பணிகளை மஹிந்திரா நிறுவனம் விரைவுபடுத்தியது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கப்பட்டது.
முதல் நாளில் வெறும் 57 நிமிடங்களிலேயே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கான முன்பதிவு எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது. ஒரு மணி நேரத்திற்கு உள்ளாக 25 ஆயிரம் முன்பதிவுகள் என்பது மிகப்பெரிய சாதனைதான். இதற்கு மறுநாள், அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காருக்கு மீண்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றது.
அக்டோபர் 8ம் தேதி வெறும் 2 மணி நேரத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்தன. அதாவது வெறும் 3 மணி நேரத்திற்கு உள்ளாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன. இது மஹிந்திரா நிறுவனத்திற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்தது.
இதன்பின் முன்பதிவு எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்து விட்டது. முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்யூவி700 கார்களை டெலிவரி செய்யும் பணிகளை தற்போது மஹிந்திரா நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகம் பேர் முன்பதிவு செய்திருப்பதுதான் இந்த நீண்ட காத்திருப்பு காலத்திற்கான காரணமாக கூறப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் அருமையாக டிசைன் செய்யப்பட்டிருப்பதுடன், அதிநவீன வசதிகளையும் பெற்றுள்ளது. மேலும் சக்தி வாய்ந்த இன்ஜின் தேர்வுகளையும் மஹிந்திரா நிறுவனம் இந்த காரில் வழங்கியுள்ளது.
அத்துடன் மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களில் ஒன்றாகவும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 திகழ்கிறது. இதுவரை 5 'மேட் இன் இந்தியா' கார்கள் மட்டுமே குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்துள்ளன.
இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரும் ஒன்றாகும். இதுதவிர டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ், டாடா பன்ச் மற்றும் இதே மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 ஆகிய கார்களும் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று சாதனை படைத்திருக்கின்றன.
இதுபோன்ற காரணங்களால்தான் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக புதிய தலைமுறை ஸ்கோர்பியோ காரை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதுவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?