விவசாயிகளின் ஆதரவு மஹிந்திராவுக்குதான் போலிருக்கே! வெளிநாட்டு நிறுவனம் எல்லாம் எந்த மூலைக்கு போச்சுனே தெரியல!
இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் விவசாய எந்திரங்களுக்கு (Mahindra & Mahindra's Farm Equipment Sector) மிக சூப்பரான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மஹிந்திரா நிறுவனம் பன்முக வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், கார்களைத் தொடர்ந்து விவசாய பணிகளுக்கு தேவைப்படும் உபகரணம் மற்றும் எந்திரங்களை தயாரிக்கும் பணியிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. அவ்வாறு, நிறுவனம் தயாரிக்கும் டிராக்டர்களுக்கு இந்தியர்கள் மத்தியில் எப்போதும் தனித்துவமான டிமாண்ட் உண்டு.

இதை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனத்தின் விவசாய பணிகளுக்கு உதவும் டிராக்டர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 50,539 யூனிட்டுகள் டிராக்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. இதே அக்டோபர் மாதம் 2021 இல் மஹிந்திராவின் விவாசய பணிகளுக்கு உதவும் எந்திரங்கள் 45,420 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

மஹிந்திரா நிறுவனம் தற்போது பெற்றிருக்கும் விற்பனை எண்ணிக்கையானது இதுவரை அதன் டிராக்டர் வரலாற்றிலேயே பெற்றிராத அதீத விற்பனை வளர்ச்சியாகும். மேலும், மேலே பார்த்த எண்ணிக்கையானது வெறும் உள்நாட்டில் மட்டுமே விற்பனையான டிராக்டர்களின் எண்ணிக்கையாகும். ஏற்றுமதியை செய்யப்பட்ட யூனிட்டுகளை இதனுடன் சேர்த்தால் நிறுவனம் விற்பனைச் செய்திருக்கும் டிராக்டர்களின் எண்ணிக்கை சில மடங்கு உயரும்.

அதாவது, ஏற்றுமதியுடன் சேர்த்து நிறுவனம் 2022 அக்டோபரில் 51,994 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருக்கின்றது. இதை வைத்து பார்க்கையில் வெளிநாடுகளுக்கு மட்டும் நிறுவனம் 1,455 யூனிட்டுகள் விவசாய எந்திரங்களை ஏற்றுமதி செய்திருப்பது தெரிய வருகின்றது. இந்த எண்ணிக்கை 2021 அக்டோபரைக் காட்டிலும் சற்று குறைவாகும். ஆம், சென்ற ஆண்டு அக்டோபரில் மஹிந்திரா 1,597 யூனிட்டு விவாசய எந்திரங்களை ஏற்றுமதி செய்திருந்தது.

இதனுடன் நடப்பாண்டு எண்ணிக்கையை ஒப்பிடுகையில் லேசான ஏற்றுமதி சரிவை மஹிந்திரா சந்திருப்பது தெரிகின்றது. அதேவேலையில், உள்நாட்டில் மஹிந்திராவின் விவசாய எந்திரங்களுக்கு பலமடங்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் பல இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற வேலையில் அவை அனைத்திற்கும் தண்ணிக்காட்டும் வகையில் மஹிந்திராவின் விவாசய உபகரணங்கள் நல்ல அளவில் விற்பனையாகியுள்ளது.

இந்த அதீத விற்பனை வளர்ச்சிக்கு நடப்பு பண்டிகை சீசனே முக்கிய காரணமாக இருக்கின்றது. வரும் காலங்களில் நிறுவனத்தின் விவாசய எந்திரங்களுக்கு வரவேற்பு பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகையால், இதுவரை எந்தவொரு நிதியாண்டிலும் பெற்றிராத அதீத விற்பனை வளர்ச்சியை நடப்பு நிதியாண்டில் மஹிந்திரா பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இப்போதே (ஏப்ரல் முதல் அக்டோபர் 2022 வரையில்) மஹிந்திரா நிறுவனத்தின் விவசாய எந்திரங்கள் 2,52,844 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன.

இதே காலகட்டத்தில் சென்ற நிதியாண்டில் மஹிந்திரா நிறுவனம் 2,26,087 யூனிட்டுகள் விவாசய பயன்பாட்டு உபகரணங்களை விற்பனைச் செய்திருந்தது. இது நடப்பு நிதியாண்டைக் காட்டிலும் 12 சதவீதம் குறைவான விற்பனை எண்ணிக்கையாகும். அதாவது, நடப்பு நிதியாண்டில் மஹிந்திரா 12 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.

இதற்கு உள் மற்றும் வெளிநாடுகள் சிலவற்றில் மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதே முக்கிய காரணமாக உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் விவசாய பயன்பாட்டு உபகரணங்களுக்கு மட்டுமில்லைங்க, பயணிகள் மற்றும் பிற வர்த்தக பயன்பாட்டு வாகனங்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது.

61.21 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பெறும் அளவிற்கு மஹிந்திராவின் கார்களுக்கு நல்ல வரவேற்பு சந்தையில் நிலவிக் கொண்டிருக்கின்றது. நிறுவனம் ஒட்டுமொத்தமாக 2022 அக்டோபரில் 32,298 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருக்கின்றது. இதே அக்போடர் மாதம் 2021 இல் 20,034 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த விற்பனை வளர்ச்சியைத் தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் பிராண்டுகளின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது. முதல் இடத்தில் மாருதி சுஸுகியும், இரண்டாவது இடத்தில் ஹூண்டாயும், மூன்றாவது இடத்தில் டாடா மோட்டார்ஸும் இதற்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் மஹிந்திராவும் உள்ளது.


Click it and Unblock the Notifications








