காரை ஓட்டியபடி பணத்தை வெளியே வீசி சென்ற இளைஞர்... தரமான எடுத்த நடவடிக்கை எடுத்த போலீஸ்... என்ன பண்ணாங்க?
காரை ஓட்டியபடி இளைஞர் ஒருவர் பணத்தை வீசி சென்ற நிகழ்வு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஒழுங்கற்ற செயலில் ஈடுபட்ட இளைஞர் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இந்நிகழ்வுகுறித்த வீடியோ மற்றும் கூடுதல் விபரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா தார், இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரை இப்போது புக் செய்தால் பத்து மாசங்கள் பின்னர்தான் அது கடைக்கும் கைகளுக்கு கிடைக்கும் என்கிற அளவிற்கு மக்கள் மத்தியில் மிக சூப்பரான டிமாண்டை அது பெற்று வருகின்றது. இந்த காத்திருப்பு காலமானது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டுக் காணப்படுகின்றது.

இத்தகைய ஓர் சூப்பரான காரில் பயணித்தபடியே இளைஞர் ஒருவர் காசை காற்றில் வீசியபடி சென்றிருக்கின்றார். இளைஞரின் இந்த ஒழுங்கற்ற செயல்குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. வீடியோவை அவரே பப்ளிசிட்டிக்காக வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வீடியோ காவல்துறையின் கண்களில் பட இளைஞர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இளைஞரை கைது செய்த காவல்துறையினர், காரையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். ஆனால், இளைஞர் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

அதாவது என்ன பிரிவுகளின்கீழ் இளைஞர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. அதேநேரத்தில், இளைஞர்கள் காசை காற்றில் வீசும்போது கார்களை இயக்கிக் கொண்டிருந்தார், அப்போது ஸ்டியரிங் வீலில் கைகளை வைத்திருக்காமல், அவர் காசை வீச பயன்படுத்திக் கொண்டிருந்தார். அதேநேரத்தில், அவர் சாலையில் கவனத்தைச் செலுத்தாமல் வீடியோவிற்கு போஸ் கொடுப்பதிலேயே குறியாக இருந்தார்.

இதுபோன்று ஆபத்தை விளைவிக்கக் கூடிய செயலுக்காக அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கலாம் யூகிக்கப்படுகின்றது. அதேவேலையில், இதற்கு இன்னும் வேறு சில காரணங்களும் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் உத்தபிரதேச மாநிலம் நொய்டாவிலேயே அரங்கேறியிருக்கின்றது.

இளைஞர் மீது நடவடிக்கை எடுத்திருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக கவுதம புத்தா நகர் போலீஸ் கமிஷனர் மஹிந்திரா தார் காவல்நிலையத்திற்குள் நிறுத்தப்பட்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கின்றது. இந்த படம் பிற போக்குவரத்து விதிமீறல் வாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது.

பலர் இணையத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு சிக்கல்களில் கொள்கின்றனர். அந்தவகையிலேயே மஹிந்திரா தார் காரின் உரிமையாளரும் தற்போது காவல்துறையிடம் சிக்கியிருக்கின்றார். இதற்கு முன்னதாகவும் இதுபோன்று இணையத்தில் வைரலாகிய வீடியோவை சான்றாகக் கொண்டு விதிமீறல் வாதிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

காவல்துறையினர் பொதுவாக இ-செல்லாணையே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். அதேநேரத்தில், இது தொடர்கதையாகக் கூட என்பதில் அவர்கள் அதிக கவனத்துடன் செயல்படுகின்றனர். இதன் அடிப்படையிலேயே சில நேரங்களில் அவர்கள் அதிரடி நடவடிக்கையைக் கையாள்கின்றனர்.

அந்தவகையிலேயே தற்போது நொய்டாவில் அரங்கேறியிருக்கும் நிகழ்வு அமைந்துள்ளது. நாடு முழுவதும் காவல்துறையினர் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். அந்தவகையில், சமீபத்தில் தமிழக காவல்துறை ஹெல்மெட் விஷயத்தில் மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.
थार जीप सवार युवक अपने आप को फेमस करने के लिए नोएडा की सड़को पर पैसा उड़ाते हुए वीडियो हुई वायरल!noidapolice Uppolice pic.twitter.com/lt29LoAtWi
— निशान्त शर्मा (Nishantjournali) May 28, 2022
ரைடர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை காவல்துறையினர் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டனர். அவ்வாறு அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் கடந்த வாரத்தில் ஒரே நாளில் மட்டும் 2000 பேருக்கும் அபராதம் வழங்கப்பட்டது. இது ஒட்டுமொத்த சென்னை வாசிகளையும் அதிர வைக்கும் வகையில் அமைந்தது. இவ்வாறு நாடு முழுவதும் காவல்துறையினர் இரும்புக் கரம் கொண்டு போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








