Just In
- 59 min ago ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- 1 hr ago டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- 1 hr ago இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
- 2 hrs ago ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
Don't Miss!
- News உங்கள் வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட்டால் என்ன செய்வது? உங்களால் வாக்களிக்க முடியுமா! எளிய விளக்கம்
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Lifestyle பளபளப்பான முகத்திற்கு தயிர்-எலுமிச்சை ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Movies சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஆல்டோ போன்ற சின்ன கார்களை கை கழுவ முடிவு? மாருதியின் திடீர் மன மாற்றத்திற்கு இதுதான் காரணம்!
மாருதி சுஸுகி நிறுவனம் சிறிய கார்களை கை கழுவ திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மத்திய அரசு வரும் 2022 அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் விற்பனையாகும் கார்களுக்கு 6 ஏர்பேக்கள் இருப்பது கட்டாயம் என அறிவித்துள்ளது. கார்களில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை மனதில் வைத்து இந்த நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. ஆனால் இதற்கு வாகன தயாரிப்பாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களிலும் 2 ஏர்பேக் இருப்பது கட்டாயமாக உள்ளது. ஒரு ஏர் பேக் டிரைவருக்கும் மற்றொரு ஏர்பேக் அருகில் உள்ள பயணிகள் சீட்டில் இருப்பவருக்கும் ஏர்பேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்தது.
இந்நிலையில் இந்த 2 ஏர்பேக் கட்டாயம் என்ற எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தியுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் ஏற்கனவே இருக்கும் 2 ஏர்பேக் போக அடுத்ததாக 4 ஏர்பேக்களை பொருத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.
இந்த சட்டம் கார்களின் விலையை உயர்த்தும் குறிப்பாக என்ட்ரி லெவல் கார்களான குறைந்த விலை கார்களின் தயாரிப்பு செலவை உயர்த்தும். இதனால் கார்களின் விலை அதிகமானால் விற்பனை பெரும் அளவில் பாதிக்கப்படும் என வாகன தயாரிப்பாளர்கள் சொல்லி வருகின்றனர்.
இந்த சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படப்போவது மாருதி சுஸூகி நிறுவனம் தான் தான். தற்போது விற்பனையாகும் ஹேட்ச் பேக் கார்களில் 70 சதவீதம் இந்நிறுவனத்தின் கார்கள் தான் விற்பனையாகி வருகிறது.
அந்நிறுவனம் வெளியிடும் ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸொ, ஈக்கோ, செலிரியோ மற்றும் இக்னீஸ் கார்களை அந்நிறுவனம் குறைந்த விலை கார்களாக விற்பனை செய்து வருகின்றனர். இதன் விலை ரூ3.25 லட்சத்திலிருந்து துவங்குகிறது. இந்த கார்களில் எல்லாம் மேலும் 4 ஏர் பேக்களை வைத்தால் காரின் விலை அதிகமாகும்.
ஒவ்வொரு காருக்கும் கூடுதலாக ரூ60 ஆயிரம் வரை செலவாகும் என்பதால் இந்த கார்களின் விலை ரூ4 லட்சம் வரை சென்று விடும். பொதுவாக இந்த கார்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் முதன் முறையாக கார் வாங்க முடிவு செய்யும் போது இந்த காரைதான் தேர்வு செய்வார்கள்.
இதை விலை அதிகமானால் இந்த கார்களின் விற்பனை பெரும் அளவிற்குப் பாதிக்கப்படும். அதிகமா விலையால் தற்போது இருசக்கர வாகனம் ஓட்டிக்கொண்டிருப்பவர்கள் கார்களை வாங்கத் தயக்கம் காட்டுவார்கள். இதனால் இந்தியா முழுவதும் சிறிய ரக கார்களின் விற்பனை பெரும் அளவு பாதிக்கப்படும்.
மாருதி மட்டுமல்லாமல் ஹூண்டாய், டாடா, ஹோண்டா போன்ற நிறுவனங்கள் கூட சிறிய ரக கார்களை விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கும் இதே விதமான பாதிப்பு இருக்கிறது. இந்தியாவில் பிஎஸ்6 கட்டாயமாக்கிய போதே கார்களின் இன்ஜின்களை மாற்றியது கார்களின் விலையைக் கணிசமாக உயர்த்தியது.
இந்நிலையில் மாருதிசுஸூகி நிறுவனம் சேர்மன் பார்கவா இது குறித்துக் கூறும் போது, அரசின் இந்த 6 ஏர் பேக் உத்தரவு அமலுக்கு வந்தால் சிறிய ரக கார்கள் பெரிய அளவில் விலை உயர்வு ஏற்படும் என்பதால் இந்த கார்களை நிறுத்த நாங்கள் தயங்கமாட்டோம். அரசுடன் இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்துப் பேசி வருகிறோம் எனக் கூறினார்.
இந்தியாவில் உள்ள கார் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவிற்கு என்ற ஒரு தரத்தையும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கார்களுக்கு என்று ஒரு தரத்தையும் கையாளுகின்றனர். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காரில் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான கார்களுக்கு 6 ஏர்பேக்கள் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யும் கார்களில் அரசு கட்டாயத்தால் காரணமாக வெறும் 2 ஏர் பேக் மட்டும் வைக்கப்படுகிறது. 2020ம் ஆண்டு நடந்த சாலை விபத்துக்களைக் கணக்கிடும் போது அத்தனை கார்களிலும் 6 ஏர்பேக் இருந்திருந்தால் 13ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்டோமொபைல் உதிரிப் பாக தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் இந்தியா ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இந்த 6 ஏர்பேக் கட்டாயம் என்ற ரெகுலேஷனை கொண்டு வர 12-18 மாதம் வரை கால அவகாசம் வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மத்திய அரசின் இந்த 6 ஏர்பேக் சட்டம் கொண்டு வரப்படுவதால் மாருதி நிறுவனத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் நிலைப்பாடு படி இந்த சட்டம் வந்தால் ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ, ஈக்கோ, செலிரியோ, இக்னீஷ் போன்ற கார்கள் விரைவில் நிறுத்தப்படலாம்.
-
பெங்களூருக்கு போறவங்க ஒரு முறையாவது இந்த பஸ்ஸில் டிராவல் பண்ணி பாருங்க!! மொத்தமும் எலக்ட்ரிக்...
-
குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!
-
இந்தியாவுலேயே நல்லா சேல்ஸ் ஆகுற கார் இதெல்லாம்! ஆனா இந்த விஷயம் தெரிஞ்சா யாரும் வாங்க மாட்டாங்க!