Just In
- 7 min ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 2 hrs ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 2 hrs ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
Don't Miss!
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நாயை அடித்து தூக்கிய மஸராட்டி சொகுசு கார்... அதுக்கப்புறம் விலையுயர்ந்த காருக்கு நடந்த சோகத்தை பாருங்க!
காவல்துறையினர் பல்வேறு போக்குவரத்து விதிமீறல் காரணங்களுக்காக வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையில் தெரு நாய் ஒன்றை அடித்துவிட்டு தப்பிச் சென்ற காரணத்திற்காக வீடியோவின் அடிப்படையில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கக் கூடிய காரை காவல்துறையினரைப் பறிமுதல் செய்திருக்கின்றனர். இந்த சம்பவம்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இளம் பெண்ணிடம் கொள்ளையடிக்க முயன்ற திருடனை கடித்து குதறி விரட்டியடித்த நாய், உரிமையாளருக்காக பாம்பிடம் போராடி தன் உயிரை நீர்த்த நாய் என நன்றியுணர்வு கலந்த வரலாறுகள் பல நாய்களைச் சுற்றி உள்ளன. இத்தகைய ஓர் பிராணிக்கு ஆபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற காரணத்திற்காகவே மும்பை காவல்துறையினர் மஸராட்டி காரை தற்போது பறிமுதல் செய்திருக்கின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையிலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. பொதுவாகவே சொகுசு மற்றும் விலையுயர்ந்த கார்கள் விநோத ஒலியை வெளியேற்றக் கூடியவையாகக் காட்சியளிக்கின்றன. சில நேரங்களில் மனிதர்களையே ஆடம்பர வாகனங்களில் இருந்து வெளிவரும் சத்தம் ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க செய்துவிடுகின்றது.
இந்த மாதிரியான ஓர் சொகுசு வாகனமாகவே மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஓட்டி வந்த மசாராட்டி சொகுசு வாகனம் இருந்திருக்கின்றது. காரை ஓட்டி வந்த நபர் தொடர்ச்சியாக ஆக்சலரேஷனை அழுத்திய வண்ணம் இருந்திருக்கின்றார். இது சாலைவாசிகளை மட்டுமின்றி அந்த பகுதியில் இருந்த தெரு நாயையும் எரிச்சலடைய செய்திருக்கின்றது.
MumbaiPolice Respect ✊🏻 this will surely set an example !!! Mumbai has shown the country such Hooligans won’t be spared by law !!! pic.twitter.com/6latNIpSN7
— Rrahul Narain Kanal (Iamrahulkanal) May 29, 2022
ஆகையால், அக்காரை அந்த தெரு நாய் விரட்டத் தொடங்கியிருக்கின்றது. அப்போது செல்போனில் மும்மரமாக பேசிக் கொண்டிருந்த சொகுசு காரின் உரிமையாளர், காரை அதி வேகத்தில் இயக்க ஆரம்பித்தார். சிட்டி லிமிட்டை தாண்டி உச்ச வேகத்தில் கார் இயங்கியதை நம்மால் காண முடிகின்றது.
இந்த நிலையில் காரின் முன் பகுதியில் சிக்கிய நாய், பின்னர் பல முறை உருண்டு செல்லும் வகையில் தூக்கி வீசப்பட்டது. இந்த நிகழ்வுகள் அனைத்தையும் அந்த பகுதி வாசி ஒருவர் அவரது செல்போனில் படம் பிடித்திருக்கின்றார். பின்னர் அந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு சொகுசு கார் உரிமையாளர் மீது காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
புகாரை ஏற்றுக் கொண்ட மும்பை காவல்துறை, சொகுசு கார் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக ஐபிசி 429, 279 ஆகிய பிரிவுகளின்கீழ் இளைஞர் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, இளைஞரை கைது செய்த காவலர்கள், விலையுயர்ந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
சாலையில் நாய் போன்ற பிற விலங்குகள் இருப்பதை அறிந்தும் ஒரு சிலர் அதிக வேகத்தில் சென்று விபத்தை ஏற்படுத்துவதை நம்மால் காண முடிகின்றது. அத்தகையோரை எச்சரிக்கும் வகையில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. குறிப்பாக, நாய் தானே என நினைத்து வேகத்தைக் குறைக்காமல் அவற்றை ஏற்றிவிட்டு செல்வோர்களை காவல்துறையின் அதிரடி நடவடிக்கை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.
காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு சமூக வலைதள வாசிகள் பாராட்டையும், நன்றிகளையும் தெரிவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் மஸராட்டி காரின் மதிப்பு ரூ. 2.25 கோடி ஆகும். கிரான் டூரிஸ்மோ எனும் மாடலையே காவலர்கள் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
இந்த காரில் அதிக வேக இயக்க திறனை வழங்குவதற்காக ஃபெர்ராரியின் வி8 மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4.2-4.7லிட்டர் மோட்டார் தேர்வில் இந்த சொகுசு கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த மோட்டார்கள்அதிகபட்சமாக 399-454 குதிரை திறன் மற்றும் 339-384 டார்க்கை வெளியேற்றும். இத்தகைய சூப்பரான இயக்க திறனை வெளியேற்றும் காரைக் கொண்டே மும்பை செல்வந்தர் தெருநாயை மோதிவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றார். இதற்கான தக்க தண்டனையை அவர் தற்போது காவல்துறை வாயிலாக பெற்றிருக்கின்றார்.
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!