Just In
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 8 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இனி கட்டாயம் செஞ்சே ஆகனும்... கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு போட்ட மத்திய அரசு...
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் விபத்திற்கு பிறகு மத்திய அரசு கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கான தரக்கட்டுப்பாடு விதிகளில் பின் சீட்டில் உள்ளவர்கள் சீட் பெல்ட் அணிவில்லை என்றாலும் அலாரம் அடிக்க வேண்டும் என்ற புதிய விதியை வகுத்துள்ளது. இதை வாகன தயாரிப்பு விதிகளுக்கான தரக்கட்டுப்பாடு விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதனால் இனி கார்கள் தயாிக்கப்படும் போதே பின் சீட்டிற்கான சீட் பெல்ட் அலாரத்துடன் தயாரிக்கப்பட வேண்டும். இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்த மாத துவக்கத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் சேர்மன் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாகப் பலியானார். இந்த சம்பவத்தில் அவர் காரின் பின் சீட்டில் சீட்பெல்ட் அணியாமல் அமர்ந்திருந்தார். அதனால் கார் விபத்தில் சிக்கும் போது அவர் காருக்குள்ளேயே தூக்கி வீசப்பட்டு அதனால் உயிரை இழந்தார். பொதுவாக இந்தியாவில் கார்களில் பயணிக்கும் பலருக்கும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தால் சீட் பெல்ட் அணியத் தேவையில்லை என எண்ணம் இருக்கிறது.
ஆனால் மோட்டார் வாகன சட்டப்படி ஒரு காரில் எந்த சீட்டில் அமர்ந்திருந்தாலும் அந்த நபர் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். இதுவரை இந்தியாவில் பெரும்பாலும் முன் சீட்டில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணிய வில்லை என்றால் போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர். ஆனால் பின் சீட்டில் ஒருவர் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதில்லை.
ஆனால் சைரஸ் மிஸ்திரியின் மரணத்திற்குப் பிறகு பின் சீட்டில் சீட்பெல்ட் அணிவது குறித்து அதிகம் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தியாவில் பல பகுதிகளில்போலீசார் பின் சீட்டில் சீட்பெல்ட் அணியாதவதர்களுக்கு அபராதம் விதிக்க துவங்கினர். இதற்கிடையில் சைரஸ் மிஸ்திரியின் மரணத்திற்கு பிறகு மத்திய போக்குவரத்துத் துறையினர் பின் சீட்டில் சீட் பெல்ட் குறித்த புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரப் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில் தற்போது வாகன தயாரிப்பு அதற்கான தர கட்டுப்பாட்டில் வாகனங்களை ஒருவர் ஸ்டார்ட் செய்து பயணிக்கும் போது முன் சீட்டில் அமர்ந்திருப்பவர் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் அலாரம் அடிக்கும் கருவிகள் கட்டாயம் இடம் பெற வேண்டும் எனச் சொல்லியிருந்தனர். ஆனால் தற்போது அந்த விதிகள் சற்று மாற்றப்பட்டுள்ளது.
தற்போது மத்திய போக்குவரத்துத் துறை போக்குவரத்து வாகன தரக்கட்டுபாட்டில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாகனத்தின் பின்புறம் உள்ள சீட்களில் முன்புறம் பார்த்தவாறு அமைக்கப்படும் சீட்களில் சீட்பெல்ட் அலாரம் கட்டாயம் இடம் பெற வேண்டும் எனச் சொல்லியுள்ளனர். இது அனைத்துவிதமான M மற்றும் N கேட்டகிரி வாகனங்களுக்கு பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே மத்திய போக்குவரத்துத் துறை இந்தியாவில் சீட் பெல்ட் அலாரங்களை தடை செய்யும் கருவிகளை விற்பனை செய்ய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் மூலம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் இனி கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்பவர்கள் எந்த சீட்டில் அமர்ந்திருந்தாலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
இதற்கு முன்னர் இந்தாண்டு துவக்கத்தில் மத்திய போக்குவரத்துத் துறை கார்களில் 8 பயணிகள் வரை பயணம் செய்யும் அனைத்து பயணிகள் கார்களுக்கும் கட்டாயம் 6 ஏர்பேக்கள் இருக்க வேண்டும் எனக் கூறி அதற்கு 2022 அக்டோபர் 1 தேதியை கெடுவாக விதித்துள்ளது.
இதற்கிடையில் ஆன்லைன் கேப் நிறுவனங்களான உபேர், ஓலா போன்ற நிறுவனங்கள் தனது டிரைவர்களுக்கு பின் பக்க சீட்டில் சீட் பெல்ட் வேலை செய்கிறதா என செக் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!