இந்தியால இருக்க வேற எந்த ஆட்டோவும் இவ்ளோ ரேஞ்ஜ் தராது! பெட்ரோல் வண்டிய விட்டுட்டு இந்த ஆட்டோவை வாங்கிடலாம்போல!
ஒமெகா செய்கி நிறுவனம் அதன் அதிகம் ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் ஆட்டோவை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலக மின்வாகன தினத்தை முன்னிட்டு பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனமான ஒமெகா செய்கி மொபிலிட்டி (Omega Seiki Mobility), அதன் அதிகம் ரேஞ்ஜ் தரக் கூடிய மின்சார மூன்று சக்கர வாகனத்தை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எலெக்ட்ரிக் மூன்று வாகன உற்பத்திக்கு பெயர்போன நிறுவனமான ஒமெகா செய்கீ அதன் விக்டர் (Vicktor) எனும் எலெக்ட்ரிக் ஆட்டோவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

இதற்கு அறிமுக விலையாக ரூ. 5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது புக்கிங் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. ரூ. 9,999 என்ற முன்தொகையில் இருசக்கர வாகனத்திற்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. வரும் நவம்பர் 2022 இல் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவை டெலிவரி கொடுக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இரு விதமான தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவை வாடிக்கையாளர்களால் வங்கிக் கொள்ள முடியும். திறந்த பின் பகுதி அல்லது மூடப்பட்ட பின்பக்கம் ஆகிய இரு விதமான தேர்வுகளிலேயே இந்த விக்டர் ஆட்டோ விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த ஆட்டோவின் பாடி இடி கோட்டிங் செய்யப்பட்ட மெட்டலால் உருவாக்கப்பட்டது.

இதுதவிர இன்னும் பல சிறப்பு வசதிகள் இந்த ஆட்டோவில் வழங்கப்பட்டிருக்கின்றன. ஜிபிஎஸ், ஸ்பேர் வீல், லாக்கபிள் குளோவ் பாக்ஸ், ரிவர்ஸ் பசர் மற்றும் ஹசார்டு இன்டிகேட்டர் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் இரு விதமான ரைடிங் மோடை வழங்கும் வசதியும் விக்டோரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

எகனாமி மற்றும் பூஸ்ட் ஆகிய இரு விதமான மோட்களிலேயே அது வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் அனைத்து விதமான சாலைகளையும் அசால்டாக சமாளித்துவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்காக 175 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸில் இ-ஆட்டோ உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன், 17.4 பிஎஸ் மற்றும் 430 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்துடன், மிக சிறந்த ரேஞ்ஜை வழங்கும் விதமாக 20 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்தியாவில் விற்பனையில் இருக்கும் வேறு எந்த எலெக்ட்ரிக் ஆட்டோவும் இந்தளவு அதிகபட்ச ரேஞ்ஜை வழங்காது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதன் பே-லோட் திறனும் மிக சூப்பரானதாகக் காட்சியளிக்கின்றது. அதாவது, இந்த விக்டோர் எலெக்ட்ரிக் ஆட்டோவில் அதிகபட்சமாக 450 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். 9.2 டிகிரி ஏறுமுகமான சாலையில்கூட இந்த வாகனம் அசால்டாக ஏறிவிடும். இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய வாகனமாக விக்டோர் இ-ஆட்டோ காட்சியளிக்கின்றது.

ஆகையால், இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ இந்திய ஆட்டோ சந்தையில் பெரும் புரட்சியைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி 50 ஆயிரம் புக்கிங்குகள் அதன் எலெக்ட்ரிக் ஆட்டோவிற்கு கிடைத்திருப்பது தெரிகின்றது. இந்நிறுவனம் தற்போது 20க்கும் மேற்பட்ட நகரங்களில் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிறுவனம் அதன் வாகனங்களை முழுக்க முழுக்க உள்ளூர் தயாரிப்பாக உருவாக்க திட்டமிட்டிருக்கின்றது. இதன் அடிப்படையில் நிறுவனம் அதன் மின் வாகனங்களுக்கான மின் மோட்டார் மற்றும் பேட்டரி பேக்குகளை உள்-நாட்டிலேயே வைத்து தயாரிக்க இருக்கின்றது. இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பு: இந்த படத்தில் சில படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








