Just In
- 1 hr ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 4 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 5 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
டாடா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களின் விற்பனை பட்டைய கௌப்புது... தீபாவளிக்கு நீங்களும் ஒன்னு வாங்கி போடுங்க!
டாடா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 47,655 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
முதல் இரண்டு இடங்களில் மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் ஹூண்டாய் நிறுவனத்திற்கும், டாடா நிறுவனத்திற்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 2,145 கார்கள் மட்டுமே. கடந்த சில மாதங்களாகவே ஹூண்டாய் நிறுவனத்திற்கும், டாடா நிறுவனத்திற்கும் இடையே 2வது இடத்தை பிடிப்பது யார்? என்ற போட்டி நிலவி வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் சிறிய வித்தியாசத்தின் மூலம் ஹூண்டாய் நிறுவனம் இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. சிறிய வித்தியாசத்தின் காரணமாக 2வது இடத்தை ஹூண்டாய் நிறுவனத்திடம் பறிகொடுத்திருந்தாலும் கூட, விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 25,729 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 47,655 ஆக உயர்ந்துள்ளது. இது 85.2 சதவீத வளர்ச்சியாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த சிறப்பான வளர்ச்சிக்கு நெக்ஸான் மற்றும் பன்ச் ஆகிய இரண்டு கார்களும் மிகப்பெரிய அளவில் உதவி செய்துள்ளன.
கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் டாடா நிறுவனம் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெக்ஸான் மற்றும் பன்ச் கார்களை (ஒட்டுமொத்தமாக) விற்பனை செய்துள்ளது. தனித்தனியாக பார்த்தால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 14,518 நெக்ஸான் கார்களையும், 12,251 பன்ச் கார்களையும் விற்பனை செய்து அசத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாக கடந்த செப்டம்பர் மாதம் 26,769 நெக்ஸான் மற்றும் பன்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை இரண்டுமே குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார்கள் ஆகும். இந்த இரண்டு கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருப்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
டாடா நெக்ஸான் காரில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. மறுபக்கம் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது.
டிரான்ஸ்மிஷன் பணிகளை பொறுத்தவரையில் டாடா நெக்ஸான் காரில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. மறுபக்கம் டாடா பன்ச் காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.
இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் டாடா நெக்ஸான் மற்றும் டாடா பன்ச் ஆகிய இரண்டு கார்களிலும் ஏராளமான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, டாடா நெக்ஸான் மற்றும் டாடா பன்ச் ஆகிய 2 கார்களையும் வெற்றிகரமான தயாரிப்புகளாக மாற்றியுள்ளன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. கூடிய விரைவில் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுதவிர அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வெகு சமீபத்தில் டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!