பெட்ரோல், டீசல் ரேட் உயர்ந்தாலும் கவலயில்ல! டாடா செய்ய போகும் தரமான சம்பவம்! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரமான சம்பவம் ஒன்றை நிகழ்த்தவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போதைய நிலையில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இருப்பது டாடா மோட்டார்ஸ். நெக்ஸான் எலெக்ட்ரிக் கார், டிகோர் எலெக்ட்ரிக் கார் மற்றும் எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் கார் ஆகிய தயாரிப்புகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து கொண்டுள்ளது.

இந்த சூழலில் இந்தியாவின் சிஎன்ஜி செக்மெண்ட்டிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி விட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு மாதம் இந்தியாவில் தனது சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் ஜனவரி 19ம் தேதி தனது சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது. இது டியாகோ சிஎன்ஜி (Tiago CNG) மற்றும் டிகோர் சிஎன்ஜி (Tigor CNG) கார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ மற்றும் டிகோர் கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது இந்த கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி உறுதியாகியுள்ளது. இந்த கார்களுக்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு வரும் நாட்களில் தொடங்கப்படவுள்ளது. ஆனால் இந்த 2 சிஎன்ஜி கார்களுக்கும் இந்தியாவில் உள்ள பல டாடா டீலர்ஷிப்கள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்பதிவுகளை ஏற்று வருகின்றன.

கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாங்கள் ஏற்கனவே கூறியபடி, டியாகோ மற்றும் டிகோர் கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நீண்ட காலமாகவே மேற்கொண்டு வருகிறது.

இந்த 2 கார்களும் ஏற்கனவே சாலை சோதனையிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களும் ஏற்கனவே வெளியாகியுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். 85 பிஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.2 லிட்டர், மூன்று-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட டியாகோ மற்றும் டிகோர் கார்களின் அடிப்படையில் இந்த சிஎன்ஜி வெர்ஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

எனவே சிஎன்ஜி வெர்ஷன்களிலும் இதே இன்ஜின்தான் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மைலேஜ் அதிகளவில் கிடைக்க வேண்டும் என்பதற்காக, குறைவான பவர்அவுட்புட்டை வெளிப்படுத்தும் வகையில் இன்ஜின் ட்யூனிங் மாற்றப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதிகாரப்பூர்வமான தகவல்கள் நமக்கு வரும் ஜனவரி 19ம் தேதி கிடைத்து விடும்.

டியாகோ மற்றும் டிகோர் கார்களின் ரெகுலர் வெர்ஷன்களில் ஏஎம்டி மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வு மட்டுமே இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை பரிசீலனை செய்யலாம். ஏனெனில் இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. ஆனால் பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடுகையில் சிஎன்ஜி கார்கள் மிகவும் சிக்கனமானவை.

எனவே எரிபொருளுக்காக நீங்கள் செலவிடும் தொகை குறையும். அத்துடன் பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி கார்கள் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஆர்வம் உடையவர்களும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த சிஎன்ஜி கார்களை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.

டாடா டியாகோ சிஎன்ஜி மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி கார்களின் விலை உள்பட அனைத்து தகவல்களும் வரும் ஜனவரி 19ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது. இந்த 2 கார்களின் விலையும் சரியாக நிர்ணயம் செய்யப்பட்டால், விற்பனையில் சாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








