என்னங்க இப்படி சொல்லிட்டாங்க... எதிர்பார்த்தது எல்லாம் வீணா! டொயோட்டாவின் அறிவிப்பால் பெருத்த ஏமாற்றம்!
அண்மையில் டொயோட்டா நிறுவனம் இன்னோவா எலெக்ட்ரிக் காரை காட்சிப்படுத்தியது. இந்த காரின் வருகையை பலர் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்ற வேலையில் தற்போது அதற்கு ஆப்பு வைக்கும் வகையில் ஓர் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

டொயோட்டா நிறுவனம் அதன் பிரபல கார் மாடலான இன்னோவா க்ரிஸ்டாவை தழுவி உருவாக்கிய இன்னோவா எலெக்ட்ரிக் காரை அண்மையில் வெளியீடு செய்தது. ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தோனேசியா சர்வதேச மோட்டார் ஷோவிலேயே அது காட்சிப்படுத்தப்பட்டது. இதுவே இக்காரை டொயோட்டா நிறுவனம் காட்சிப்படுத்துவது முதல் முறையாகும்.

எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி இந்த செயலை டொயோட்டா செய்தது. எனவே, அனைவருக்கும் இது மிகப் பெரிய சர்ப்ரைசாகவே அமைந்தது. மேலும், இன்னோவா கார் பிரியர்கள் மத்தியில் இந்த நிகழ்வு பெருத்த ஆர்வத்தை தூண்ட செய்தது. இந்த ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் உடைத்தெறியும் வகையில் ஓர் முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இன்னோவா இவி ஆய்வின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், இப்போதைக்கு இக்காரை இப்போதைக்கு உற்பத்தி செய்யும் திட்டம் டொயோட்டா இந்தோனேசியாவிற்கு இல்லை என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலே தற்போது வெளியாகியுள்ளது.

எனவே, இன்னோவா எலெக்ட்ரிக் கார் இப்போதைக்கு விற்பனைக்கு வராது என்பது மிக தெளிவாகத் தெரிய வந்திருக்கின்றது. இந்தோனேசியாவிற்கான டொயோட்டா நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் இயக்குனர் ஆன்டன் ஜிம்மி சுவன்டி அண்மையில் அளித்த பேட்டியின் வாயிலாகவே இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

ஆனால், இதனை அறியாமல் பலர் அக்கார் மீது அதீத ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இவர்களை தற்போது வெளியாகியிருக்கும் தகவல் பெருத்த அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது. குறிப்பாக இன்னோவா, எம்பிவி மற்றும் மின் வாகனம் ஆகிய வாகன பிரியர்களை இந்த தகவல் பெருத்த கவலையில் ஆழ்த்தியிருக்கின்றது.

ஐசி எஞ்ஜின் கொண்ட இன்னோவா க்ரிஸ்டா ஐஎம்வி2 ஆர்க்கிடெக்சரை பயன்படுத்தியே உருவாக்கப்பட்டு வருகின்றது. இதன் வாயிலாகவே பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு பவர்ட்ரெயின்களிலும் இன்னோவா க்ரிஸ்டா உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த பிளாட்பாரத்தை மின் வாகனத்தை தயாரிப்பதற்கு ஏற்றுவதாக மாற்றுவது மிகப் பெரிய சவாலான விஷயம்.

இந்த ஓர் காரணத்தினாலேயே இன்னோவா க்ரிஸ்டா எலெக்ட்ரிக் உற்பத்தி ஓரங்கட்டப்பட்டுள்ளது. மேலும், இன்னோவா க்ரிஸ்டா அதிக எடைக் கொண்ட வாகனமாகவும் காட்சியளிக்கின்றது. இந்த மாதிரியான ஓர் வாகனத்தை நல்ல ரேஞ்ஜ் தரும் மின்சார காராக உருவாக்குவதும் பெரும் சாவாலான விஷயம்.

எனவேதான் இப்போதைக்கு இக்காரை உற்பத்தி செய்யும் திட்டமில்லை என நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா ஓர் 7 சீட்டர் எம்பிவி காராகும். இதே தரத்திலேயே மின்சார வெர்ஷன் இன்னோவாவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த எதிர்பார்ப்பிற்கு தற்போது முற்று புள்ளி வைக்கும் நிலை உருவாகியுள்ளது.

அதேநேரத்தில் தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கு நிலவும் சிறப்பான வரவேற்பு, எதிர்காலத்தில் இந்த காரின் உற்பத்தி பணிகளை டொயோட்டா கையிலெடுக்க வைக்கும் என்ற அதிகாரப்பூர்வமற்ற சாதகமான தகவல்களும் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இது இன்னோவா க்ரிஸ்டா மின்சார காருக்காக காத்திருப்போருக்கு ஆதரவளிக்கும் அமைந்துள்ளது.

டொயோட்டா நிறுவனம் தற்போது புதிய தலைமுறை இன்னோவா க்ரிஸ்டாரை உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் எம்பிவி கார் மாடல்களில் இதுவும் ஒன்று. ஆகையால், இதன் புதிய தலைமுறை உருவாக்கத்திற்கு பின்னர் இந்திய சந்தையையும் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய சேஸிஸ், கூடுதல் இட வசதி மற்றும் அதிக தொழில்நுட்ப வசதி உள்ளிட்டவற்றுடன் புதிய தலைமுறை இன்னோவா எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா நிறுவனம் இன்னோவா எலெக்ட்ரிக் காரை உற்பத்தி செய்யாது, ஆகையால், அது விற்பனைக்கு வராதே என சோகத்தில் மூழ்க வேண்டாம். ஏனெனில், சீனாவைச் சேர்ந்த கேஒய்டி எனும் நிறுவனம் இந்திய எம்பிவி மின்சார கார் பிரியர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் இ6 எனும் எம்பிவி ரக எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.
ஆனால், இந்த காரை வர்த்தக ரீதியாக இயங்கும் நிறுவனங்களால் மட்டுமே வாங்கி பயன்படுத்த முடியும் என்பது சற்றே கவலையான விஷயமாக இருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் முதல் எம்பிவி ரக மின்சார இதுவே ஆகும்.29 லட்சத்து15 ஆயிரம் ரூபாய் என்ற உச்சபட்ச விலையில் இருந்து இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
Source: autonetmagz


Click it and Unblock the Notifications








