இந்தியாவின் கெத்தை நிரூபித்த மஹிந்திரா! 2 காரை காட்டி போட்டியாளர்களை எல்லாம் அலற விட்டுட்டுடாங்க!
மஹிந்திரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களை விரிவுபடுத்தும் எண்ணத்தில் நேற்று தனது புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவியின் கான்செப்ட் கார்களை பார்வைக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த கார்கள் 2024 மற்றும் 2025ம் ஆண்டு விற்பனைக்கு வரும் நிலையில் இந்த கார் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் மிக மும்முரமாக இருக்கிறது. எப்படியாவது டாடா நிறுவனத்திற்குப் போட்டி போட பல்வேறு திட்டங்களை வகுத்து அதற்குத் தகுந்தார் போல வரிசையாகத் தனது இவி லைன்அப்களை தயார் செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் இந்தியாவில் முதன் முறையாகத் தனது மஹிந்திரா எக்ஸ்யூவி.இ9 மற்றும் பிஇ.05 என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை முதன் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்கள் ஏற்கனவே இங்கிலாந்தில் ஒரு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த எக்ஸ்யூவி.இ9 மற்றும் பிஇ.05 ஆகிய இரண்டு வாகனங்களுமே கான்செப்ட் கார்கள் தான் இது பார்க்க ஆம்பிள் லுக்கில் இருக்கிறது. இந்நிறுவனம் எஸ்யூவி பாடி டைப்களில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது. சமீபத்தில் கூட தனது புதிதாக ஸ்கார்பியோ என், மஹிந்திரா தார் அப்டேட், எக்ஸ்யூவி 700, புதிய பொலேரோ ஆகிய எஸ்யூவிகளை வரிசையாக அப்டேட் செய்தது.
மஹிந்திரா தற்போது முழு எலெக்ட்ரிக் காரை உருவாக்குவதில் தீவிரமான கவனத்தைச் செலுத்தி வருகிறது. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள எக்ஸ்யூவி.இ9 மற்றும் பிஇ.05 ஆகிய மாடல்கள் அந்நிறுவனத்தின் முக்கியமான மாடல் கார்களாக கருதப்படுகிறது. இதில் எக்ஸ்யூவி.இ ரேஞ்சில் மொத்தம் 2 கார் வரவுள்ளன அதில் ஒன்று தான் எக்ஸ்யூவி.இ9, அதே போல எக்ஸ்யூவி.பிஇ ரேஞ்சில் மொத்தம் 3 கார்கள் வரவுள்ளன அதில் ஒன்று தான் பிஇ.05

இந்த கார்கள் எல்லாம் மஹிந்திராவின் புதிய இன்குலோ என்ற ஃபிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படவுள்ளது. இதில் மஹிந்திராவின் எக்ஸ்யூவி.இ ரேஞ்ச் கா்கள் வரும் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கே வந்துவிடும் என்றும், பிஇ ரேஞ்ச் கார்கள் 2025ம் ஆண்டு அக்டோபரில் விற்பனைக்கு வரும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் மஹிந்திரா எக்ஸ்யூவி.இ9 கார் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது வரும் ஏப்ரல் 2025ல் தயாரிப்பு ரெடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் முற்றிலும் புதிய கார் எந்த பழைய மாடலின் தழுவலும் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. இது நீளத்தைப் பொருத்தவரை 4790 மிமீ, கொண்டது. அகலம் 1905 மிமீ, உயரம் 1690 மிமீ, வீல் பேஸ் 2775 மிமீ அளவுகளைக் கொண்டது.

மஹிந்திரா எக்ஸ்யூவி பிஇ.05 காரை பொருத்தவரை சற்று சிறிய காராகும். இது நீளம் 4370 மிமீ, அகலம் 1900 மிமீ, உயரம் 1690 மிமீ, இந்த கார் பிரிமியம் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட் காராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கார்கள் குறித்த தொழிற்நுட்ப தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. காருக்குள் இருக்கும் அம்சங்கள் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.

ஆனால் டிஸ்பிளே செய்யப்பட்ட எக்ஸ்யூவி பிஇ.05 கான்செப்ட் எஸ்யூவி காரில் காரின் உள்ள பெரிய ஸ்கிரின் பொருத்தப்பட்டுள்ளது. இது இன்ஃபோடெயின்மெண்ட், மற்றும் டிரைவர் சீட்களில் இந்த டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. முக்கிய அம்சமாக டிஜிட்டல் ஸ்பீடு டிஸ்பிளே காரின் ஸ்டிரிங் வீலில் பொருத்தப்பட்டுள்ளது. காரின் உட்புறம் பிளஷ் ஃபேப்ரிக்-லேய்டு டேஷ்போர்டு மற்றும் கர்வ்டு சென்டர் கன்சோல் ஆகிய அம்சங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









