எல்லாம் ஓகே... டெஸ்லா இந்தியாவுக்கு வர யோசிப்பது இதனால்தான்!! மத்திய அரசு கவனிக்குமா?
இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் வேகமாக விரிவடைந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், நம் இந்தியாவில் தான் இவி-களுக்கான மார்க்கெட் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது. பிரபல அமெரிக்க கார் நிறுவனமான டெஸ்லா இந்திய சந்தையில் நுழைந்த பிறகு இந்த நிலை மாறிவிடும் என மத்திய அரசு நம்புகிறது.
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், டெஸ்லாவின் உலகளாவிய மார்க்கெட்டை விரிவுபடுத்துவது மற்றும் இந்திய சந்தையிலும் அதுகுறித்து முயற்சி செய்வது என தொடர்ந்து நிறுவனத்தை உயிர்பிப்புடன் வைத்திருக்க முயற்சி செய்து வருகிறார். இருப்பினும், கணிசமான சலசலப்பு இருந்தபோதிலும், டெஸ்லாவின் இந்திய வருகை மீண்டும் மீண்டும் தாமதமாகி வருகிறது.

இந்த தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன... இந்திய சந்தையில் நுழைவதற்கு முன் டெஸ்லா கடக்க வேண்டிய தடைகளை இந்த செய்தியில் ஆராய்வோம். இந்தியாவில் நுழைவதில் டெஸ்லாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலானது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு (EV கள்) பொருத்தமான உள்கட்டமைப்பு இங்கு இல்லாதது ஆகும்.
நிலையான தீர்வுகள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களில் இந்தியா கவனம் செலுத்தி வரும் நிலையில், சார்ஜிங் நிலையங்கள் போன்ற தேவையான உள்கட்டமைப்புகள் நாடு முழுவதும் பரவலாக இல்லை. எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்புடன், உலகத்தரம் வாய்ந்த சேவையை வழங்குவது இந்தியாவில் டெஸ்லாவுக்கு சிரமமான பணியாக இருக்கலாம்.

டெஸ்லாவின் இந்திய வருகைக்கு மற்றொரு குறிப்பிடத்தக்க தடையாக, இந்தியாவில் கார்கள் மீது அதிக இறக்குமதி வரி உள்ளது. இந்தியாவில் உள்ள அதிக இறக்குமதி வரிகள் குறித்து மஸ்க் அவர்களே ஒருமுறை டுவிட்டரில் தனது கவலையை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் டெஸ்லா கார்களை அதிக விலையில் விற்க வேண்டிவரும், இது அவற்றின் சந்தை விரிவாக்கத்தை பாதிக்கும்.
இந்திய சந்தையில் போட்டியாக விலை நிர்ணயம் செய்வது முக்கியமானது, மேலும் அதிக இறக்குமதி வரி இதற்கு சவாலாக இருக்கலாம். இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான பொதுவான உணர்வு நேர்மறையானதாக இருந்தாலும், ஆடம்பர எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை மிகவும் சிறியதாகவே இப்போதைக்கு தெரிகிறது.

பெரும்பான்மையான இந்திய நுகர்வோர் இன்னும் விலையை உன்னிப்பாக பார்த்தே கார்களை வாங்குகின்றனர். மேலும் டெஸ்லா கார்கள் அளவிற்கு கூட எலக்ட்ரிக் காருக்கென பணத்தை செலவழிக்க தயாராக இல்லை. காருக்கு பிரீமியம் விலை மற்றும் மதிப்பு இடையே சரியான சமநிலையை உருவாக்குவது டெஸ்லா நிறுவனத்திற்கு மற்றொரு சவாலாக இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தடைகள் இருந்தபோதிலும், டெஸ்லா இந்தியாவுக்குள் நுழைவது நாட்டின் எலக்ட்ரிக் வாகன தொழில்துறைக்கு ஊக்கத்தை அளிக்கும் என்பதை மறுக்க முடியாது. தடைகள் உண்மையில் குறிப்பிடத்தக்கவை என்றாலும், அவை கடக்க முடியாதவை அல்ல. சரியான உத்திகள், ஒத்துழைப்புகள் மற்றும் அரசாங்க ஆதரவுடன், டெஸ்லா விரைவில் இந்தியாவுக்குள் கால்பதிக்க ஒரு யுக்தியை கண்டறியலாம். டெஸ்லாவின் வருகைக்காக ஆவலுடன் காத்திருப்பவர்களுக்கு, இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும்!


Click it and Unblock the Notifications









