மாருதி கதையே காலி செய்யப்போகும் மஹிந்திரா! இப்படி ஒரு காரை இறக்குனா யாரு தான் வாங்க மாட்டாங்க?
இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா நிறுவனம், வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியன்று அன்று, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தார் ராக்ஸ் என்ற ஐந்து டோர் கொண்ட எஸ்யூவியை வெளியிட உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட டீஸர் வீடியோ, புதிய மாடலின் முன்னோட்டத்தை வழங்கியுள்ளது, அதன் முன்னோடியை விட அதிக பிராக்டிக்கல் மற்றும் வசதியானதாக இருக்கும் என்று தெரிகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரிலிஇலிருந்து தார் ராக்ஸ் காரில் இடம்பெறும் ஏழு அம்சங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
மஹிந்திரா தார் ராக்ஸ் இந்திய சந்தையில் 15 ஆகஸ்ட் 2024 அன்று அறிமுகமாகும். அதன் அறிமுகத்திற்கு முன்னதாக, 3 டோர் கொண்ட தார் கார் வெர்ஷனில் இல்லாத சில அம்சங்கள் 5 டோர் கொண்ட தார் காரில் எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சில அம்சங்கள் இங்கே உள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரைப் போலவே, தார் ஐந்து-டோர் காரில் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (அடாஸ்) தொழிற்நுட்பம் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. தார் ராக்ஸ்,காரில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், முன் பக்க மோதல் வார்னிங் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற முக்கிய ADAS தொழிற்நுட்ப அம்சங்கள் உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ அறிமுகத்தின் போது குறிப்பிடத்தக்க உற்சாகத்தை ஏற்படுத்திய ஒரு தனித்துவமான அம்சம் அதன் முதல் பனோரமிக் சன்ரூஃப் ஆகும். இந்திய கார் வாங்குவோர் மத்தியில் அதன் பிரபலத்தைக் கருத்தில் கொண்டு, சமீபத்திய ஸ்பை ஷாட்கள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நீட்டிக்கப்பட்ட தார் ராக்ஸ் இந்த அம்சத்தையும் உள்ளடக்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன் பார்க்கிங் சென்சார்கள், இறுக்கமான இடங்களில் காரை திருப்புவதற்கு செய்வதற்கான பாதுகாப்பு அம்சம், வரவிருக்கும் தார் ராக்ஸ் காரில் முன் பக்க பார்க்கிங் சென்சார் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் ஏற்கனவே மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் இன் டாப் வேரியண்டில் கிடைக்கிறது மற்றும் மஹிந்திரா தார் ராக்ஸ்ஸின் புகைப்படத்தின் முன்பக்க லுக்கிலும் இந்த கருவி காணப்படுகிறது.
தார் ரோக்ஸைப் பொறுத்தவரை, மஹிந்திரா அதன் சப்-காம்பேக்ட் எஸ்யூவி, எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் உள்ள அதே 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தார் 3-டோர் மாடலில் உள்ள 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டிலிருந்து குறிப்பிடத்தக்க அப்டேட்டை குறிக்கிறது, இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளேவை ஆதரிக்கிறது.

மஹிந்திரா தார் ராக்ஸ், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை முழுமையாக்கும், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை போலவே, டிரைவர் டிஸ்ப்ளே 10.25 இன்ச் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிக முக்கியமான அம்சம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அம்சம் 360-டிகிரி கேமராவாகும், இது வாகனம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தின் அனைத்து சுற்றுப் லுக்கையும் ஓட்டுநர்களுக்கு வழங்குகிறது. மேலும், இந்த அம்சம் பிளைன்ட் ஸ்பாட்களை அகற்ற உதவுகிறது, குறிப்பாக குறுகலான இடங்களில் வாகனங்களை பார்க் செய்வதற்கும் அல்லது அதிக டிராஃபிக்கில் செல்லவும் இது பயன்படுகிறது.
360 டிகிரி கேமரா அம்சம் ஏற்கனவே மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் சோதனைக் கார்களில் பலமுறை காணப்பட்டது. புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஏற்கனவே இந்த அம்சத்தை கொண்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இரண்டு ஸோன் ஏசி கட்டுப்பாட்டுடன் வருகிறது, இது முன்பக்க பயணிகளுக்கு வெப்பநிலையை கைமுறையாக அமைக்க அனுமதிக்கும் வசதியாகும். இதுவும் இந்த காரில் இடம் பெறும் என காணலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா தார் ராக்ஸ் காரில் இந்த அம்சங்கள் எல்லாம் புதிதாக இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல அம்சங்கள் நாம் முன்னரே குறிப்பிட்டுள்ளதுபடி எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற காரிலிருந்து எடுக்கப்பட்ட அம்சங்களாக உள்ளன. இந்த கார் குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லவும்.


Click it and Unblock the Notifications









