தீபாவளிக்கு போனஸ் போட போறாங்க போல! காசு வந்ததும் இதுல ஒரு காரை வாங்கி போடுங்க!
பண்டிகை காலம் நெருங்கி வருவதால், இந்தியாவில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த கார் உற்பத்தியாளர்கள் தயாராகி வருகிறார்கள். மாரூதி சுஸூகி, மஹிந்திரா, ஹோண்டா மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்கள் தங்கள் சமீபத்திய காம்பேக்ட் வாகனங்களை வெளியிட தயாராகி வருகின்றன. இரண்டு மேம்படுத்தப்பட்ட செடான்கள், புதுப்பிக்கப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் வெளியாகவுள்ளன. இந்த பண்டிகை காலத்தில் விற்பனையை அதிகரிப்பதே இந்த வெளியீடுகளின் நோக்கமாக உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
புதிய மாரூதி சுஸூகி டிசையர் கார் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஷோரூம்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காம்பேக்ட் செடான் முற்றிலும் மறுவடிவமைக்கப்பட்ட வெளிப்புறம் மற்றும் உட்புறத்தை கொண்டிருக்கும். இது அதன் அம்சங்களின் பட்டியல் மற்றும் பவர் டிரெயின் ஆப்ஷன்கள் உட்பட சமீபத்திய ஸ்விஃப்ட் மாடலைப் போன்ற பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறது.

டிசையர் காரில் 1.2L Z-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின், இது மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு கிடைக்கும். சிஎன்ஜி எடிசனும் கிடைக்கும் வகையில் இது வடிவமைக்கப்படுகிறது. இதனால் ஸ்விஃப்ட் கார் எப்படி மக்கள் மத்தியில் பெயர் பெற்றதோ அதே போல இந்த காரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் புதிய தலைமுறை அமேஸ் காரை வெளியிட ஹோண்டா தயாராகி வருகிறது. அதன் போட்டியாளரான மாரூதி சுஸூகி டிசையர் காரை போலவே, அமேஸ் அதன் வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்பில் அப்டேட்களைப் பெறும். இருப்பினும், தற்போதைய இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்கள் தற்போதைய மாடலில் இருந்து மாறாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிஸான் நிறுவனத்தின் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் கார் கடந்த அக்டோபர் 4, 2024 அன்று வெளியிடப்பட உள்ளது. இந்த மிட்-சைக்கிள் அப்டேட் இந்தியாவில் பல முறை சோதனை செய்யப்பட்டிருக்கிறது. ஃபேஸ்லிஃப்ட் வாகனத்தின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்திற்கும் புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலிங்கை கொண்டு வரும், இது அதன் ஈர்ப்பை மேம்படுத்தும். பவர் டிரெயின் விருப்பங்கள் அதே போலவே இருக்க வாய்ப்புள்ளது, ஆனால் கேபினில் பாதுகாப்பு, வசதி மற்றும் வசதி தொடர்பான புதிய அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் XUV 3XOக்கான எலெக்ட்ரிக் எடிசனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. XUV 3XO EV, XUV 400 இல் உள்ளதைப் போன்ற சிறிய பேட்டரி பேக்கைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முழு சார்ஜில் 400 கிமீக்கும் அதிகமான தூரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.

டாடா பஞ்ச் EV மற்றும் நெக்ஸான் EV இன் ஃபேஸ் வேரியன்ட்களுடன் போட்டியிட்டு, இது ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான ஆரம்ப விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனம் நிச்சயம் எலெக்ட்ரிக் வாகன உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
இந்த கார் உற்பத்தியாளர்களிடமிருந்து வரும் வெளியீடுகள் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விருப்பங்களை வழங்குவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. பல்வேறு பிரிவுகளில் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்துடன், இந்த மாடல்கள் பல்வேறு விருப்பங்களை பூர்த்தி செய்கின்றன, அதே நேரத்தில் மலிவுத் தன்மையை பராமரிக்கின்றன.
வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலர் கார் வாங்கும் எண்ணத்தில் இருப்பார்கள். இவர்களுக்கு இந்த கார்கள் எல்லாம் ஒரு பொண்ணான வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த கார்கள் எல்லாம் புதிதாக அறிமுகமாவதால் கார் வாங்கும் முடிவை எடுக்கும் நிலையில் இருக்கும் மக்கள் பலர் இந்த காரை வாங்கும் முடிவை எடுக்க வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பண்டிகைகாலத்தில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது முக்கியமான தயாரிப்புகளை களம் இறக்கும். இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான விற்பனையை அந்நிறுவனத்தால் பெற முடியும் என்ற நோக்கில் இதை செய்கிறது. இந்த பட்டியலில் இந்தாண்டு அறிமுகமாகவுள்ள கார்கள் எல்லாம் சிறப்பான விற்பனையை பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









