மாருதின்னா சும்மாவா! டாடா, மஹிந்திரான்னு யாரு போட்டிக்கு வந்தாலும் கிட்ட கூட நெருங்க முடியாது!
2025 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் கார் விற்பனை மிதமான அதிகரிப்பைக் கண்டது. ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு (FADA) வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 1.55% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது 5,345 கூடுதல் கார்கள் விற்பனையாகி, அந்த மாதம் மொத்தம் 3,49,939 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. பல்வேறு கார் பிராண்டுகளின் செயல்பாடுகள் மாறுபட்டிருந்தாலும், இந்த வளர்ச்சி ஆட்டோமொபைல் துறையில் நிலையான தேவை இருப்பதைக் குறிக்கிறது.
மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் இந்தியாவின் விருப்பமான கார் பிராண்டாக மாருதி சுஸூகி தொடர்ந்து தலைமைப் பதவியில் இருந்து வருகிறது. 39.44% சந்தை பங்கு இதற்கு உள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 0.83% சிறிய வீழ்ச்சி இதற்கு ஏற்பட்டுள்ளது. 2025 ஏப்ரலில் 1,38,021 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இது 1,39,173 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதன் விளைவாக மாருதி சுஸூகிக்கு 1,152 கார்கள் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டை விட 25.09% அதிகரித்து 48,405 கார்கள் விற்பனையானதன் மூலம் மஹிந்திரா ஆட்டோ இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் பாரம்பரிய கார்களை விட SUVக்களுக்கு பெயர் பெற்றது. அதன் விற்பனை எண்கள், பிராண்டின் வலுவான மார்கெட் இருப்பு மற்றும் பெரிய வாகனங்களுக்கான நுகர்வோரின் விருப்பத்தைக் காட்டுகிறது.
டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன. அவற்றின் விற்பனை எண்கள் கிட்டத்தட்ட சமமாக உள்ளன. டாட்டா மோட்டார்ஸ் 44,065 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன, கடந்த ஆண்டை விட 6.07% குறைந்துள்ளது. ஹூண்டாய் 43,642 கார்கள் விற்பனையானதால் 11.37% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. டாடா 2,850 கார்களையும் ஹூண்டாய் 5,601 கார்களையும் இழந்து, இரண்டு நிறுவனங்களும் விற்பனை அளவில் வீழ்ச்சியைக் கண்டன.

ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களைப் பிடித்த டொயோட்டா மற்றும் கியா நிறுவனங்களும் பாராட்டுக்குரிய செயல்திறனைக் காட்டின. டொயோட்டா கடந்த ஆண்டை விட 15.70% வளர்ச்சியைப் பதிவு செய்து 23,344 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. கியா 9.15% அதிகரித்து 21,618 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இந்த எண்கள் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் போட்டித்தன்மையையும், பல்வேறு பிரிவுகளில் நுகர்வோரின் மாறுபட்ட விருப்பத்தையும் வெளிப்படுத்துகின்றன.
கைலாக் வெளியீட்டைத் தொடர்ந்து SAVWIPL (ஸ்கோடா ஆட்டோ VW இந்தியா பிரைவேட் லிமிடெட்) விற்பனையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டது. கடந்த ஆண்டை விட 39.48% அதிகரித்து 9,458 கார்கள் விற்பனையாகியுள்ளன. JWS MG மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ர்ல் 14,16% விற்பனை அதிகரித்துள்ளது. மொத்தம் 4871 கார்கள் விற்பனையாகியுள்ளது.
சொகுசு துறையில், மெர்சிடிஸ்-பென்ஸ் கடந்த ஆண்டை விட 18.63% விற்பனை வீழ்ச்சியைப் பதிவு செய்து 1,323 கார்கள் விற்பனையானாலும், இந்தியாவின் டாப் சொகுசு கார் பிராண்டாகத் தொடர்கிறது. BMW 1,234 கார்கள் விற்பனையானதன் மூலம் 2.91% லேசான வீழ்ச்சியைக் கண்டது. மொத்த மார்கெட் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், இந்தியாவில் சொகுசு வாகனங்களுக்கான தொடர்ச்சியான தேவையைக் காட்டுகிறது.
மற்ற குறிப்பிடத்தக்க செயல்திறன்களில், BYD சில்லறை விற்பனையில் ஜீப்பை விஞ்சியது. இது இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை வெளிப்படுத்துகிறது. ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகியவை விற்பனையில் வீழ்ச்சியைக் கண்டன. ரெனால்ட் 29.88% வீழ்ச்சியையும் நிஸான் 19.35% வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது.
அதேசமயம், ஃபோர்ஸ், JLR (ஜாகுவார் லேண்ட் ரோவர்) போன்ற பிராண்டுகள் மற்றும் பிற பிராண்டுகள் மாறுபட்ட வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியைக் காட்டின. இது மார்கெட்டில் நுகர்வோரின் பல்வேறு விருப்பங்களை வெளிப்படுத்துகிறது. இந்த விற்பனை நிச்சயம் மார்கெட்டில் மாறி வரும் மாற்றங்களை நமக்கு காட்டுகிறது. இந்த கார் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களை மாருதி நிறுவனம் தான் தயாரித்துள்ளது.
இந்தியாவில் வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இன்று மிடில் கிளாஸ் மத்தியில் நீண்ட ஆண்டுகளாக கார் வாங்க வேண்டும் என்று இருந்த கனவு நினைவாகி வருகிறது. வாகனம் வாங்கும் பலர் புதிய தலை முறையாக வாகனம் வாங்குகிறார்கள். பலர் இன்று வளர்ந்து கார் ஒரு அத்தியவசிய தேவை என்பதை உணர்ந்து வாகனங்களை வாங்கி வருகின்றனர்.
இன்று கார் வாங்குவது சற்று எளிதான விஷயம் தான். கார் வாங்க கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன் மூலம் ஒருவரால் சுலபமாக கார் வாங்கிவிட முடியும். மேலும் வாகனங்களுக்கு பெரும் பகுதி கடனாக வழங்கப்படுகிறது. இதன் காரணமாக பலர் வாகனங்களை வாங்கும் முடிவை எடுக்கின்றனர். இன்று விற்பனையாகும் பெரும்பாலான கார்கள் கடன் மூலம் தான் வழங்கப்படுகின்றன.
இன்று வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் குறைந்த வட்டியில் தான் வழங்கப்படுகிறது. இந்தியாவில் வாகன விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு வாகனங்களுக்காக குறைந்த வட்டி விகிதத்தை தான் வைத்துள்ளது. இதனால் மக்களால் எளிதாக வாகனம் வாங்க முடிகிறது. தற்போது பெட்ரோல், டீசல் கார்களை விட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு கூடுதல் கடன் வேறு வழங்கப்படுகிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு விதமான சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் அதிக விலையில் உள்ள வாகனங்கள் தற்போது குறைவான விலையில் கிடைக்கின்றன. இதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை நல்ல வாய்ப்பாக பார்க்கின்றனர்.
ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க சிலர் தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கு பொருளாதார சிக்கலை விட தொழிற்நுட்ப சிக்கல் தான் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் நீண்ட தூரம் பயணிக்க ஏற்றதாக இல்லை. சார்ஜ் ஏற அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. பெட்ரோல் பங்க் போல சார்ஜிங் ஸ்டேஷன்களும் அதிகமான எண்ணிக்கையில் இல்லை. இதனால் இவிகளில் மக்கள் நீண்ட தூரம் பயணிக்க யோசிக்கின்றனர். இதற்கு ஒரு தீர்வு கிடைத்துவிட்டால் போதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பெட்ரோல், டீசல் வாகனங்களையும் தாண்டி அதிகமாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025 ஏப்ரல் மாதத்தின் கார் விற்பனை தரவுகள், மிதமான வளர்ச்சியைக் கண்ட ஒரு சந்தையை வெளிப்படுத்துகின்றன. நுகர்வோர் விருப்பங்கள் மற்றும் பிராண்ட் செயல்திறன்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அதில் ஏற்பட்டுள்ளன. மாரூதி சுஸூகியின் தொடர்ச்சியான ஆதிக்கம், மஹிந்திராவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் பிற முக்கிய வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இந்திய ஆட்டோமொபைல் சூழலின் போட்டித்தன்மை மற்றும் தொடர்ந்து மாறிவரும் தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.


Click it and Unblock the Notifications








