எலெக்ஷனுக்கு கூட இவ்வளவு பரபரப்பு இல்ல! நாளை நடக்கப்போற நிகழ்ச்சிக்கு இந்தியாவே பரபரப்பாகிடுச்சு!
2025 ஆம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி (நாளை) இந்தியாவின் முன்னணி வாகன நிகழ்வான பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ தொடங்கவுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ என்ற அதன் முந்தைய அடையாளத்திலிருந்து இது பெயர் மாற்றத்தை பெற்றுள்ளது. இந்த எக்ஸ்போ குறித்த விபரங்கள், இதில் பங்கேற்கும் நிறுவனங்கள், இதில் புதிதாக பங்கேற்கவுள்ள கார்கள், பைக்குகள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்
G20 உச்சிமாநாட்டிற்குப் பிறகு புகழ் பெற்ற தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. 2025 ஜனவரி 22 வரை இந்த எக்ஸ்போ நடக்கிறது. இந்த எக்ஸ்போ 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் மற்றும் 5100 க்கும் அதிகமான சர்வதேச கண்காட்சிப் பொருட்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணி 4 வீலர் மற்றும் 2 வீலர் உற்பத்தியாளர்களை உள்ளடக்கிய அதிக அளவிலான நிறுவனங்கள் தங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளன. குறிப்பிடத்தக்க 4 வீலண பிராண்டுகளான டொயோட்டா, மாருதி சுஸூகி, ஹூண்டாய், மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், இசுஸூ, கியா, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா ஆகிய நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மெர்சிடிஸ்-பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார் பிராண்டுகளும் பங்கேற்கின்றன. வியட்நாமிய EV- பிராண்ட் வின்ஃபாஸ்ட் மற்றும் சீன EV பிராண்ட் BYD ஆகியவையும் தங்கள் தயாரிப்பை காட்சிப்படுத்துகின்றன.
2 வீலர் பிரிவில் ஏத்தர் எனர்ஜி, பஜாஜ் ஆட்டோ, பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள், ஹோண்டா ஸ்கூட்டர்கள், ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய பிரண்டுகளும் வரஉள்ளன. யமஹா இந்தியா மற்றும் ஓலா எலக்ட்ரிக் ஆகிய நிறுவனங்களும் இந்த வரிசையில் உள்ளன. சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களும் அவர்களுடன் இணைகிறது. எலெக்ட்ரிக் டூவீலர் வாகனங்களுடன் தொடர்புடைய தொழில் முனைவோர் தங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தியதால், மேலும் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படலாம்.

எலெக்ட்ரிக்4 வீலர் வாகனங்களில் கவனம் செலுத்தி பல்வேறு வாகனங்களை இந்த எக்ஸ்போ முன்னிலைப்படுத்தும். அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் மாரூதி சுசுகியின் e-விட்டாரா எலெக்ட்ரிக் SUV மற்றும் ஹூண்டாயின் கிரெட்டா EV மற்றும் ஐயோனிக் 9 ஆகிய கார்கள் உள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹாரியர் EV மற்றும் சியரா EV மாடல்களை காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். எம்ஜியின் சைபர்ஸ்டர் ரோட்ஸ்டர் மற்றும் கியாவின் EV4 ஆகிய கார்களும் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
BYD இன் சீகல் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மற்றும் மஹிந்திராவின் XEV 7e ஆகியவை இடம்பெறும். விண்ஃபாஸ்ட் நிறுவனத்தின் அறிமுகம் மற்றொரு சிறப்பம்சமாகும். பல்வேறு சந்தைப் பிரிவுகளுக்கு ஏற்ற அளவிலான அம்சங்கள் மற்றும் புதுமையான அம்சங்களை வழங்கும் அற்புதமான ரேஞ்ச்களுடன் எலெக்ட்ரிக் வாகன தொழில்துறையின் மாற்றத்தை இந்த வாகனங்கள் எடுத்துரைக்கின்றன.

இந்த நிகழ்வு மூன்று இடங்களில் நடைபெறுகிறது: புது தில்லியில் உள்ள பிரகாதி மைதானம், பாரத் மண்டபம்; துவார்காவில் உள்ள யசோபூமி; மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்திய எக்ஸ்போ மையம். பல்வேறு வகையான கூறுகளை காட்சிப்படுத்துவதன் மூலம், ஆட்டோமொபைல் உலகின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வர இது இலக்கு வைத்துள்ளது.
இந்த எக்ஸ்போவில் பங்கேற்க விரும்பும் பார்வையாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.bharat-mobility.com) மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். நுழைவதற்கு பெயர், நகரம், பின்கோடு, தங்கும் காலம், நாடு, தொலைபேசி எண், மின்னஞ்சல், வருகை தேதி போன்ற விவரங்களை உள்ளடக்கிய ஒரு படிவத்தை அவர்கள் நிரப்ப வேண்டும்.
200,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவை உள்ளடக்கிய 17 ஹால்கள் மற்றும் பெரிய வெளிப்புற இடங்களை உள்ளடக்கிய இந்த எக்ஸ்போ வாகன தொழில்நுட்பம் மற்றும் எலெக்ட்ரிக் வாகன துறையில் முன்னணி முன்னேற்றங்களை காட்சிப்படுத்தும் வாகனத் துறையில் ஒரு மைல்கல் நிகழ்வாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் வாகன உலகில் நடக்கவுள்ள உள்ள இந்த எக்ஸ்போ குறிப்பிடத்தக்க நிகழ்வுவாக பார்க்கப்படுகிறது. இது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதால், பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆட்டேமொபைல் துறையை அடுத்த கட்டத்திற்கு தள்ளும் புதிய தொழிற்நுட்பங்கள் மற்றும் புதுமைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் எதிர்கால டிரெண்டுகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது தெளிவாகிறது!


Click it and Unblock the Notifications









