இதெல்லாம் காஸ்ட்லி யாரும் வாங்க மாட்டாங்கனு நினைச்சோம்! ஆனா 50,000 பேர் வாங்கிட்டாங்களாம்!
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (எச்.சி.ஐ.எல்) தனது 50,000 கார்களில் ஹோண்டா சென்சிங் மேம்பட்ட டிரைவர் உதவி சிஸ்டத்தை (அடாஸ்) பொருத்தி இந்தியாவில் சாலை பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2050 ஆம் ஆண்டிற்குள் போக்குவரத்து மோதல் இறப்புகளை குறைப்பதற்காக அந்நிறுவனத்தின் இலக்கை நோக்கி இது ஒரு முக்கியமான படியாகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ஏ.டி.எஸ் சிஸ்டத்தின் அறிமுகம் 2022 மே மாதம் சிட்டி e:HEV மூலம் தொடங்கியது. இது இந்தியாவின் முதல் வலுவான ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனமாகும். இது போன்ற தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. அப்போதிருந்து, ஹோண்டா 2023 மார்ச்சில் ஹோண்டா சிட்டி, 2023 செப்டம்பரில் ஹோண்டா எலவேட் மற்றும் 2024 டிசம்பரில் ஹோண்டா அமேஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய தனது அடாஸ் சிஸ்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. இது இந்தியாவின் குறைந்த விலை அடாஸ் பொருத்தப்பட்ட காராக இருக்கும்.

பல்வேறு கார் பிரிவுகளில் அதிக வாடிக்கையாளர்களுக்கு அடாஸ் தொழில்நுட்பத்தை அணுகுவதற்கான அதன் முன்னோடி முயற்சிகள் மூலம் ஹோண்டாவின் பாதுகாப்புக்கான உறுதிப்பாடு தெளிவாகிறது. குறிப்பாக, 2023 இல் ஹோண்டா சிட்டியுடன் மேனுவல் கியர் வேரியன்ட்களில் அடாஸ் வழங்கிய முதல் நிறுவனம் ஹோண்டா. இந்த முயற்சி கார் மாடல் அல்லது கியர் பாக்ஸ் வகையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஹோண்டாவின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
ஹோண்டாவின் அடாஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் வாடிக்கையாளர் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விற்பனை தரவுகள் ஹோண்டா சிட்டி வா பெரும்பாலானவர்கள் (95%) அடாஸ் உடன் கூடிய மாடல்களைத் தேர்வு செய்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. எலவேட்டிற்கு, 60% வாடிக்கையாளர்கள் அடாஸ் இயக்கப்பட்ட எடிசன்களை விரும்புவதோடு, 30% அமேஸ் வாடிக்கையாளர்கள் அடாஸ் தொழில்நுட்பத்தைத் தேர்வு செய்கிறார்கள்.

குறிப்பிடத்தக்க வகையில், அடாஸ் வாடிக்கையாளர்களில் பாதி பேர் தங்கள் வாகனங்களுக்கான முக்கிய காரணமாக மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை முன்னிலைப்படுத்துகிறார்கள். இது செயலில் பாதுகாப்பு தொழிற்நுட்பங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கான அதிகரித்து வரும் விழிப்புணர்வு மற்றும் விருப்பத்தை குறிக்கிறது.
ஹோண்டா சென்சிங் தொழிற்நுட்பம் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை வழங்க உயர் செயல்திறன் கொண்ட முன்பக்க வியூ கேமராவையும், மேம்பட்ட கண்டறிதல் அமைப்பையும் பயன்படுத்துகிறது. இவற்றில் கொலிஷன் மிட்டிகேஷன் பிரேக்கிங் சிஸ்டம் (சி.எம்.பி.எஸ்), அடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் (ஏ.சி.சி), ரோடு டிப்பார்ச்சர் மிட்டிகேஷன் (ஆர்.டி.எம்), லேன் கீப் அசிஸ்ட் சிஸ்டம் (எல்.கே.ஏ.எஸ்), முன் பக்க கார் டிபார்ச்சர் நோட்டிஃபிகேஷன் (எல்.சி.டி.என்) மற்றும் ஆட்டோ ஹை-பீம் (ஏ.எச்.பி) ஆகியவை உள்ளன.

ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மார்கெட்டிங் மற்றும் விற்பனை துணைத் தலைவர் திரு. குணால் பெஹ்ல், இந்த சாதனையைப் பற்றி பேசியுள்ளார், "ஹோண்டா கார்ஸ் இந்தியாவில், பாதுகாப்பு என்பது நாம் செய்யும் அனைத்திலும் மையமாக உள்ளது. இந்திய சாலைகளில் 50,000 அடாஸ் இயக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளோம், அனைவருக்கும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நமது தளர்வற்ற உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
இந்த சாதனை நமது உலகளாவிய பாதுகாப்பு பார்வைக்கு ஏற்றது மட்டுமல்லாமல் மேம்பட்ட டிரைவர் உதவி தொழில்நுட்பங்களுக்கு இந்திய வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் விருப்பத்தையும் ஏற்புடையதையும் நிரூபிக்கிறது. ஆக்டிவ் மற்றும் பேசிவ் பாதுகாப்பு அம்சங்களை தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலம் எங்கள் வாகனங்களை பாதுகாப்பானதாக மாற்றுவதற்காக நாங்கள் ஒவ்வொரு நாளும் பணியாற்றுகிறோம், அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான டிரைவிங் அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறோம்."
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டாவின் வாகன வரிசையில் இப்போது அடாஸ் தொழிற்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இந்த பிராண்ட் இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. நவீன டிரைவர் உதவி தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம், ஹோண்டா பாதுகாப்பான இயக்கத்தின் தனது பணியை நோக்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து, இந்திய சாலைகள் ஒவ்வொரு டிரைவருக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பானதாக மாறுவதை உறுதி செய்கிறது.


Click it and Unblock the Notifications









