இன்னும் 1 வாரத்துல கார் வாங்குனா இப்படி ஒரு லாபம் கிடைக்குமா? இது தெரியாம போச்சே!
ஹோண்டா நிறுவனம் வரும் ஜனவரி முதல் தனது கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. மற்ற நிறுவனங்களை போல ஹோண்டா நிறுவனமும் விலை உயர்வை அறிவித்துள்ளது.இது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேநேரம் இந்த மாதமே கார் வாங்கினால் விலை குறைவாக கிடைக்கும் இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வழக்கமாக ஹோண்டா நிறுவனம் 2 மாதங்களுக்கு ஒரு முறை தனது தயாரிப்புகளின் விலையில் மாற்றங்களை கொண்டு வரும். இதன்படி தயாரிப்பு செலவு, மூலப்பொருட்களுக்கான விலை உயர்வு, போக்குவரத்து கட்டணம், ஆகியவற்றை ஆய்வு செய்து விலை உயர்வை கொண்டு வரும்.

இதில் உதிரி பாக விலை என்றால் மெட்டல் ஷீட் விலைகள், எலெக்ட்ரானிக் பாங்கள், பிளாக்டிக் பாகங்களின் விலை எல்லாம் ஆய்வு செய்யப்படும் அது கிடைக்கும் தன்மை பொருத்து விலை முடிவு செய்யப்படும். இந்த விலை உயர்வு 2026ம் ஆண்டிற்கு பிறகு தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு மட்டும் தான் விலைஉயர்வு அதாவது நீங்கள் ஜனவரி மாதம் கார் வாங்க சென்றால் 2025ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களுக்கு ஒரு விலலையும் 2026ல் தயாரிக்கப்படும் கார்களுக்கு ஒரு விலையும் இருக்கும்.
இது மட்டுமல்ல 2025ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களுக்கு விலை தள்ளுபடிகள் கூட வழங்கப்படலாம். ஸ்டாக்கை காலியாக்க இப்படியான தள்ளுபடிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இது 2026ம் ஆண்டு பிறந்த பிறகு தான் அறிவிப்புகள் வெளியாகும்.

இதனால் நீங்கள் கார் வாங்கும் முடிவில் இருந்தால் உங்களுக்கு பட்ஜெட்டை கம்மி செய்யும் எண்ணம் இருந்தால் இப்பொழுதே காரை வாங்கலாம். இதுஒரு விதமான சேமிப்பை தரும். அல்லது புத்தாண்டு பிறந்த பிறகு பழைய ஸ்டாக் கார்களை வாங்கினால் நிச்சயம் உங்களுக்கு தள்ளுபடியுடன் கார்கள் கிடைக்க வாய்ப்புள்ளுது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி விலையில் மாற்றம் இருக்கும் என்றே தெரிகிறது. எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு விலை உயர்வு என்ற விபரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. விரைவில் இது குறித்தஅறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். விலைகுறைய வாய்ப்பில்லை. மாறாக விலை ஏறதான் வாய்ப்புள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டு தற்போது கார் வாங்கும் எண்ணத்தில் இருந்தால் உடனடியாக தங்கள் கார்களை புக் செய்து அதற்கான பணத்தை செலுத்தினால் குறைந்த விலையில் வாகனங்கள் கிடைக்கும்.அடுத்த மாதம் கார் வாங்கினால் அப்பொழுது உள்ள புதிய ஸ்டாக் கார்கள் விலை அதிகமாக கிடைக்கும்.நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி விலையில் மாற்றம் இருக்கும் என்றே தெரிகிறது. எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு விலை உயர்வு என்ற விபரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. விரைவில் இது குறித்தஅறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். விலைகுறைய வாய்ப்பில்லை. மாறாக விலை ஏறதான் வாய்ப்புள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டு தற்போது கார் வாங்கும் எண்ணத்தில் இருந்தால் உடனடியாக தங்கள் கார்களை புக் செய்து அதற்கான பணத்தை செலுத்தினால் குறைந்த விலையில் வாகனங்கள் கிடைக்கும்.அடுத்த மாதம் கார் வாங்கினால் அப்பொழுது உள்ள புதிய ஸ்டாக் கார்கள் விலை அதிகமாக கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:புத்தாண்டு அல்லது டிசம்பர் காலகட்டத்தில் கார் வாங்கினால் ஒவ்வொரு ஆண்டும் லாபம் கிடைக்கும் ஆனால் அதற்கு ரீவேல்யூ குறைவாக இருக்கும். அப்படி என்றால் இப்பொழுது நீங்கள் வாங்கினால் 2025 மாடலாக இருக்கும். ஆனால் இன்னும் 10 நாளில் கார் வாங்கினால் 2026 மாடலாக இருக்கும் இன்னும் 10 நாளுக்கு நீங்கள் ஒரு ஆண்டு வேல்யூவை இழக்கப்போகிறீர்களா?


Click it and Unblock the Notifications








