குடும்பத்தோட போகலாம்! மைலேஜூம் ஜாஸ்தியா கிடைக்கும், ஹூண்டாயின் இந்த காரை தான் ஊரே எதிர்பார்க்குது!
இந்தியாவில் புதிய சி-செக்மென்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்த ஹூண்டாய் தயாராகி வருகிறது, இது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ni1i எனும் கோடு பெயரில் அழைக்கப்படும் இந்த மாடல், ஹூண்டாய் வரிசையில் டூஸான் மற்றும் அல்கஸாருக்கு இடையே இடம்பெறும். புனே அருகே உள்ள தாலேகான் தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெறும், அங்கு அடுத்த தலைமுறை வென்யூவும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் உற்பத்தி செய்யத் தொடங்கும்.
டாடா சஃபாரி, மஹிந்திரா எக்ஸ்யூவி700, மற்றும் எம்ஜி ஹெக்டர் பிளஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக ni1i எஸ்யூவி உள்ளது. இது சிறந்த எரிபொருள் திறனை வழங்கும் ஹைப்ரிட் பவர் டிரெயனை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாரூதி சுஸூகி மற்றும் டொயோட்டா போன்ற பிராண்டுகள் ஹைப்ரிட் தொழிற்நுட்பத்தை மேம்படுத்தியுள்ள நிலையில், ni1i இந்த வளர்ந்து வரும் போட்டியில் சேர்க்கிறது.

ஹூண்டாயின் இந்த எஸ்யூவி 1.5L நேச்சுரலி அஸ்பயர்டு 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹைப்ரிட் வேரியன்டில் பெரிய பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் இருக்கும். இந்த சி-செக்மென்ட் எஸ்யூவியை ஹூண்டாய் ஆண்டுக்கு சுமார் 50,000 கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இது பெட்ரோல், ஹைப்ரிட் மற்றும் டீசல் போன்ற பல்வேறு பவர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் டூஸான் கார் 1.6L பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜினுடன் கூடுதலாக பிளக்-இன் ஹைப்ரிட் எடிசனையும் கொண்டுள்ளது. அடுத்த தலைமுறை கியா செல்டோஸ், 2026 இல் வெளியாகும், ஹைப்ரிட் பவர் ஆப்ஷனை ஏற்றுக்கொள்ளும் என்று நம்பபடுகிறது. ni1i கார் சீனாவில் கிடைக்கும் அந்நிறுவனத்தின நீளமான டூஸானிலிருந்து வடிவமைப்பு ஈர்ப்பை பெறலாம். இது 4.68 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும்.

ni1i யின் நீட்டிக்கப்பட்ட வடிவமைப்பு அல்கசாரை விட அதிகமான கேபின் இடத்தை வழங்கும், இது ஹூண்டாயின் வரிசையில் பிரீமியம் விருப்பமாக அமைகிறது. இந்த நடவடிக்கை இந்தியாவில் ஹூண்டாயின் எஸ்யூவி வழங்கல்களை விரிவுபடுத்துவதற்கான ஹூண்டாயின் உத்திக்கு ஏற்ப, பல புதிய மாடல்கள் வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.
ஹூண்டாயின் ni1i இந்தியாவில் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் முதல் எஸ்யூவி கார் இது தான், அதிக மைலேஜ் திறன் மற்றும் குறைக்கப்பட்ட மாசு வெளியீட்டை இலக்காக கொண்டுள்ளது. கூடுதலாக, 2027 இல் வெளியாகும் அடுத்த தலைமுறை கிரெட்டா காரும் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைப்ரிட் தொழில்நுட்பத்திற்கான பிராண்டின் கவனம், ஆட்டோமொபைல் துறையில் ஸ்டெபிலிட்டி மற்றும் புதுமைக்கான அதன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இத்தகைய மாடல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், சந்தேகத்திற்குரிய நுகர்வோருக்கு ஹூண்டாய் பதில் அளிக்கிறது மற்றும் அதன் மார்கெட் இருப்பை மேம்படுத்துகிறது. ஹூண்டாய் அதிக வாடிக்கையாளர்களை கவர இந்த யுக்தியை பின்பற்றுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் எஸ்யூவி பிரிவில் ஹூண்டாய் தொடர்ந்து விரிவடைவதால், மாறுபட்ட நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்யும் பல்வேறு ஆப்ஷன்களை வழங்க முயற்சிக்கிறது. ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் அறிமுகம் இந்த இலக்குகளை அடைய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். இதனால் இந்த காரின் விற்பனை அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications









