மார்ச் 31க்குள் வாங்கினால் கம்மி ரேட்ல கிடைக்கும்! அப்புறம் இந்த கம்பெனி கார் விலை எக்கசக்கமா ஏறப்போகுது!
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) ஏப்ரல் 2025 முதல் தொடங்கி அதன் வாகன ரேஞ்சில் 3% வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. உயரும் வாகன தயாரிப்பு செலவுகள், அதிகரித்த பொருட்களின் விலைகள் மற்றும் அதிகரித்த இயக்கச் செலவுகள் ஆகியவை இந்த முடிவுக்குக் காரணம் என தெரிவித்துள்ளது. மாடல் மற்றும் வேரியன்டை பொறுத்து விலை உயர்வு மாறுபடும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
HMIL இன் முழுநேர இயக்குநரும், தலைமை இயக்க அதிகாரியுமான திரு. தருண் கார்க், இந்த விலையேற்றத்தின் அவசியத்தை விளக்கினார். "ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம், எங்கள் வாடிக்கையாளர்கள் மீதான தாக்கத்தை குறைவாக வைத்துக் கொண்டு உயரும் செலவுகளை எவ்வளவு தூரம் சாத்தியமோ அவ்வளவு தூரம் குறைக்க முயற்சிக்கிறோம். இருப்பினும், இயக்கச் செலவுகளில் நிலையான அதிகரிப்பு இருக்கிறது.

இந்தச் செலவு உயர்வை ஒரு சிறு விலை அதிகரிப்பு மூலம் ஒரு பகுதியை மாற்றுவது இப்போது கட்டாயமாகிவிட்டது. விலை உயர்வு ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும். எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மீதான எந்தவொரு எதிர்கால தாக்கத்தையும் குறைக்காமல் தொடர்ந்து சிறந்த முயற்சிகளை மேற்கொள்வதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்."
விலைகளை உயர்த்துவதில் ஹூண்டாய் மட்டும் இல்லை; மாருதி சுஸூகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, கியா மற்றும் ஹோண்டா போன்ற இந்தியாவிலுள்ள பிற முக்கிய வாகன உற்பத்தியாளர்களும் ஏப்ரல் 2025 முதல் இதுபோன்ற உயர்வுகளை அறிவித்துள்ளனர். உயரும் உள்ளீட்டு செலவுகள், சப்ளை செயின் பிரச்சினைகள் மற்றும் அதிகரித்த இயக்கச் செலவுகள் ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. உற்பத்தியாளர்கள் லாபத்தை பராமரிப்பதோடு, தயாரிப்பு தரத்தையும் உறுதிப்படுத்த விரும்புகின்றனர்.

ஹூண்டாயின் விலை உயர்வின் துல்லியமான தாக்கம் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட மாடல் மற்றும் வேரியன்டை பொறுத்தது. ஹூண்டாய் இந்தப் பிரிவை விரிவாக விளக்கவில்லை என்றாலும், ஏப்ரல் 2025 க்கு முன்பு இந்த நிறுவனத்தின் காரை வாங்குவது வாடிக்கையாளர்களுக்கு அதிக விலையைத் தவிர்க்க உதவும். வாகன உற்பத்தியாளர்கள் பணவீக்க அழுத்தங்கள் மற்றும் சப்ளை செயின் குறுக்கீடுகளை எதிர்கொள்ளும்போது இந்த நடவடிக்கை தொழில்துறை முழுவதும் பரவலான டிரெண்டை பிரதிபலிக்கிறது.
பிப்ரவரி 2025 இல், ஹூண்டாய் மோட்டார் இந்தியா 47,727 கார்களை உள்நாட்டு விற்பனையில் பதிவு செய்தது, இது பிப்ரவரி 2024 இல் 50,201 கார்களில் இருந்து 4.93% குறைவாகும். கிரெட்டா மற்றும் வென்யூ ஆகி கார்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டன; கிரெட்டா (EV உட்பட) 6.81% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியுடன் 16,317 கார்கள் விற்பனையைப் பதிவுசெய்தது. அதே சமயம் வென்யூ கடந்த ஆண்டை விட 13.34% அதிகரித்து 10,125 கார்கள் விற்பனையைப் பதிவுசெய்தது.

இருப்பினும், சில மாடல்கள் விலை குறைவை சந்தித்தன. கடந்த ஆண்டின் 7,582 கார்களை விடக் குறைவாக 5,361 கார்கள் மட்டுமே விற்பனையானதால் எக்ஸ்டர் 29.29% என்ற ஷார்ப்பான வீழ்ச்சியைக் கண்டது. இதேபோல், i20 ஹேட்ச்பேக் 29.31% வீழ்ச்சியை சந்தித்தது. விற்பனை 3,627 கார்களாக குறைந்தது. வெர்னா, டூஸான் மற்றும் அயானிக் 5 போன்ற பிற மாடல்களும் பிப்ரவரியில் குறிப்பிடத்தக்க இரண்டு இலக்க வீழ்ச்சியைப் பதிவு செய்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனத் துறையில் பணவீக்க அழுத்தங்கள் மற்றும் மாறும் விலைமதிப்பு பொருட்கள் போன்ற சவால்களை வாகன உற்பத்தியாளர்கள் சமாளிக்கும்போது ஹூண்டாயின் இந்த விலை உயர்வு தொழில்துறை அளவிலான யுத்திகளுடன் ஒத்துப்போகிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விலை
உயர்வை அறிவித்துள்ளன. இது தவிர்க்க முடியாத விஷயம் தான்.


Click it and Unblock the Notifications









