எவ்வளவு சம்பாதிச்சாலும் பத்தாது! இன்னும் 5 நாளில் இந்த கார்களின் விலை எல்லாம் ஏறப்போகுது!
ஏப்ரல் 8 ஆம் தேதி முதல், இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான மாருதி சுஸூகி தனது பல மாடல்களின் விலைகளை உயர்த்த உள்ளது. இதில் அதன் பிரபலமான கிராண்ட் விட்டாரா காரும் உள்ளது. இந்த கார் மட்டுமல்லாமல் மற்ற கார்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விலை அனைத்து வேரியன்ட்களிலும் ₹62,000 வரை அதிகரிக்கப்படும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்த விலை நிர்ணயக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம், உள்ளீட்டுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் அவற்றின் வாகனங்களில் புதிய அம்சங்களை இணைத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் விலை உயர்வு தவிர்க்க முடியாததாக இருக்கறது. . இந்த நடவடிக்கை விலைகளை 4% வரை உயர்த்தப்போவதாக கூறிய அந்நிறுவனத்தின் முந்தைய அறிவிப்போடு ஒத்துப்போகிறது.

கிராண்ட் விட்டாராவுக்கு கூடுதலாக, மாருதி சுஸூகியின் பட்டியலில் உள்ள மற்ற மாடல்களும் விலை உயர்வை சந்திக்க உள்ளன. ஈக்கோ வேனுக்கான விலை ₹22,500 வரை விலை அதிகரிக்கப்பட உள்ளது. அதேசமயம் ஹேட்ச்பேக் ஆர்வலர்களால் அதிகம் விரும்பப்படும் வேகன்ஆர் கார் ₹14,000 விலை உயர்வை சந்திக்க உள்ளது.
எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய அந்நிறுவனத்தின் அதிக சீட்டர் கொண்ட வாகனங்கள் (எம்.பி.வி) இந்த விலை உயர்வை பெற்றள்ளன. இந்த இரண்டு மாடல்களும் ₹12,500 வரை விலை உயர்வை பெற்றுள்ளன. அதே நேரத்தில், ஃப்ராங்க்ஸ் சப் காம்பேக்ட் எஸ்யூவி சுமார் ₹2,500 மட்டுமே விலை உயர்வை சந்திக்க உள்ளது. இது மாருதி சுஸூகியின் தயாரிப்புகளில் பரவலான விலை உயர்வில் இருப்பதைக் குறிக்கிறது.

விலை உயர்வு வணிக வாகனத் துறைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசையர் அடிப்படையிலான செடானான டூர் எஸ் ₹3,000 மிதமான உயர்வை சந்திக்க உள்ளது. மாருதி சுஸூகியின் பட்டியலில் உள்ள மற்ற வணிக மாடல்கள் தற்போது விலை மாற்றத்தை சந்திக்காது. இந்த முக்கிய விலை ஏற்றம் அந்நிறுவனம் தொடர்ந்து மாறிவரும் சந்தை இயக்கவியல் மற்றும் செலவு கட்டமைப்புகளுக்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
2024-2025 நிதியாண்டில் மாருதி சுஸூகியின் செயல்திறன் வலுவான வளர்ச்சிப் பாதையை வெளிப்படுத்தியது. மொத்த விற்பனை 2,234,266 கார்களை எட்டியது, இது முந்தைய நிதியாண்டை விட 4.63% அதிகரிப்பு ஆகும். இந்நிறுவனத்தின் உள்நாட்டு சில்லறை விற்பனை 0.05% லேசாக உயர்ந்து 1,760,767 கார்களை எட்டியது.

குறிப்பாக, கிராண்ட் விட்டாராவை உள்ளடக்கிய யூட்டிலிட்டி வாகன பிரிவு 12.12% குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. வருடாந்திர அடிப்படையில் (YoY) 720,186 யூனிட்களை எட்டியது. இருப்பினும், ஆல்டோ கே10 மற்றும் சுவிஃப்ட் போன்ற மாடல்களை உள்ளடக்கிய பயணிகள் கார் பிரிவு YoY 7.7% சரிவை சந்தித்து 904,909 யூனிட்களில் நிறைவடைந்தது.
மாருதி சுஸூகியின் ஏற்றுமதி செயல்திறன் மிகவும் சிறப்பானது. அந்த ஆண்டில் மூன்று லட்சம் என்ற ஏற்றுமதி மைல்கல்லைத் தாண்டியது. இந்நிறுவனம் FY25 இல் மொத்தம் 332,585 கார்களை ஏற்றுமதி செய்தது. இது முந்தைய ஆண்டை விட 17.49% அதிகரிப்பைக் கொண்டுள்ளது. ஃப்ரான்ஸ் மற்றும் ஜிம்னி 5-டோர் மாடல்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் பயணிகள் வாகன ஏற்றுமதி மார்கெட்டில்ல் முன்னணி வாகன உற்பத்தியாளராக இருக்கிறது. மாருதி சுஸூகியின் முக்கிய ஏற்றுமதி இலக்குகளில் தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, சிலி, ஜப்பான் மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸூகியின் விலை உயர்வு மற்றும் அதன் செயல்திறன் அளவீடுகளின் இந்த விரிவான மதிப்பாய்வு மாறிவரும் மார்கெட் நிலைமைகள் மற்றும் செயல்பாட்டு சவால்களுக்கு இடையே அந்நிறுவனத்தின் தகவமைப்பு மற்றும் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. அதன் சர்வதேச இருப்பை விரிவுபடுத்தவும், உள்நாட்டு மார்கெட்டில் தனது நிலையை வலுப்படுத்தவும் வலுவான கவனத்துடன், மாருதி சுஸூகி புதுமையான தீர்வுகள் மற்றும் மூலோபாய திட்டமிடல் மூலம் மோட்டார் வாகனத் துறையின் சிக்கல்களை சமாளித்து வருகிறது.


Click it and Unblock the Notifications









