அரசியல்வாதிகள் எல்லாம் இந்த காரை வாங்க வரிசை கட்டி நிக்க போறாங்க! அப்படி இது என்னதான் இருக்குது?
இரண்டு மாதங்களுக்கு முன்பு, டில்லியில் நடைபெற்ற BMGE 2025 நிகழ்வில், எம்.ஜி மோட்டார் நிறுவனம், அதன் உலகளாவிய வரிசையில் இருந்து பல வாகனங்களை காட்சிப்படுத்தியது. தொழிற்நுட்பக் அம்சங்களுடன் இந்திய மார்கெட்டிற்கான புதிய மாடல்களை முன்னிலைப்படுத்தியது. மெஜஸ்டர் எனப்படும் முழு அளவிலான எஸ்யூவி, இதில் கவனத்தை ஈர்த்தது. இந்த வாகனம் இந்தியாவின் பரபரப்பான முழு அளவிலான எஸ்யூவி மார்கெட்டில் அதன் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான எம்.ஜியின் உறுதிப்பாட்டை குறிக்கிறது. இந்த காரின் அறிமுகம் உள்ளிட்ட சில முக்கிய விபரங்களை காணலாம்
இந்தியாவில் மெஜஸ்டரை அறிமுகப்படுத்துவது, மிகவும் போட்டி நிறைந்த பிரிவில் அதன் இருப்பை வலுப்படுத்துவதற்கான ஜேஎஸ்டபிள்யூ எம்.ஜி நிறுவனத்தின் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். குளோஸ்டரை விட மேலே நிலைநிறுத்தப்பட்டுள்ள மெஜஸ்டர் அதிக சொகுசு ஆப்ஷன் கொண்ட காராக கருதப்படுகிறது, டொயோட்டாவின் ஃபார்ச்சூனர் போன்ற டாப் வேரியன்ட் லெஜெண்டர் வேரியன்டிற்கு போட்டியாக இந்த கார் களம் இறங்கும். இந்த அணுகுமுறை அதிக அளவிலான நுகர்வோர் ஆப்ஷன்களை பூர்த்தி செய்வதையும் பிராண்டின் மார்கெட் பங்கை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

வரும் மாதங்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ள மெஜஸ்டர் கார், பல சர்வதேச மார்கெட்களில் வெற்றியை கண்ட மாக்சஸ் டி90 இன் அப்டேட் செய்யப்பட்ட மற்றும் மறுபெயரிடப்பட்ட எடிசனாகும். இந்திய மார்கெட்டில் அதன் என்ட்ரி, மேம்படுத்தப்பட்ட குளோஸ்டரின் வடிவத்தில் இருக்கும், ஆனால் அந்நிறுவனத்தின் ஒரே பிரிவில் வேறுபட்ட தயாரிப்புகளை வழங்கும் திட்டத்திற்கு ஏற்ப அதிக பிரீமியம் அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வரும்.
மெஜஸ்டர், அதன் நவீன தோற்றத்திற்கு பங்களிக்கும் பல வெளிப்புற அப்டேட்களுடன் குளோஸ்டரிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுகிறது. குறிப்பிடத்தக்க அப்டேட்களில் கருப்பு நிற முன் கிரில், மேம்படுத்தப்பட்ட எல்.இ.டி டிஆர்எல் மற்றும் செங்குத்தாக அமைக்கப்பட்ட எல்.இ.டி ஹெட்லைட்டுகள் ஆகியவை உள்ளன. வாகனத்தின் பின்புறம் மறுவடிவமைக்கப்பட்ட எல்.இ.டி டெயில் லைட்களுடன் ஒரு அப்டேட்டை பெறுகிறது, அதன் நவீன அழகியலை மேம்படுத்துகிறது.

அதன் மேல்தர நிலைநிறுத்தத்தை மேலும் வலியுறுத்தும் விதமாக, மெஜஸ்டர் மேம்படுத்தப்பட்ட முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டுகள், புதிய வடிவமைக்கப்பட்ட டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் டுயல் வெளியேற்ற துவாரங்கள் போன்ற பல்வேறு கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது. ஹூட் கீழ், இது குளோஸ்டரின் 2.0L டுயல் டர்போ டீசல் இன்ஜினை கொண்டுள்ளது. இது 213 bhp பவர் மற்றும் 478 Nm டார்க் திறனை வெளியிடக்கூடியது. இந்த இன்ஜின் எட்டு ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் நான்கு வீல் டிரைவ் சிஸ்டத்தை தேர்ந்தெடுக்கும் ஆப்ஷனும் உள்ளது.
இந்த காரின் உள்ளே, ஒரு சொகுசுசான டிரைவிங் அனுபவம் கிடைக்கிறது. இதற்காக நவீன அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றில் புதிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் மசாஜ் மற்றும் காற்று சுழற்சி செயல்பாடுகளுடன் எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் முன்பக்க சீட்டுகள் ஆகியவை உள்ளன. கூடுதலாக, இது லெவல் 2 அடாஸ், 360-டிகிரி கேமரா சிஸ்டம், மூன்று ஸோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு டிரைவ் மோடுகளை கொண்டுள்ளது, அதன் பயணிகளுக்கு சொகுசு மற்றும் வசதியை உறுதி செய்கிறது.

எம்.ஜி மெஜஸ்டரின் அறிமுகம், அதன் பிரீமியம் வழங்கல்கள் மற்றும் முக்கிய நிலைநிறுத்தத்துடன் இந்தியாவில் முழு அளவிலான எஸ்யூவி மார்கெட்டை உலுக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடம்பரம், தொழிற்நுட்பம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் கலவையை வழங்குவதன் மூலம், எம்.ஜி போட்டி நிறைந்த சூழலில் ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கி, பகுத்தறிவுடைய வாடிக்கையாளர்களின் கவனத்தைப் பெற விரும்புகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபார்ச்சூனர் காரை அரசியல்வாதிகள் அதிகம் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அதற்கு போட்டியாக கார்களே இல்லை என்று இருந்த நிலையில் தற்போது எம்ஜி மெஜஸ்டர் கார் அந்த இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கலாம். இதனால் அரசியல்வாதிகள் அதிகம் பயன்படுத்தக்கூடிய காராக இது மாற வாய்ப்புள்ளது!


Click it and Unblock the Notifications









