இந்தியாவை மலை போல நம்பி வெளிநாட்டுல ஆலை திறந்த நிறுவனம்! நமக்கு என்ன லாபம் தெரியுமா?
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் வியட்நாம் நாட்டில் தனது புதிய உற்பத்தி ஆலையைத் தொடங்கியுள்ளது. இந்த ஆலையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் குஷாக் மற்றும் ஸ்லாவியா மாடல்களின் உதிரி பாகங்களை ஒன்று சேர்க்கும். ஸ்கோடா குவாங் நினிங் மாகாணத்தில் இந்த உற்பத்தி ஆலையை அமைக்க அந்நாட்டில் உள்ள தாங் கங் குழுவுடன் இணைந்துள்ளது. ஸ்லாவியா செடான் உற்பத்தி இந்த ஆண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், குஷாக் இங்கே அசெம்பிள் செய்யப்படும் முதல் மாடல் கார் ஆகும்.
குவாங் நினிங் ஆலையில் வெல்டிங், பெயிண்ட் மற்றும் இறுதி அசெம்பிளி லைன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்கோடா அசெம்பிளி லைன் ஆலையின் மிகப்பெரிய பகுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு ஆலைகளில் ஒரு தரக் கட்டுப்பாட்டு மையம், துல்லியமான அளவீடு செய்யும் பகுதி மற்றும் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு சோதனைப் பாதை ஆகியவை உள்ளன.

ஸ்கோடா வியட்நாம் நாட்டில் குஷாக் மீது விரிவான சோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இது 3.30 லட்சம் கிலோமீட்டருக்கு மேல் உள்ளது. இந்த பகுதியில் இது அசெம்பிள் செய்யப்படும் அல்லது உற்பத்தி செய்யப்படும் பிற மாடல்களுக்கும் இதே போன்ற சோதனை நெறிமுறைகள் பொருந்தும். இந்த புதிய ஆலையில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு உயர் தரம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை இது உறுதி செய்கிறது.
குஷாக் SUV மற்றும் ஸ்லாவியா செடான் ஆகியவற்றின் வியட்நாம் எடிசன்கள் இடதுபுற டிரைவிங்சிஸ்டத்தை கொண்டிருக்கும். அவை அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பிளைன்டட் ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் லெதர் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றையும் கொண்டிருக்கும். இந்த அம்சங்களில் சில அவற்றின் இந்திய மாடல் அப்படியே செய்யபடாது

ஸ்கோடா ஆட்டோவின் சிஇஓ கிளாஸ் செல்மர் இந்த வளர்ச்சியைப் பற்றி குறிப்பிட்டார்: "இந்த புதிய அசெம்பிளி லைனைத் திறப்பது விரைவாக வளர்ந்து வரும் வியட்நாம் மார்க்கெட்ல் எங்கள் விரிவாக்கத்தில் ஒரு மைல்கல்லாகும் மற்றும் ஆசிய பிராந்தியத்தில் எங்கள் நிலையை வலுப்படுத்துகிறது. எங்கள் முக்கிய இந்திய மார்கெட் உடன் ஒருங்கிணைவுகளைப் பயன்படுத்துவதன் மூலம், ஸ்கோடாவுக்கு மட்டுமல்லாமல் எங்கள் உள்ளூர் கூட்டாளியான தாங் கங் குழுவுக்கும் வெற்றிக்கு வழிவகுக்கிறோம்."
இந்த மாடல்களுக்கு கூடுதலாக, ஸ்கோடா வியட்நாமில் ஐரோப்பாவிலிருந்து கரோக் மற்றும் கோடியாக் போன்ற இறக்குமதி செய்யப்பட்ட எஸ்யூவிகளை விற்பனைக்கு வழங்குிறது. இது அவர்களின் தயாரிப்பு ரேஞ்சை விரிவுபடுத்துகிறது மற்றும் அப்பகுதியில் ள்ள பல்வேறு வாடிக்கையாளர் விருப்பங்களை பூர்த்தி செய்கிறது.

ஸ்கோடா ஆட்டோவின் இந்த மூலோபாய நடவடிக்கை தென்கிழக்கு ஆசியாவில் அதன் இருப்பை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது. அதே நேரத்தில் தாங் கங் குழுவுடன் கூட்டணியைப் பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பு இரண்டு நிறுவனங்களின் மார்கெட் நிலைகளை கணிசமாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவை தாண்டி அடுத்த வளரும் நாடுகளை நோக்கி பயணிக்க துவங்கிவிட்டன. அதன் படி பார்த்தால் இந்தியா தற்போது அந்த நாடுகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் இடத்தில் இருக்கிறது. இதன் மூலம் இந்திய மெல்ல வளர்ந்த நாடாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









