இந்த காருக்கு 10 வருஷம் வாரண்டி தர போறாங்க! லைஃப்டைம்க்கு பிரச்சனை கிடையாது!
சுஸூகி ஐரோப்பாவில் e-விட்டாரா காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது, ஐரோப்பா பகுதி மற்றும் நெதர்லாந்து போன்ற சில நாடுகளில் 10 ஆண்டு வாரண்டியை கொடுக்கின்றன. இது ஐரோப்பாவில் சுஸூகியின் வழக்கமான 3 ஆண்டு / 100,000 கிமீ அல்லது 6 ஆண்டு / 150,000 கிமீ வாரண்டியில் இருந்து ஒரு குறிப்பிடத்தக்க நீட்டிப்பு ஆகும். நீட்டிக்கப்பட்ட வாரண்டி ஆரம்பத்தில் வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
e-விட்டாராவின் வடிவமைப்பு நம்பகத்தன்மை மற்றும் நீடிப்புத்தன்மை மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதை இந்த நீண்ட வாரண்டி எடுத்துக்காட்டுகிறது என்று அந்நிறுவனம் வலியுறுத்தியது. சுழுகி இந்த வாரண்டியின் கீழ் உள்ள அதிகபட்ச மைலேஜை குறிப்பிடவில்லை என்றாலும், எதிர்பார்ப்புகள் இது சுமார் 200,000 கிமீ இருக்கலாம் என்று தெரிவிக்கிறது.

e விட்டாராவின் வலுவான வாரண்டி BYD - நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 'பிளேடு' பேட்டரிகளில் சுஸூகியின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது, இது பாதுகாப்பு மற்றும் நீண்ட ஆயுள் ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற LFP செல்களைப் பயன்படுத்துகிறது. மாருதி சுஸூகி இன்னும் e விட்டாராவுக்கான வாரண்டி விவரங்களை வெளியிடவில்லை
இருந்தாலும், இரு வாரண்டி காலம் மற்றும் மைலேஜ் இரண்டும் நிலையான கார்களுக்கு வழங்குவதை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திராவும் BE 6 மற்றும் XEV 9e போன்ற மாடல்களில் இந்த பேட்டரிகளைப் பயன்படுத்துகிறது. தனியார் பதிவு மற்றும் முதல் உரிமையாளர்களுக்கு ஆயுள் உத்தரவாதத்தை வழங்குகிறது.

ஐரோப்பாவில், சுஸூகி e விட்டாராவின் மூன்று எடிசன்களை வெளியிட திட்டமிட்டுள்ளது: ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் FWD, லாங் ரேஞ்ச் FWD மற்றும் பெர்ஃபாமன்ஸ் AWD. பேஸ்மாடல் 345 கிமீ ரேஞ்சை வழங்கும் 49 kWh LFP பேட்டரியுடன் இணைந்த 106 kW மோட்டரை கொண்டுள்ளது.
நடுத்தர வேரியன்ட் 428 கிமீ ரேஞ்சை வழங்கும் 61 kWh பேட்டரியுடன் 128 kW மோட்டரை கொண்டுள்ளது.டாப் எடிசன் ஒரு கூடுதல் பின்பக்க மோட்டரை கொண்டுள்ளது. 135 kW செட்ப் வழங்குகிறது ஆனால் ரேஞ்ச் 412 கிமீக்கு குறைக்கிறது. இந்த எண்கள் WLTP பரிந்துரைக்கப்பட்ட ரேஞ்சை வழங்குகின்றன.

மாருதி சுஸூகி மே மாதத்தில் e-விட்டாராவின் உற்பத்தியைத் தொடங்கும். இதனால் அதன் உள்நாட்டு வெளியீடு நெருங்கி வருகிறது என்பதைக் குறிக்கிறது. இந்தியாவில், அந்நிறுவனம் ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் FWD மற்றும் லாங் ரேஞ்ச் FWD வேரியன்ட்களை வழங்க திட்டமிட்டுள்ளது. MIDC இன் P1 + P2 சோதனை (நகர்ப்புற + கூடுதல் நகர்ப்புற) படி 500 கிமீ ரேஞ்சை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துவது பல்வேறு மார்கெட்களில் வெவ்வேறு டிரைவிங் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப பல்வேறு விருப்பங்களை வழங்குவதற்கான சுஸூகியின் உறுதிப்பாடைக் காட்டுகிறது. இந்த கார் இந்திய மார்கெட்டில் மிகப்பெரிய அளவிற்கு வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இந்த கார் விற்பனையில் வாரண்டி விபரங்கள் இது போல இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இந்த வாரண்டிக்கு காரை மாருதி நிறுவனம் விற்பனை செய்தால் மார்கெட்டில் போட்டிக்கு உள்ள கார்களை எல்லாம் மிஞ்சி இந்த கார் சிறப்பாக விற்பனையாக வாய்ப்புள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள மார்கெட் சூழ்நிலை மக்கள் பயன்பாடு, வானிலை பிரச்சனை என பல விஷயங்களை மனதில் வைத்து வாரண்டியை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறைவான வாரண்டியுடன் இந்த கார் வந்தாலும் விற்பனையில் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் தற்போது வரை மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காரின் வருகைக்காக பலர் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் இதன் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









