லாரி டிரைவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி அனைத்து டாடா லாரியிலும் ஏசி இருக்கும்!
டாடா நிறுவனம் தனது அனைத்து லாரிகளிலும் ஏசியை பொருத்தியுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு பிறகு டாடா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. லாரி ஓட்டுநர்கள் இந்தியாவில் உள்ள கடுமையான வெப்பம், மழை, குளிர் என மாறி மாறி பயணம் செய்வதால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஒட்டு மொத்த டிரக் வாகனங்களுக்கு ஏசியை ஃபேக்டரி ஃபிட்டிங் அம்சமாக வழங்க முடிவுசெய்துள்ளது. இது மட்டுமல்ல வெறும் பேஸ் கட்டமைப்பை மட்டும் வழங்கும் கவுல் மாடலிலும் முதன் முறையாக ஏசியை பொருத்துகிறது. இந்த ஏசி செட்டப் ஏக்கோ மற்றும் ஹெவி மோடுகளில் பயன்படுத்த முடியும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்றார் போல் ஏசியை பயன்படுத்த முடியும்.

டாடா நிறுவனத்திடம் தற்போது SFC, LPT, Ultra, Signa மற்றும் Prima ஆகிய வகைகளில் வாகனங்கள் தயாரிக்கப்படுகுிின்றனர். இந்த வாகனங்களில் கேபின் உள்ள வசதியை அதிகரிக்கவும், கேபினில் உள்ள டிரைவர் உள்ளிட்ட மக்களின் வசதிக்காகவும் இந்த அப்டேட் வழங்கப்படுகிறது. இதனால் அவர்கள் மிகப்பெரிய அளவில் பலன் பெறப்போகிறார்கள்.
ஹெவி டூட்டி மாடல்களான பிரமைம் மூவர்ஸ், டிப்பர் உள்ளிட்ட மாடல்கள் 320 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிகமான பவர் தினற வாகனத்திற்கு அதிக அளவிலான கமர்ஷியல் தேவைகளை பூர்த்தி செய்யும் திறன் கொண்டதாக மற்றும்கிறது.

இது போக இந்த வாகனங்களில் எரிபொருள் செலவை குறைக்க சில பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக ஐடியல் இன்ஜின் ஆட்டோ ஷட் ஆஃப், ரியல் டைம் வாய்ஸ் அலர்ட் உள்ளிட்ட அம்சங்கள் வாகன இயக்கத்தை எளிமையாக்குவதுடன் எரிபொருள் செலவையும் கணிசமான அளவு குறைக்க உதவுகிறது. இதனால் வாகனத்தின் மைலேஜ் கணிசமான அளவு அதிகரிக்கிறது.
இது போக இந்த வாகனங்களில் கனெக்டெட் சூட், ஃபிளீட் எட்ஜ், உள்ளிட்ட அம்சங்கள் ஃபிளிட் ஆப்டிமைஸ்டு அப்டைமிற்காக உதவுகிறது. இது மட்டுமல்லா வாகனத்தின் ஒனர்ஷிப் செலவையும் கட்டுப்படுத்த உதவியுள்ளது. இந்தியா முழுவதும் இந்த வாகனங்களை சர்வீஸ் செய்வதற்கு 3000 டச் பாயிண்ட்கள் உள்ளது. இது டாடாடவின் சம்பூர்ணா சேவா 2.0 என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது. இது லாரி டிரைவர்களுக்கு இருந்த மிகப்பெரிய பிரச்சனையை தீர்த்து வைக்கிறது.

இதன் மூலம் ரோடு சைடு அசிஸ்டென்ஸ், ஏஎம்ஜி கவரேஜ், ஸ்பேர் பார்ட்ஸ்கள் கிடைக்கும் தன்மை என அனைத்தும் விரிவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போது ஏசி பொருத்தப்பட்ட கேன் என்பது அதிகமான புரோடெக்டிவிட்டியை கொடுக்கும் வகையில் இருக்கிறது. இது டாடா நிறுவனத்தின் மிக பெரிய முயற்சியாகும். இதற்கு லாரி ஓட்டுநர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்குமுஅஉ
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா நிறுவனம் மிகப்பெரிய அளவில் கனரக வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிலையில் இந்த மாற்றம் இந்தியாவில் மிகப்பெயரிய புரட்சியையே செய்யப்போகிறது என சொல்லிவிடலாம். அந்த அளவிற்க கனரக வாகன துறை மிகப்பெரிய வளரச்சியை சந்தித்துள்ளது. தொடர்ந்து எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றங்களை எல்லாம் இந்த துறை சந்திக்கும் என சொல்லிவிடலாம்.


Click it and Unblock the Notifications









