ரூ.15,000 கோடியில் மிகப்பெரிய வாகன தொழிற்சாலையை அமைக்கிறது மஹிந்திரா... எங்கு தெரியுமா?

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், இந்தியாவில் தனது உற்பத்தி திறனை மேலும் உயர்த்தும் நோக்கில், நாக்பூரில் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஆட்டோமொபைல் மற்றும் டிராக்டர் உற்பத்தி ஆலையை அமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் உற்பத்திப் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகவும், இந்தியாவில் மஹிந்திராவின் மிகப்பெரிய உற்பத்தி மையமாகவும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் ₹15,000 கோடி முதலீட்டில் உருவாகும் இந்த பிரம்மாண்ட திட்டம், மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடைபெற்ற 'அட்வான்டேஜ் விதர்பா' மாநாட்டின்போது அறிவிக்கப்பட்டது. நீண்டகால உற்பத்தி வளர்ச்சியை இலக்காகக் கொண்ட மஹிந்திராவின் உத்தியை இந்த முதலீடு தெளிவாக வெளிப்படுத்துகிறது. புதிய ஆலையில் உற்பத்தி பணிகள் 2028 ஆம் ஆண்டில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பேசுகையில், "மஹிந்திரா நிறுவனம் தனது மிகப்பெரிய ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலையை மகாராஷ்டிராவில் அமைப்பதன் மூலம், மாநிலத்தின் வலுவான தொழில்துறை சூழல் மற்றும் முன்னோக்கான கொள்கைகளுக்கு கிடைத்த அங்கீகாரத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த முதலீடு விதர்பா பகுதியின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவதோடு, பெரும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்," எனக் கூறினார்.

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் ஜெஜுரிகர் கூறுகையில், "இந்த புதிய ஆலை எங்கள் உற்பத்திப் பயணத்தில் ஒரு துணிச்சலான முன்னேற்றமாகும். அடுத்த தலைமுறை வாகனங்கள் மற்றும் டிராக்டர்களை உற்பத்தி செய்யும் வகையில், மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து இந்த மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் மகாராஷ்டிர மாநிலத்துடனான எங்களின் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்," என்றார்.

மஹிந்திராவின் மெகா உற்பத்தி மையம்

விதர்பா பகுதியில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இந்த ஆலை, முழுமையாக செயல்படும் நிலையில் ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வாகனங்களையும், சுமார் 1 லட்சம் டிராக்டர்களையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இது இந்திய சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, மஹிந்திராவின் ஏற்றுமதி வளர்ச்சிக்கும் பெரும் ஆதரவாக அமையும்.

சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகள் சிறப்பாக இருப்பதால் நாக்பூர் பகுதியை மஹிந்திரா தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளை எளிதாக அணுக முடியும். அதே நேரத்தில், வளர்ந்து வரும் சப்ளையர் சூழல் மற்றும் திறமையான மனிதவளமும் விதர்பாவை ஒரு முக்கிய தொழில்துறை மையமாக மாற்றி வருகிறது.

மேலும், இந்த புதிய உற்பத்தி மையம் சகன் மற்றும் நாசிக்கில் உள்ள மஹிந்திராவின் தற்போதைய ஆலைகளுக்குத் தேவையான உதிரிபாகங்களையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் வாகனங்கள் மட்டுமல்லாமல், வணிக மற்றும் விவசாய வாகனப் பிரிவுகளிலும் மஹிந்திரா வலுவான அடையாளத்தை பெற்றுள்ளது. குறிப்பாக, அதன் டிராக்டர்கள் இந்தியாவிலும் பல உலக நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

எதிர்காலத்தை நோக்கி, அடுத்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் சுமார் 2,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இது எதிர்கால மொபிலிட்டி போக்குகள், ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் பல்வேறு வாகனப் பிரிவுகளில் அதிகரிக்கும் தேவைகளை சமாளிக்க நிறுவனத்தை முழுமையாகத் தயார்படுத்தும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 9, 2026, 11:32 [IST]
English summary
Mahindra to build largest auto plant in nagpur with inr 15000 crore investment
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X