Just In
- 4 min ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 38 min ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 1 hr ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 1 hr ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
Don't Miss!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்பத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Movies இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
30கிமீ தொங்கியபடி பயணித்த இளைஞர்! விடாமல் விரட்டி சென்று மீட்ட வாகன ஓட்டிகள்.. உறைய வைக்கும் நிகழ்வின் வீடியோ!
பிரேசில் அரங்கேறிய கொடூர சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறைய வைக்கும் விபத்து சம்பவம் பற்றிய முழுமையான தகவலை இப்பதிவில் காணலாம்.
பார்ப்போர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஓர் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அதிக வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் டிரக்கின் பக்கவாட்டு (கதவு) பகுதியில் இளைஞர் ஒருவர் தொங்கியபடிச் செல்லும் அக்காட்சியே, தற்போது வாகன ஓட்டிகளை உறைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
ட்ரக்கின் முன்பகுதியில், பாதியளவு நுழைந்தபடி இழுத்து செல்லப்பட்ட பைக்கின் காட்சிகளும் அவ்வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன. இதனைப் பார்த்த பலரும் இப்படியும் சம்பவங்கள் நடைபெறுமா, என அதிர்ச்சியில் முற்றிலுமாக உறைந்திருக்கின்றனர்.
நிதானமின்றி சாலையில் டிரக்கை இயக்கி வந்த அந்த டிரைவர் முன்னதாக பைக்கின்மீது மோதியிருக்கின்றார். இதையடுத்தே, ட்ரக்கின் பக்கவாட்டு பகுதியில் உயிரை பணயம் வைத்து தொங்கியபடி இளைஞர் பயணித்திருக்கின்றார். விபத்தை ஏற்படுத்திவிட்டு ட்ரக்கை நிறுத்தாமல் சென்றதன் காரணத்தினாலயே இந்த விபரீத செயலில் இளைஞர் களமிறங்கியதாகக் கூறப்படுகின்றது.
இதுமட்டுமின்றி, ட்ரக் மோதியதன் காரணத்தினால் இளைஞருடன் பயணித்த அவரது மனைவி பலத்த காயங்களினால் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கின்றனர். இந்த கொடூர நிகழ்வின் காரணத்தினாலேயே ட்ரக் நிறுத்தாதபோதும் விடாப்பிடியாக அந்த இளைஞர் தொங்கியபடி பயணித்திருக்கின்றார்.
அவ்வாறு தொங்கியபடியே சுமார் 30 கி.மீட்டருக்கும் அதிகமான தூரம் வரை ட்ரக்கில் தொங்கியபடி இளைஞர் பயணித்ததாகக் கூறப்படுகின்றது. மேலும், சம்பவத்தின்போது ட்ரக்கின் டிரைவர் ஆக்ரோஷமாகவும், மிகவும் முரட்டுத் தனமாகவும் நடந்துக் கொண்டதாக ட்ரக்கை நிறுத்த முயன்ற மற்ற வாகன ஓட்டிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இருப்பினும், விடாப்பிடியாக விரட்டிச் சென்ற வாகன ஓட்டிகள் ஒரு வழியாக ட்ரக் டிரைவரை மடக்கி இளைஞரை மீட்டிருக்கின்றனர். தொடர்ந்து, அடாவடி தனத்தில் ஈடுபட்ட ட்ரக் ஓட்டுனரையும் போலீஸிடத்தில் பிடித்து கொடுத்திருக்கின்றனர்.
பிரேசில் நாட்டில் உள்ள சான்டா கேடரினா (Santa Catarina) எனும் பகுதியிலேயே நெஞ்சை உறைய வைக்கக் கூடிய இச்சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. ட்ரக் டிரைவர் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தியிருந்ததாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் சில போதைப் பொருட்களைப் போலீஸார் ட்ரக்கில் இருந்து பறிமுதல் செய்திருக்கின்றனர்.
முன்னதாக, இளைஞர் ஆபத்தான நிலையில் இருப்பதைக் உணர்ந்த பிற வாகன ஓட்டிகள் ட்ரக்கை பல முறை எச்சரித்திருக்கின்றனர். ஆனால், அவர்களையும் அச்சுறுத்தும் வகையில் அந்த டிரைவர் நடந்துக் கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளூர் வாசிகள் ஊடகங்களிடத்தில் தகவல் தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையிலேயே பெரும் விடா முயற்சியின் அடிப்படையில் இளைஞர் பிற வாகன ஓட்டிகள் பத்திரமாக மீட்டெடுத்திருக்கின்றார்.
குறிப்பு: கடைசி இரு படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!