ராணுவத்திற்கு பிரபல டெஸ்லா தானியங்கி மின்சார கார்களை களமிறக்கும் நாடு.. எந்த நாடு தெரியுமா..?
ராணுவத்தின் பயன்பாட்டிற்காக பிரபல டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அது எந்த நாடு, எதற்காக மின்சார கார்களை ராணுவ படையில் சேர்க்க இருக்கின்றது என்பது பற்றிய தகவலை விரிவாக இந்த பதிவில் காணலாம்.

மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. குறிப்பாக, எரிபொருள் வாகனங்களினால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு மின்சார வாகனங்களே தீர்வாக உள்ளது.
ஏனென்றால், பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சு கலந்த புகை பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன.

குறிப்பாக, புவி வெப்பமயமாதல் மற்றும் கால நிலை மாற்றம் போன்ற பின்விளைவுகளுக்கு இதுவே மிகப்பெரிய காரணியாக இருக்கின்றது.
இவற்றில் இருந்து தீர்வு காண்பதற்கு மின்சார வாகனங்களே ஒரே வழி. இவை சுற்றுப்புறச் சூழலுக்கு நண்பனாக செயல்படுவதுடன், குறைந்த பராமரிப்பில் அதிக பலனை வழங்கும்.

இதனாலயே இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. அந்தவகையில், இராணுவத்தில் மின்சார வாகனங்களைச் சேர்க்க ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஓர் நாடு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, பிரபல எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல் ஒன்றையும் அது தேர்ந்தெடுத்திருக்கின்றது. இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் காணவிருக்கின்றோம்.

தாய்வான் நாடுதான் அதன் மிலிட்டரி போலீஸ் பயன்பாட்டிற்காக மின்சார வாகனங்களை களமிறக்க இருக்கின்றது. இதற்காக டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 மின்சார காரை அது தேர்வு செய்துள்ளது.
இந்த தானியங்கி மின்சார கார்களின் மொத்தம் 20 யூனிட்டுகளை வாங்க தாய்வான் அரசு திட்டமிட்டிருக்கின்றது. இதற்கான தகவலை டெஸ்லா தாய்வான் உரிமையாளர்கள் டுவிட்டர் வாயிலாக உறுதி செய்திருக்கின்றனர்.

அந்த புகைப்படத்தில், மாடல்3 கார்கள் மிலிட்டரியின் அதிகாரப்பூர்வ ஸ்டிக்கர்களைப் பெற்றிருக்கின்றன. இந்த செடான் ரக மின்சார கார்கள் மற்ற கார்களைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றது. குறிப்பாக, இரண்டு வால் சார்ஜர் பாயிண்டுகள் மற்றும் சோலார் ரூஃப்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றிருக்கின்றது.

டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கி கார்களிலேயே மாடல் 3 மட்டும் மாடல் எஸ் கார்களுக்கே காவல்துறை மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.
ஆகையால், தாய்வான் மிலிட்டரியில் மட்டுமின்றி மேலும் சில நாடுகளில் உள்ள காவல்துறையில் இந்த கார்களை நம்மால் காண முடியும்.

அந்தவகையில், லாஸ் ஏஞ்ஜல்ஸ் காவல்துறை டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கி கார்களில் ஒன்றான எஸ் மாடலை உபயோகப்படுத்தி வருகின்றது.
கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான கார்கள்தான் லாஸ் ஏஞ்ஜல்ஸின் ஹாலிவுட் காவல்துறை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது சாதாரணமாக விற்பனையில் இருக்கும் டெஸ்லா மாடல் எஸ்-ஐக் காட்டிலும் அதிக திறன் வாய்ந்தததாக உள்ளது.

இந்த காரில் போலீஸாருக்கு தேவைப்படும் பல்வேறு உபகரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, அவசர காலங்களில் தேவைப்படுகின்ற உபகரணங்கள் அக்கார்களில் கூடுதல் சேர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, இந்தியானாவின் பர்கெர்ஸ்வில்லே காவல்துறையிலும் டெஸ்லா மாடல் 3 கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த காரிலும் போலீஸாருக்கு தேவையான பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து, சமீபத்தில் டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்த சைபர் ட்ரக்கை தன் நாட்டின் காவல்துறையின் பயன்பாட்டிற்காக வாங்க துபாய் அரசு திட்டமிட்டிருக்கின்றது. இதற்கான ஆர்டரை அது ஏற்கனவே வழங்கிவிட்டதாக கூறப்படுகின்றது. இந்த சைபர் மின்சார ட்ரக்கை டூரிஸ்டுகள் அதிகம் குவியும் இடங்களில் ரோந்து பணிக்காக பயன்படுத்த இருப்பதாக அந்நாட்டு காவல்துறை ஜெனரல் அப்துல்லா கலிஃபா மர்ரி தெரிவித்திருந்தார்.

இந்த சைபர் ட்ரக் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் அதிக திறனைக் கொண்டிருப்பதன் காரணத்தினாலயே துபாய் காவல்துறையை கவர்ந்துள்ளது.
அதேசமயம், துபாய் காவல்துறை மட்டுமின்றி பல வளர்ந்த நாடுகளில் உள்ள வணிகர்களையும் இது வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சைபர்-ட்ரக் ஓர் பிக்-அப் டிரக்கின் அமைப்பைக் கொண்டிருப்பதன் காரணத்தினாலேயே இத்தகைய வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த ட்ரக் பற்றிய கூடுதல் தகவலை அறிந்துக்கொள்ளே இங்கே க்ளிக் செய்யவும்...

Source: CleanTechnica


Click it and Unblock the Notifications








