Just In
- 22 min ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 41 min ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 1 hr ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 1 hr ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Movies படம் பார்க்க வரச் சொல்றாரு ஹரி.. ஆனால், விஷால் ‘ரத்னம்’ படத்தோட டிக்கெட் புக்கிங்கே ஆரம்பிக்கலையே?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஸ்கிராப்பேஜ் கொள்கைக்கு ஒப்புதல்... 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை நீங்கள் ஓட்ட முடியுமா?
அரசு வாகனங்களுக்கான ஸ்கிராப்பேஜ் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கைக்கு (Vehicle Scrappage Policy), ஒரு வழியாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இருப்பினும் தற்போதைய நிலையில் அரசு வாகனங்களுக்கு மட்டுமே இந்த ஸ்கிராப்பேஜ் கொள்கை பொருந்தும்.
இந்த புதிய கொள்கையின் கீழ், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்படும். வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கைக்கு, நடப்பாண்டு ஜனவரி 25ம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வரும் 2022ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து இந்த புதிய ஸ்கிராப்பேஜ் கொள்கை அமலுக்கு வரும்.
வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கை மிக நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருந்தது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை இதனை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தது. பழைய வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்பட்டு விடும் என்பதால், புதிய வாகனங்களுக்கான தேவை உயரும். எனவே புதிய வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்பது ஆட்டோமொபைல் துறையினரின் நம்பிக்கை.
தற்போது வெளியாகியுள்ள இந்த முதற்கட்ட அறிவிப்பு அவர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது. அத்துடன் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையும் இதன் மூலமாக குறைக்கப்படும். பொதுவாக பெட்ரோல், டீசலில் இயங்கும் பழைய வாகனங்கள்தான் சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்துகின்றன. ஆனால் புதிய கொள்கையின் கீழ், அவை ஸ்கிராப் செய்யப்பட்டு விடும்.
ஆனால் தங்களின் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்யும் உரிமையாளர்களுக்கு, புதிய வாகனங்களை வாங்குவதற்கான மானியம் போன்ற சலுகைககள் வழங்கப்படும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான ஸ்கிராப்பேஜ் கொள்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதற்காக, வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கை தவிர இன்னும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களுக்கு 'பசுமை வரி' விதிக்கும் திட்டத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த திட்ட முன்வரைவு மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். 'பசுமை வரி' குறித்த விரிவான தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
பசுமை வரியின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என மத்திய அரசு நம்புகிறது. அதாவது பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்கப்படுவதால், அவற்றுக்கு பதிலாக புதிய அல்லது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வாகனங்களை பயன்படுத்தும் எண்ணம் மக்கள் மத்தியில் மேலோங்கும் என்பது மத்திய அரசின் திட்டம்.
Note: Images used are for representational purpose only.
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!