Just In
- 45 min ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 2 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 3 hrs ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 3 hrs ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
Don't Miss!
- News உன் பிரச்சினையே லாரில அள்ளிட்டு போற அளவு இருக்கு.. இதுல நீ அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ற!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
இனி தரமான உதிரி பாகங்கள் வீடு தேடி வரும்... நாட்டின் 12 நகரங்களில் சேவையை தொடங்கியது டொயோட்டா...
உதிரி பாகங்களை வீடு தேடி வந்து டெலிவரி செய்யும் சேவையை டொயோட்டா இந்தியாவில் தொடங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் டொயோட்டாவும் ஒன்று. இந்த நிறுவனமே வீட்டுக்கே வந்து உதிரிபாகங்களை வழங்கும் சேவையை நாட்டில் தொடங்கியுள்ளது. தனது ஜென்யூன் (நேர்மையான) உதிரி பாகங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த சேவையை இந்தியாவில் டொயோட்டா தொடங்கியுள்ளது.
'டொயோட்டா பார்ட்ஸ் கன்னெக்ட்' எனும் திட்டத்தின் வாயிலாக இந்த சேவையை தொடங்கியுள்ளது. சந்தையில் புழக்கத்தில் இருக்கும் போலி பாகங்களை ஒழிக்கும் பொருட்டும் இந்த சேவையை நாட்டில் டொயோட்டா தொடங்கியிருக்கின்றது.
புதிய சேவை தொடங்கியதுகுறித்து நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரான நவீன் சோனி கூறியதாவது, "இந்த முயற்சியைத் தொடங்குவதன் மூலம், சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் எங்கள் உறுதிப்பாட்டை நோக்கி மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளோம்.
வாகனங்களின் பாதுகாப்பில் உண்மையான பாகங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. எனவேதான் எங்கள் வாடிக்கையாளருக்கு உதவும் வகையில் இச்சேவை இந்தியாவில் தொடங்கியுள்ளோம். இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிதான மற்றும் மன அழுத்தமில்லாத சேவை வழங்க உதவும்" என தெரிவித்தார்.
இச்சேவையின் வாயிலாக உதிரிபாகங்கள் மட்டுமின்றி கார்களை பராமரிக்க உதவும் அத்தியாவசிய பொருட்களையும் விற்பனைச் செய்ய இருக்கின்றது. தொடர்ந்து, எஞ்ஜின் ஆயில், டயர் பேட்டரி உள்ளிட்ட பொருட்களையும் வீட்டுக்கே வந்து டொயோட்டா டெலிவரி செய்ய இருக்கின்றது.
இந்த சிறப்பு சேவையை நாட்டின் குறிப்பிட்ட 12 நகரங்களில் மட்டுமே டொயோட்டா தொடங்கியுள்ளது. நடப்பாண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் டோர் டெலிவரி சேவையைத் தொடங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. டோர் டெலிவரி சேவையைப் பெற நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்தை நாட நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு இணையாக அதி வேகத்தில் புக் செய்யப்படும் வாகன உதிரிபாகங்களை நிறுவனம் உரிய நேரத்தில் டெலிவரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்பவும் அதன் டெலிவரிகளை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பெங்களூர் அருகே உள்ள பிடதியில் உள்ள சுகாதார மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை டொயோட்டா நிறுவனம் அமைக்க இருக்கின்றது. அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஆக்சிஜன் ஆலை அமைக்கப்பட இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை அறிந்து கொள்ளே இங்கே க்ளிக் செய்யவும்.
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!