புதிய கார்களுக்கான பதிவை அடியோடு நிறுத்தும் சிங்கப்பூர்... காரணம் என்ன?
புதிய கார்களுக்கான பதிவு செய்யும் முறையை அடியோடு நிறுத்துவதற்கு சிங்கப்பூர் அதிரடி முடிவு எடுத்துள்ளது. அதற்கான காரணம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
உலகின் பெரும்பான்மையான நாடுகளின் தலையாய பிரச்னை போக்குவரத்து நெரிசல் மற்றும் ராக்கெட் வேகத்தில் உயரும் வாகனங்கள் எண்ணிக்கைதான். இந்தியா போன்ற பெரும் நிலபரப்பு கொண்ட நாடுகளின் நகரங்கள், போக்குவரத்து நெரிசலை சமாளிக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி வருகிறது.

இந்த நிலையில், குறைந்த நிலபரப்பு கொண்ட சிங்கப்பூரில் வாகன எண்ணிக்கை பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. அங்கு கார் வைத்திருப்பதற்கு வரியும், கட்டுப்பாடுகளும் அதிகம். உலகிலேயே கார் வைத்திருப்பது மிக காஸ்ட்லியான விஷயமாக இருக்கும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.

அங்கு கார்களுக்கான இறக்குமதி வரி, பார்க்கிங் உள்ளிட்டவை மிக அதிகம். பரப்பளவில் சிறிய நாடாக இருப்பதால், வாகன எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக இந்த விதிகள் நடைமுறையில் உள்ளன.

எனவே, அந்நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பொது போக்குவரத்து சாதனங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும், பொது போக்குவரத்திலும் சிறப்பான கட்டமைப்பு வசதிகளை அந்நாடு ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video


இந்த நிலையில், புதிய கார்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை எதிர்காலத்தில் சமாளிக்க முடியாத அளவுக்கு சிறிய நில பரப்பு கொண்ட நாடு. எனவே, இந்த அபாயத்தை உணர்ந்து அதிரடி நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசு எடுத்து வருகிறது.

புதிய கார்களின் வளர்ச்சி விகிதத்தை பூஜ்யமாக மாற்றுவதற்கான முயற்சியில் சிங்கப்பூர் இறங்கி இருக்கிறது. தற்போது அந்நாட்டில் புதிய கார் விற்பனை ஆண்டுக்கு 0.25 சதவீதம் வளர்ச்சி விகிதத்தில் உள்ளது. இதனை பூஜ்யமாக்கும் முயற்சியில் அந்நாடு இறங்கி இருக்கிறது.

ஆம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிங்கப்பூரில் புதிய கார்களுக்கான பதிவு முற்றிலும் நிறுத்தப்பட உள்ளது. சிங்கப்பூர் நில போக்குவரத்து ஆணையம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. சிங்கப்பூர் பரபப்பளவில் சிறிய நாடாக இருக்கும் நிலையில், அங்குள்ள நிலப்பரப்பில் 12 சதவீதம் சாலை கட்டமைப்பாக உள்ளது.
Trending On DriveSpark Tamil:
- தலை சுற்றவைக்கும் முகேஷ் அம்பானி கார் டிரைவரின் மாத சம்பளம்!
- ரூ.40 லட்சம் மதிப்பில் பிரம்மாண்டமான மோட்டார்சைக்கிள் வாங்கிய நடிகர் மாதவன்!
- இந்த வீடியோ பார்த்த பிறகும் பைக்ல வேகமாக போவீங்க?

இதற்கு மேலும் விரிவாக்கம் செய்ய இயலாத நிலை இருப்பதால், வாகன எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக இந்த அதிரடி முடிவை அந்நாட்டு நில போக்குவரத்து ஆணையம் எடுத்துள்ளது. மேலும், பொது போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் மாற்று திட்டம் வைத்திருக்கிறது.

எனினும்,அந்நாட்டில் வாடகை கார் ஓட்டுபவர்கள், பழைய கார்களை மாற்றி, புதிய கார் வாங்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, அங்கு தனி நபர்கள் கார் வாங்குவது என்பது எட்டாக்கனியாக மாறுகிறது.

மேலும், வரும் 2020ம் ஆண்டில் இந்த புதிய முறை வெற்றிகரமாக இருக்கிறதா என்பதை பரீசிலித்து முடிவு எடுக்கப்படும் என்றும் சிங்கப்பூர் நில போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
Trending On DriveSpark Tamil:


Click it and Unblock the Notifications








