டாடா கார்கள் விலை 2.2 சதவீதம் உயர்கிறது.
இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா கார் நிறுவனம் தனது பயணிகள் வாகனங்களுக்கான விலையை 2.2 சதவீதம் உயர்த்தியுள்ளது. தயாரிப்பு செலவு அதிகமாவதன் காரணமாக இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் எடுத்துள்ளதாக அறிவித்
இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா கார் நிறுவனம் தனது பயணிகள் வாகனங்களுக்கான விலையை 2.2 சதவீதம் உயர்த்தியுள்ளது. தயாரிப்பு செலவு அதிகமாவதன் காரணமாக இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் இது இரண்டவது முறையாக விலைய உயர்த்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ 60,000 வரை உயர்த்தியது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வு அனைத்துமாடல் வாகனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாடலுக்கு ஒவ்வொரு விதமான விலையேற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது டாடா நிறுவனம் சிறிய ரக காரான டாடா நானோவில் இருந்து பிரிமியம் எஸ்யூவி காரான ஹெக்ஸா வரை ரூ 2.36 லட்சம் முதல் ரூ 17.89 லட்சம் வரையிலான கார்களை விற்பனை செய்துவருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் அந்நிறவனம் விலையேற்றம் செய்தாலும் அந்நிறுவனத்தின் விற்பனையில் அது எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை மாறாக கடந்தாண்டு முதல் காலாண்டில் அந்நிறுவனம் 13.1 சதவீத வளர்ச்சியை கண்ட நிலையில் கடந்த 28 மாதங்களில் சுமார் 52 சதவீத வளர்ச்சியை அந்நிறுவனம் பெற்றுள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வு அறிவிப்பில் எந்தெந்த கார்கள் என்னென்ன விலை உயர்வு பெறுகிறது என்ற தவல்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை

டாடா நிறுவனம் தற்போது நானோ, டியாகோ, டிகோர், நெக்ஸான், ஹெக்ஸா உள்ளிட்ட பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது. உலகிலேயே குறைந்த விலை ஹெட்ச் பேக் காரான டாடா நானோ காரை இந்நிறுவனம் தான் விற்பனை செய்து வருகிறது

இதற்கிடையில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பிலும் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் அரசிற்கும் இந்த கார்களை வழங்க ஒப்பந்தம் போட்டுள்ளது,

மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் மத்தியில்கொண்டு செல்ல எடுக்கும் முயற்சியில் முக்கிய நிறுவனமான இந்நிறுவனத்தின் வாகனங்களை தான் அதிகமாக அரசு புரோமோட் செய்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
- நெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..
- டிரைவ் ஸ்பார்க் ஆப் பீட் சீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது சீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது
- புதிய பட்ஜெட் காரை களமிறக்கும் மாருதி: 'கிலி'யில் போட்டியாளர்கள்!!
- இந்தியாவில் இனியாரும் வாகனத்தை திருட முடியாத புதிய தொழிற்நுட்பம் அறிமுகம்...!
- பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!


Click it and Unblock the Notifications








