இந்தியாவில் இனியாரும் வாகனத்தை திருட முடியாத புதிய தொழிற்நுட்பம் அறிமுகம்...!
இந்தியாவில் வாகன திருட்டை தடுக்க மத்திய அரசு புதிய முயற்சி ஒன்றை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறது. வாகனத்தின் எல்லா பாகங்களிலும் கண்ணிற்கு தெரியாத சிறிய புள்ளிகளை கொண்டு லேசர் லைட்டில் மட்டும் மி
இந்தியாவில் வாகன திருட்டை தடுக்க மத்திய அரசு புதிய முயற்சி ஒன்றை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறது. வாகனத்தின் எல்லா பாகங்களிலும் கண்ணிற்கு தெரியாத சிறிய புள்ளிகளை கொண்டு லேசர் லைட்டில் மட்டும் மிளிர கூடிய வகையிலான எண்களை பதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் மூலம் திருட்டு வண்டிகளை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 2.14 லட்சம் வாகனங்கள் திருடுபோகிறது. அதில் அதிகபட்சமாக டில்லியில் சராசரியாக 38,644 வாகனங்கள் கடந்த 2016ம் ஆண்டு திருடு போயுள்ளது. அதாவது தினமும் 100 வாகனங்கள் விதம் திருடு போகிறது.

தொடர்ந்து உ.பி. மற்றும் மஹாராஷ்டிராவிலும் வாகன திருட்டு என்பது அதிக அளவில் இருக்கிறது. இந்த புள்ளி விபரங்கள் எல்லாம் போலீஸ் வழக்கிற்கு உட்பட்டவையே போலீஸ் வழக்கே இல்லாமல் காணாமல் போன வாகனங்களின் எண்ணிக்கையும் தனியாக இருக்கிறது.

திருட்டு ஒருபுறம் நடந்து வருகையில் அதனை மீடக்கும்பணியில் ஆண்டிற்கு ஆண்டு தொய்வு ஏற்பட்டு கொண்டு தான் வருகிறது,. டில்லியில் கடந்த 2017ம் ஆண்டு சுமார் 40 ஆயிரம் வாகனங்கள் திருடு போயிருந்தன. ஆனால் சராசரியாக மாதம் ஒரு வாகனம் தான் மீட்கப்பட்டது.

திருடப்படும் பெரும்பாலான வாகனங்கள் கடைசி வரை கண்டுபிடிக்கப்படாமலேயே போய்விடுகிறது. வாகனங்களை திருடுபவர்கள் வாகனத்தில் உள்ள இன்ஜின் உள்ளிட்ட சில விலை மதிப்புள்ள பாகங்களை எடுத்து விட்டு வாகனத்தை உருத்தெரியமால் அளித்து விடுகின்றனர்.

இதற்கு தீர்வை ஏற்படுத்த அரசு மத்திய மோட்டார் வாகன விதி மற்றும் தொழிற்நுட்ப கட்டுப்பாட்டு கமிட்டியுடன் ஆலோசனை நடத்தியது. அதில் வாகன தயாரிப்பின் போதே வாகனங்கள் திருடப்பட்டால் கண்டு பிடிக்கும் படி ஏதேனும் தொழிற்நுட்பத்தை உட்புகுத்த திட்டமிடப்பட்டது.

தற்போது ஏற்கனவே இன்ஜின், சேஸிஸ் ஆகியவற்றில் நம்பர்கள் இருக்கின்றன. அவை நமது ஆர்சி புக்கிலும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதை வைத்து கண்டு படிக்கலாம். ஆனால் சமீபகாலமாக வாகன திருட்டில் ஈடுபடுபவர்கள் அந்த எண்ணை எளிமையாக அழித்து விடுகின்றனர்.

இதனால் சிஎம்விஆர்-டிஎஸ்சி உறுப்பினர்கள் தற்போது வாகன பதிவு எண்ணை சிறிய ரக டாட்களாக வாகனம் முழுவதும் பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த ரக டாட்கள் சாதாரணமாக கண்ணிற்கு தெரியாது லேசர் லைட்களில் மட்டும் தான் மிளிரும். இந்த ரக டாட்களை வாகனத்தில் இருந்து நீக்குவது நடக்காத காரியம்.

வாகன திருடர்கள் வானத்தை அழிக்க முற்பட்டாலும் அதில் உள்ள சிறிய பாகம் கிடத்தால் போது அந்த வாகனம் குறித்த தகவல் நமக்கு கிடைத்து விடும். வாகனம் எந்த நிலையில் இருந்தாலும் இந்த அந்த எண்களை அழிக்கமுடியாத படியான தொழிற்நுட்பத்தில் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதை நடைமுறைப்படுத்துவது குறித்து தற்போது ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களுடன் இதை நடைமுறைப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையில் தற்போது வாகனப்பதிவுஎண்ணை வாகனம் தயாரிக்கும் போதே நேரடியாக தயாரிப்பாளர்களிடமே வழங்க அரசு ஆலாசித்து வருகிறது அப்படி அது நடைமுறைக்கு வந்தால்

இந்த சிறிய புள்ளிகள் மூலம் பதிவு செய்யப்படும் எண்ணிகள் வாகன பதிவு எண்களாக இருக்கும் என கூறப்படுகிறது. அரசு திட்டமிட்டபடி அனைத்தும் ஒத்து வந்தால் அடுத்த ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
- புதிய வண்ணத்தில் கவாஸாகி இசட்900ஆர்எஸ் பைக் அறிமுகம்!!
- இந்திய கார் மார்கெட்டை புரட்டி போட காத்திருக்கும் கார்கள்...
- சில புதிய விதிகள் அறிமுகம்.. இந்த தவறுகளை செய்பவர்களின் லைசென்ஸை பறிமுதல் செய்ய அதிரடி உத்தரவு..
- விரைவில் புதுப்பொலிவுடன் ரெனோ க்விட் கார் அறிமுகமாகிறது!!
- மாயம் இல்லே.. மந்திரம் இல்லே.. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் டூவீலராக மாறிய அதிசயம்!


Click it and Unblock the Notifications








