Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மோடி அரசின் உருப்படியான யோசனை... பெட்ரோல், டீசல் செலவு குறைய போகுது... மகிழ்ச்சி கடலில் மக்கள்...
ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்கு உடன் வழங்கி வருகிறது. ஆனால் கடந்த வாரம் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளை வேலை உள்ளிட்ட முக்கிய காரணங்களால் நீங்கள் தவற விட்டிருக்க கூடும். எனவே உங்களுக்கு பயன் அளிக்கும் விதமாக கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
10. விரைவில் அறிமுகமாகிறது கியா செல்டோஸ் மின்சார கார்!
09. 2019ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள்...
08. 2019ம் ஆண்டு அறிமுகமான மாஸான 10 டூ வீலர்கள்...
கார்கள் மட்டுமல்ல. இந்திய மார்க்கெட்டில் நடப்பாண்டு பல்வேறு புதிய டூ வீலர்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதில், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள 10 டூவீலர்களின் பட்டியலையும், அவற்றின் விபரங்களையும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.
07. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் புரட்சி தொடங்கி விட்டது. வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது. இந்த காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அதன் ரிவியூவை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
06. கணவன், மனைவியின் சூப்பர் கண்டுபிடிப்பு...
பெங்களூரை சேர்ந்த கணவன், மனைவியின் கண்டுபிடிப்பு ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் தெரிந்தால் நீங்கள் வியப்பில் மூழ்குவது உறுதி. நாட்டிற்கும், உங்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் இந்த கண்டுபிடிப்பு பற்றிய விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.
05. தமிழக போலீசார் செய்த தில்லாலங்கடி வேலை
04. 2.50 கோடி ரூபாய் காரை ஹெலிகாப்டரில் இருந்து வீசி சுக்குநூறாக்கிய இளைஞர்...
செல்போனை கோபத்தில் தூக்கி எறிந்து விட்டாலே வட போச்சே என வருத்தப்படுவோம். ஆனால் இங்கே ஒரு இளைஞர் சுமார் 2.50 கோடி ரூபாய் மதிப்புடைய பென்ஸ் காரை ஹெலிகாப்டரில் இருந்து கீழே வீசி சுக்குநூறாக நொறுக்கியுள்ளார். அதிர்ச்சிகரமான இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.
03. "உன் வாழ்க்கைல 30 லட்ச ரூபா பைக்க இனி பாக்க முடியுமா" - தமிழக போலீஸாரின் அட்ராசிட்டி...!
02. மேம்பாலத்தின் கீழ் சிக்கிய விமானம்... எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா...? வீடியோ...!
01. பெட்ரோல், டீசலுக்கு நீங்கள் செலவிடும் தொகை இனி குறையும்... மோடி அரசு மாஸ் திட்டம்!!
மோடி அரசின் அதிரடியான திட்டத்தால், எரிபொருளுக்காக நீங்கள் செலவிடும் தொகை குறையவுள்ளது. வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.
பெட்ரோல், டீசலுக்கு நீங்கள் செலவிடும் தொகையை குறைக்கும் வகையில், மெத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளை இந்தியா முழுவதும் விற்பனைக்கு கொண்டு வருவது தொடர்பான மத்திய அரசின் திட்டத்தை, மேலே உள்ள லிங்க்கின் மூலம் படித்திருப்பீர்கள் என நம்புகிறோம்.
இந்த திட்டம் காற்று மாசுபாடு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகிய பிரச்னைகளை கட்டுப்படுத்தவும் உதவும். உண்மையில் இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் நல்ல ஐடியா ஒன்றை கொடுத்தார். இது காற்று மாசுபாட்டை குறைக்கும் என்பதுடன், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் என்பதும் கூடுதல் சிறப்பு. அப்படி என்ன ஐடியா அது என யோசிக்கிறீர்களா? அதுபற்றிய தகவல்களைதான் நாம் தொடர்ந்து பார்க்க போகிறோம்.
இந்தியா தற்போது எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான பிரச்னைகளில் ஒன்று காற்று மாசுபாடு. தலைநகர் டெல்லியே காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து கொண்டிருப்பது இதற்கு ஓர் உதாரணம். டெல்லி காற்று மாசுபாடு பிரச்னை பத்திரிக்கைகளில் அவ்வப்போது தலைப்பு செய்தியாக மாறி விடுகிறது. இதே போன்று நாட்டின் பல்வேறு நகரங்களும் காற்று மாசுபாடு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள்தான் காற்று மாசுபாடு பிரச்னைக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளன. எனவே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் போன்றவற்றை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
இந்த சூழலில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். பயோ எரிபொருள் சார்ந்த வாகனங்களை உருவாக்க வேண்டும் என ஆட்டோமொபைல் நிறுவனங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
விவசாயம் சார்ந்த எரிபொருளில் இயங்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார். தற்போதைய நிலையில் இந்தியா எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக காற்று மாசுபாடு பிரச்னை இருப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
எனவே மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை தயாரிப்பதில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என நிதின் கட்கரி கேட்டு கொண்டுள்ளார். இது இந்தியாவின் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு உதவி செய்வதோடு, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும் உதவும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் இந்தியாவிற்கு எவ்வளவு அவசியம் என்பதை நிதின் கட்கரி மிக நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாற்று எரிபொருட்களில் ஓடும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவையும் குறைக்க முடியும்.
இதனிடையே பாஸ்ட்டேக் குறித்த முக்கிய தகவல் ஒன்றையும் அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகள் பாஸ்ட்டேக் மூலம் ஏற்கனவே நடைபெறுவதாக நிதின் கட்கரி கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல், அனைத்து வாகனங்களுக்கும், பாஸ்ட்டேக் கட்டாயம் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்படவில்லை. அதற்கு பதிலாக 15 நாள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி கடந்த டிசம்பர் 15 முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் ஆவதாக இருந்தது.
ஆனால் அன்றைய தினம் அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இதில், கூடுதலாக ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது வரும் ஜனவரி 15ம் தேதி வரை. அதன்பின் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்குவது, ஒட்டுவது குறித்து ஏராளமான செய்திகளை படித்து படித்து அலுத்து போயிருப்பீர்கள். இருந்தபோதும் ஃபாஸ்டேக் ஸ்டிக்கரில் சில பிரச்னைகள் எழும் வாய்ப்புள்ளதை உங்களுக்கு யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள். அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை வாங்குவது கடினமாக இருந்தாலும் ஒட்டுவது மிக மிக எளிதான விஷயம்தான். இதில் கம்ப சூத்திரம் எதுவும் இல்லை. ஆனால், சில விஷயங்களை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டால் சில பிரச்னைகளை தவிர்த்துக் கொள்ளலாம்.
ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை பேடிஎம் அல்லது வங்கி மூலமாக வாங்கும்போது வீட்டிற்கு டெலிவிரி கொடுக்கப்படும். அப்போது, அந்த கவர் பிடிக்கப்பட்டுள்ளதா அல்லது ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் சேதமில்லாமல் வந்துள்ளதாக என்பதை உடனடியாக பார்த்துவிடுங்கள்.
மேலும், ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் கவரையும் மிக கவனமாக பிரிக்கவும். ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை வெளியில் எடுத்தவுடன், அது கசங்காமல் அல்லது சேதமடையாமல் இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களது வங்கி கொடுத்திருக்கும் ஆன்லைன் பக்கம் மூலமாக செயல்படும் நிலையில் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை காரின் முன்புற விண்ட்ஷீல்டு கண்ணாடியின் உட்புறமாக ஒட்ட வேண்டும். அதாவது, உட்புறத்தில் இருக்கும் ரியர் வியூ மிரருக்கு பின்புறத்தில் விண்ட்ஷீல்டில் ஒட்ட வேண்டும்.
மேலும், ஸ்டிக்கரை கோந்து உள்ள பகுதியை மூடியிருக்கும் கவரை மெதுவாக பிரித்து எடுக்கவும். ஏனெனில், அந்த ஸ்டிக்கரில் பொறிக்கப்பட்டு இருக்கும் குறியீடு சேதமடையக்கூடாது. சில வேளை, பிரித்து ஒட்டும்போது அந்த குறியீடு முற்றிலும் சிதைந்துவிடும். இது ஃபாஸ்டேக் வாங்கும் நிறுவனத்தின் வழிகாட்டு முறைகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கும். ஆனால், பலர் இதனை பொருட்படுத்தாமல் செய்வதால் சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும்.
அதேபோன்று, ஒட்டுவதற்கு முன்னதாக விண்ட்ஷீல்டு கண்ணாடியை ஃபைபர் க்ளாத் கொண்டு நன்கு துடைத்துவிடுங்கள். ஸ்பிரே எதுவும் பயன்படுத்தினால் நன்றாக உலர்ந்த பின்னரே ஒட்டுங்கள். ஈரப்பதமாக இருக்கும்போது ஒட்டுவதை தவிர்த்து விடுங்கள்.
மேலும், ஸ்டிக்கரை ஒட்டும்போது மடங்காமல் சரியான கோணத்தில் நேராக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு ஒட்டுங்கள். ஒட்டிய பின்னர் சற்றே சாய்வாக இருக்கிறது என்று கருதி, அதனை திரும்ப பிரித்து எடுத்து ஒட்ட முற்பட வேண்டாம். அதில் உள்ள குறியீடு எழுத்துக்கள் சேதமடைந்துவிடும்.
எனவே, ஒட்டிய பின்னர் விட்டு விடுங்கள். அதனை எடுத்து மீண்டும் ஒட்டுவதற்கு முயன்றால் கதை கந்தல் ஆகிவிடும். இதுபோன்று சிறிய சேதம் ஏற்பட்டாலும், சுங்கச் சாவடியில் உங்களது ஃபாஸ்டேக் வேலை செய்யாது. செயலிழந்ததாகவே காட்டும்.
சரி, ஃபாஸ்டேக் கூரியரில் வரும்போது சேதமடைந்துவிட்டது என்றால், அதுகுறித்த சம்பந்தப்பட்ட வங்கி அல்லது வாலட் நிறுவனத்திடம் உடனடியாக உங்களது குறியீட்டு எண்ணை வைத்தோ அல்லது வாலட் மூலமாகவே புகார் தெரிவிக்கலாம்.
ஒருவேளை, நீங்கள் ஒட்டும்போது சேதமடைந்துவிட்டால், ஒன்றும் செய்ய இயலாது. அந்த ஸ்டிக்கர் டோல்கேட்டுகளில் வேலை செய்யாது. எனவே, நீங்கள் புதிதாக ஆர்டர் செய்தே வாங்க முடியும். மாற்று ஸ்டிக்கர் வழங்குவதற்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும். ஏற்கனவே உள்ள உங்களது கணக்குடன் இந்த மாற்று ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் இணைக்கப்பட்டு இருக்கும் என்பதால் பிரச்னையில்லை.
ஏற்கனவே ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை எடுத்துவிட்டு முழுமையாக சுத்தம் செய்து உலர விட்ட பின்னர், அந்த இடத்தில் புதிய ஸ்டிக்கரை ஒட்டுங்கள். இப்போதும் நீங்கள் கவனமாக மேற்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியமாக இருக்கும்.