இந்தியாவிற்கு டெஸ்லா வருவது உறுதி...! என்ன செய்யபோகிறது இந்திய நிறுவனங்கள்
மத்திய அரசு விரைவில் இந்தியாவில் உள்ள வாகனங்களை எல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் எல்லா வகையான எலெக்ட்ரிக் வாகனங்களையு
மத்திய அரசு விரைவில் இந்தியாவில் உள்ள வாகனங்களை எல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறது. அதற்காக வாகன தயாரிப்பாளர்களிடம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க அறிவுறுத்தி வருகிறது.

அதே போல எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியங்களும் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் டிரைவரே இல்லாமல் தானிங்கியில் இயங்கும் எலெக்ட்ரிக் கார்களை வெற்றிகரமான இயங்கி வருகின்றனர்.

சமீபத்தில் டெஸ்லா கார்கள் தான் அதிகஅளவில் இயக்கப்பட்டு வந்தாலும் மற்ற பெரிய நிறுவனங்களும் தானியங்கி கார்களை இயக்க தயாராகி வருகின்றனர். தற்போது அந்நிறுவனங்கள் எலெட்ரிக் மற்றம் ஹெபிரிட் கார்களை தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் எல்லாவகையான எலெக்ட்ரிக் வாகனங்களையும் இந்தியாவிற்குள் கொண்டு வரும் நோக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களை இறங்குமததி செய்வதற்கான நடைமுறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது.

அரசின் இந்த முயற்சியால் டெஸ்லா, மெர்சிடிஸ், பிஎம்டபிள்யது, ஆடி, டொயோட்டா, கவாஸகி, டிரையம்ப், ஆகிய நிறுவனங்களின் இந்தியாவில் விற்பனை செய்யப்படாத சில வாகனங்கள் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் என தெரிகிறது.

தற்போது ரூ 27 லட்சத்திற்கும் குறைவாகன விலையில் உள்ள வாகனங்களை இந்தியாவில் இறக்குமதி வரியில்லாமல் கொண்டு வர முடியும். ஆனால் ரூ 27 லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்களை இனி ஆண்டிற்கு 2500 வாகனங்கள் வரை இறக்குமதி வரியில்லாமல் கொண்டு வர அரசு ஆலோசித்து வரகிறது.

இதன் மூலம் டெஸ்லா மாடல் எஸ், மாடல் எக்ஸ், டொயோட்டா நிறுவனத்தின் அல்ஃபார்டு, மெர்சிடஸ் நிறுவனத்தின் வி கிளாஸ் ஆகிய கார்கள் விரைவில் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார்கள் எல்லாம் இந்தியார்கள் அதிகளவில் எதிர்பார்க்கப்படும் கார்கள்.

இவ்வாறு இறக்குமதி செய்யபடும் வாகனங்களுக்கு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் இறக்குமதி செய்யப்படும் கார்கள் வலது புற ஸ்டியரிங்கை கொண்டிருக்க வேண்டும். மேலும் ஐரோப்பா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் உள்ள ஸ்டாண்டர்டை பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இந்த ஸ்கீம் வழியாக ஊனமுற்றவர்கள், வயதானவர்கள் ஓட்டும்படியான வாகனங்கள் வெளிநாட்டில் உள்ளன. அந்த விதமான கார்களை இறக்குமதி செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வெளிநாட்டில் இருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களுக்கான வரியை குறைக்கவும் அரசு ஆலோசித்து வருவதாகவும். இதனால் இந்தியாவில் ஏற்கனவே கார் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் கார் நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

டெஸ்லா கார் நிறுவனத்தின் பார்த்து உலகில் உள்ள மற்ற கார் நிறுவனங்களே அஞ்சி வரும் நிலையில் இந்தியாவில் அந்த கார் விற்பனையாகவில்லை என்று என்று கார் தயாரிப்பு நிறுவனங்கள் நிம்மதியில் இருந்தனர். தற்போது அவர்களின் துாக்கத்தை கெடுக்குவகையில் இந்த செய்தி அமைந்துள்ளது.

இதையடுத்து தாங்களும் தானியங்கி கார்களை தயாரித்தால் தான் இந்தியாவில் தங்கள் மார்க்கெட்டை தக்க வைக்க முடியும் என்ற எண்ணத்திற்கு வந்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
- மஹிந்திரா மோஜோ பைக்கில் புதிய இரட்டை வண்ணக் கலவை அறிமுகம்!
- சீனாவா? இந்தியாவா? ஒரு கை பாத்துருவோம்.. எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் களமிறங்கிய இஸ்ரோ தமிழர்!
- டிரம்பை விட கிம் கார் தான் விலை உயர்ந்ததாம்.! அப்படி அந்த காரில் என்ன இருக்கிறது?
- ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி! கனவை நிறைவேற்ற இதுவே சரியான நேரம்!
- அட இந்த காரின் பெயரை இப்படி தான் சொல்லனுமா? இது தெரியாம போச்சே இத்தனை நாளா...


Click it and Unblock the Notifications