2020 முதல் பிஎஸ் 4 வாகனங்களுக்கு தடை; அரசு கோர்ட்டில் உறுதி
2020ம் ஆண்டு முதல் பிஎஸ் 6 தரத்தை ஈடு செய்யாத வாகனங்கள் தயாரிக்கவோ விற்பனை செய்யவோ தடை விதிக்கப்படும் என அரசு கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
2020ம் ஆண்டு முதல் பிஎஸ் 6 தரத்தை ஈடு செய்யாத வாகனங்கள் தயாரிக்கவோ விற்பனை செய்யவோ தடை விதிக்கப்படும் என அரசு கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள மாசுவை கட்டுப்படுத்த அரசு தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வப்போது புகை உமிழ்வு தரத்தை நிர்ணயம் செய்யும் இவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் தரம் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு உயர்த்தப்பட்டு கொண்டே இருக்கும். குறிப்பாக இந்தியாவில் பாரத் ஸ்டேஜ் 4 என்ற தரம் தற்போது நடைமுறையில் உள்ளது.

டில்லி உச்ச நீதிமன்றத்தில் காற்று மாசு தொடர்பான வழக்கு ஒன்றில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து கோர்ட் கேள்வி எழுப்பியிருந்தது. அதிற்கு பெட்ரோலியம் துறை அமைச்சகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது.

அதில் வரும் 2020ம் ஆண்டு ஏப்1ம் தேதி முதல் பிஎஸ்6 தரம் இந்தியாவில் கடை பிடிக்கப்படும் அதற்காக தற்போது ரூ28,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பிஎஸ் 6 ரக பெட்ரோல், டீசல் எரிபொருள் தயாரிக்கப்படும்.

இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சொசைட்டி 2020 மார்ச் மாதத்துடன் பிஎஸ் 6க்கு குறைவான தர தயாரிப்பை நிறுவத்துவதாகவும் ஆனால் அதுவரை தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு 2020 ஜூன் 30 வரை பதிவு செய்ய கால அவகாசம்வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இது குறித்த பரிசீலனை நடந்து வருகிறது.

அதே நேரத்தில் பிஎஸ் 6 தரத்தில் தயாரிக்கப்பட்ட பெட்ரோல் பிஎஸ் 4 தரத்தில் தயாரிக்கப்பட்ட வாகனத்தில் பயன்படுத்தப்படும் போது தற்போது அந்த வாகனம் வெளியிடும் புகையை விட குறைவான புகையையே வெளியிடடும் அதனால் காற்று மாசுபடுவது வெகுவாக குறையும்.

மேலும் இந்தியஆட்டோமொபைல் தயாரிப்புகள் சொசைட்டி கோரும் கால அவசாகம் வழங்க முடியாது. ஏற்கனவே தேவையான கால அவகாசம் இருப்பதால் அதற்கும் நிறுவனங்கள் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கு பதில் அளித்த நீதிபதி ஒவ்வொரு முறை பிஎஸ் தொடர்பான விவகாரம் வரும் போது ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் கால அவகாசம் கோருகின்றனர்.மேனாம் டாடா மோட்டார்ஸ், மாருதிசுஸூகி, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் பிஎஸ் 6 வாகனத்தை தயாரிக்க தயாராகிவிட்டனர். பிஎம்டபிள்யூ நிறுவனம் வாகனத்தை தயாரித்தே விட்டது.

இதே போல்தான் எலெக்ட்ரிக் வாகனம் குறித்த ஒரு வழக்கிலும் எலெக்ட்ரிக் வானகங்களை தயாரித்தால் விற்பனையாகாது என அப்பெஆழுது தெரிவித்தனர். இப்பொழுது எலெக்டரிக் கார்கள் தயாரிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது. டில்லியில் மட்டும் சுமார் 10 ஆயிரம் எலெக்டரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. " என கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
- பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இனி தனித்தனி கலர் ஸ்டிக்கர்கள் ஓட்ட வேண்டும்
- காரில் மது அருந்தினால் கைது.. 'நீ முதல்ல ஒயின்ஷாப்ப மூடுயா' என பிஜிலி ரமேஷ் ஸ்டைலில் பேச முடியாது..
- மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்பை படங்கள்!
- வாகனம் வைத்திருக்க இப்படியும் கெடுபிடி போடுறாங்க.. விதிமீறிய 100 வாகனங்கள் கொத்தாக பறிமுதல்..
- ரூ 5 லட்சத்திற்கு இவ்வளவு கார்கள் இருக்கிறதா?


Click it and Unblock the Notifications








